why you should avoid greens during monsoons? 
ஆரோக்கியம்

மழைக்காலங்களில் ஏன் கீரைகளை தவிர்க்க வேண்டும் தெரியுமா? 

கிரி கணபதி

மழைக்காலம் என்பது நமக்கு மகிழ்ச்சியை தரும் காலமாக இருந்தாலும், சில உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக, கீரை சாப்பிடும் போது நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என பரவலாக சொல்லப்படுகிறது. ஏன் இவ்வாறு சொல்லப்படுகிறது? அதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன? என்பதை இந்தப் பதிவில் தெளிவாகப் பார்க்கலாம். 

மழைக்காலங்களில் கீரைகளை ஏன் தவிர்க்க வேண்டும்? 

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், கீரையில் பாக்டீரியா மற்றும் புஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை உட்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.‌ 

விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க பூச்சி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதால், கீரையில் அவற்றின் அளவு அதிகமாக இருக்கலாம். இவை நீண்ட காலமாக உடலில் தேங்கி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

மழைநீர் மூலம் மண் மற்றும் நீரில், கன உலோகங்கள் கலக்க வாய்ப்புள்ளது. இவை கீரையை பாதித்து நமது உடலில் நுழைந்தால், நரம்பு மண்டலம் மற்றும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

அறிவியல் காரணங்கள்: 

பல்வேறு ஆய்வுகள் மழைக்காலங்களில் கீரை சாப்பிடுவதன் பாதுகாப்பு குறித்து முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன. சில ஆய்வுகள் கீரை சாப்பிடுவது பாதுகாப்பானது என்று கூறும் அதே வேளையில், மற்ற சில ஆய்வுகள் சில வகையான கீரைகளில் பாக்டீரியா மற்றும் புஞ்சை தொற்று இருப்பதைக் கண்டறிந்துள்ளன. இருப்பினும் மழைக்காலங்களில் கீரையை நன்கு சுத்தம் செய்து சமைத்து உண்பது பாதுகாப்பானது என்றும் சொல்லப்படுகிறது. கீரையை வாங்கும்போது உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கீரை வாங்குவது நல்லது. ஏனெனில், இவ்வாறு வாங்கும் கீரையில் பூச்சி மருந்துகளின் அளவு குறைவாகவே இருக்கும். 

மழைக்காலங்களில் கீரை சாப்பிடலாமா? வேண்டாமா? என்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கீரையின் வகை, அதை வளர்த்த முறை, சுத்தம் செய்யும் விதம் மற்றும் சமைக்கும் முறை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து இதன் பாதுகாப்பு மாறுபடும் என்பதால், மழைக்காலங்களில் கீரை சாப்பிடுவது உங்களது சொந்த விருப்பத்தின் பெயரில் இருக்க வேண்டும்.  

ஒருவேளை நீங்கள் மழைக்காலத்தில் கீரையை சாப்பிடுகிறீர்கள் என்றால், அவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து அழுக்குகளை நீக்க வேண்டும். கீரையை நன்கு சமைத்து சாப்பிடும் போது, பாக்டீரியா மற்றும் புஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் குறையும். அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாத கீரையாக கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். கீரை சாப்பிட்ட பிறகு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT