இரத்த அழுத்த பரிசோதனை 
ஆரோக்கியம்

உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் 6 வகை மூலிகை மற்றும் ஸ்நாக்ஸ்!

ஜெயகாந்தி மகாதேவன்

‘சைலன்ட் கில்லர்’ எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உணவில் உப்பையும் எண்ணையையும் குறைத்தால் மட்டும் போதாது, உடற்பயிற்சி, ஓய்வு போன்ற மேலும் சில பழக்கங்களைப் பின்பற்றுவதும் அவசியம். இதற்கும் மேலாக கீழே கூறப்படும் 6 வகை மூலிகை மற்றும் 6 வகை ஸ்நாக்ஸ்ஸை உட்கொள்வதும் சிறந்த பலனளிக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. துளசி (Basil): இதன் இலைகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் சளி, ஃபுளு ஜுரம், ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்களைக் குணமாக்கவும் உதவும்.

2. நெல்லிக்காய்: இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். அதன் மூலம் இரத்த அழுத்தம் நார்மல் ஆகும்.

3. பூண்டு: பூண்டு கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இரத்த நாளங்களை தளர்வுறச் செய்து இரத்த அழுத்தம் சமநிலைப் பெற உதவும். இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் தடுக்கப்படும்.

4. பட்டை: பட்டை உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான மூலிகை. இதை ஆயுர்வேத மருத்துவத்தில் இதய நோய்களைக் குணப்படுத்தவும், உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் தயாரிக்கப்படும் மருந்துகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

5. அஸ்வகந்தா: இதுவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் ஆயுர்வேத  மருந்துகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும்  ஓர் அரிய மூலிகையாகும்.

6. செலரி: ஆன்டி ஹைபர்டென்ஸிவ் குணம் கொண்ட மூலிகை செலரி. இது உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும்.

உயர் இரத்த அழுத்தம் என்ற உடல்நலக் கோளாறினால் சிரமப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் உட்கொள்ள வேண்டிய 6 வகை ஸ்நாக்ஸ்:

1. ராஜ்மா சாலட், 2. சன்னா சாலட்,  3. சோள ரொட்டி, (Jowar Roti), 4. ஓட்ஸ் வகை உணவுகள், 5. வெள்ளரி ராய்த்தா 6. மூங் தால் சில்லா.

மேலே குறிப்பிட்ட 6 வகை ஸ்நாக்ஸ்களை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் சமநிலைப்படும். இத்தோடு மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் கலந்து ஆலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாள் தவறாமல் எடுத்துக்கொள்வதும், இரத்த அழுத்த அளவை பரிசோதித்துக் கொள்வதும் அவசியம்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT