sea vegetables https://www.fau.edu
ஆரோக்கியம்

முழுமையான ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற பின்பற்ற வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

நாம் நம் உடல் நலனில் அக்கறை செலுத்தி நீண்ட நாட்கள் ஆரோக்கியமுடன் வாழ விரும்பினால் முதலில் நம் கண் முன் தோன்றுவது ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளாகவே இருக்கும். இதற்கும் மேலாக நம் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் 3 வித மாற்றங்களைப் பின்பற்றினாலே நாம் முழுமையான ஆரோக்கியம் பெற்று நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். அந்த 3 மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நம் உணவில் இதுவரை சேராத, வழக்கத்திற்கு மாறான, அதிக ஊட்டச் சத்துக்கள் மற்றும் மைக்ரோ ஆர்கானிசம்கள் நிறைந்து நன்மைகள் தரக்கூடிய  உணவுகள் பல உள்ளன. உதாரணத்திற்கு, ஸீ (Sea) வெஜிடபிள்களை எடுத்துக் கொண்டால் அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆசியா மற்றும் கடலோரப் பகுதி மக்களின் பாரம்பரிய உணவாக இருந்து வருகிறது. அவற்றில், தரையில் வளரும் தாவரங்களில் இருப்பதை விட அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கொழுப்பு அமிலங்கள், நார்ச் சத்து, அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இதன் காரணம் அவை வளரும் தனித்துவமான சூழ்நிலையும் அவற்றின் பயோலாஜிகல் அடாப்டேஷன் குணமும் ஆகும்.

2. உணவை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவற்றை எவ்வாறு உண்கிறோம் என்பதும் மிக முக்கியம். மைண்ட்ஃபுல் ஈட்டிங் (Mindful Eating) முறையைப் பின்பற்றி நம் மனதுக்கும் உணவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான செரிமானம் மற்றும் எடைப் பராமரிப்பு போன்றவை சாத்தியமாகும். மேலும், இம்முறையினால் பசி மற்றும் வயிறு நிரம்பிய உணர்வறியவும் கட்டுப்பாடின்றி உண்பதைத் தவிர்க்கவும் முடியும்.

3. உணவு உட்கொள்ள நாம் பயன்படுத்தும் பிளேட்டின் அளவு சிறியதாயிருந்தால் அதில் வைக்கப்படும் உணவு அதிகமாகத் தெரியும். இதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் சமநிலை கொண்ட சரிவிகித உணவை உட்கொண்டு ஆரோக்கியத்தை நிலை நிறுத்தவும் முடியும்.

கரையக்கூடிய நார்ச்சத்து, மக்னீசியம், வைட்டமின் C, B12 உள்ளிட்ட பலவகை சத்துக்கள் அடங்கிய நோரி, ஸ்பைருலினா, க்ளோரெல்லா போன்ற கடல் காய்களை அளவாக மைண்ட்ஃபுல் முறையில் உட்கொண்டு இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் வராமல் பல்லாண்டு காலம் வாழ்வோம்!

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT