ஐபிஎல் கிரிக்கெட் மினி ஏலம்
ஐபிஎல் கிரிக்கெட் மினி ஏலம் 
விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் மினி ஏலம்: டிசம்பர் 23-ல் கேரளாவில் நடக்கிறது!

கல்கி டெஸ்க்

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் கொன்டாடப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அடுத்த சீசன்,  2023 ஏப்ரலில் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் அடுத்த சீசன் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களுக்கான மினி ஏலம், கேரளாவில் கொச்சியில் டிசம்பர் 23-ம் தேதி  நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஐபிஎல் சீசனில் பங்கு பெறும் 10 அணிகளும், தாம் தக்க வைத்துகொள்ள விரும்பும் தங்கள் அணி வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சென்ற ஆண்டிற்கான ஏலத்தொகை ரூ.90 கோடியாக இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ.5 கோடி அதிகரித்துள்ளது. 

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

‘லுக்கிசம்’ - கொரியன் வெப்டூன் குழந்தைகளுக்குச் சொல்லும் மெசேஜ் என்ன?

SCROLL FOR NEXT