

இந்திய குடியுரிமை பெற்றவர்களின் உலகளாவிய வருமானம் இந்திய வரி சட்டங்களுக்கு உட்பட்டது. வெளிநாட்டு பங்குகளில் இருந்து கிடைக்கும் மூலதன ஆதாயம், ஈவுத்தொகை இரண்டுக்கும் தனித்தனி வரி விதிகள் உள்ளன. 24 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் பங்குகளுக்கு நீண்டகால ஆதாயமாக 12.5% வரி, குறுகியகால ஆதாயம் தனிப்பட்ட வரி விகிதத்தின்படி. அமெரிக்க ஈவுத்தொகைக்கு DTAA மூலம் வரி வரவு கோரலாம்.
சர்வதேச முதலீடு என்பது பெரிய முதலீட்டாளர்கள் அல்லது நிதித்துறை வல்லுனர்களுக்கு மட்டுமே உரியதல்ல. இந்திய முதலீட்டாளர்கள் முன்பை விட எளிதாக உலகளாவிய பங்குகள், சர்வதேச ஈடிஎஃப்கள் மற்றும் வெளிநாட்டு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய முடியும்.
இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள், பொருந்தக்கூடிய வருடாந்திர வரம்பு மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, பொதுவாக தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வழிகள் மூலம் வெளிநாட்டு பங்குகளில் முதலீடு செய்யலாம்.
இந்தியர்கள் வெளிநாட்டு பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) மூலம் ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சமாக $250,000 அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யலாம்.
முதலீட்டு வழிமுறைகள் மற்றும் வரம்புகள்:
இந்தியர்கள் உலகளாவிய சந்தைகளில் முதலீடு செய்ய சர்வதேச பரஸ்பர நிதிகள், தாராளமயமாக்கப்பட்ட remittance திட்டம் (LRS) மற்றும் கிப்ட் சிட்டி (GIFT City) போன்ற மூன்று முக்கிய வழிகள் உள்ளன. இந்த முறைகள் மூலம் வெளிநாட்டு நிறுவன பங்குகள் மற்றும் குறியீடுகளில் எளிதாக முதலீடு செய்யமுடியும்.
நேரடி முதலீடு (LRS):
இந்திய ரிசர்வ் வங்கியின் LRS விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் தனிநபர் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு $250,000 அமெரிக்க டாலர்கள் வரை வெளிநாட்டுப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப் படுகிறது. இதற்கு சர்வதேச வர்த்தக அனுமதி வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அல்லது வெளிநாட்டு தரகு தளங்கள் (Brokerage Platforms) தேவையாகும். இதற்கு பான்(PAN) கார்டு கட்டாயம்.
சர்வதேச பரஸ்பர நிதிகள் (International Mutual Funds):
இந்தியாவில் உள்ள சர்வதேச ஃபண்டுகள் அல்லது ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (Fund of Funds) மூலம் முதலீடு செய்யும் பொழுது, செபி (SEBI) நிர்ணயித்த ஒட்டுமொத்த நாட்டு வரம்புகளுக்கு உட்பட்டு முதலீடுகள் அனுமதிக்கப் படுகின்றன.
இந்தியாவில் உள்ள ஃபண்ட் நிறுவனங்கள் மூலமாக நாஸ்டாக் 100 (NASDAQ 100) அல்லது எஸ் & பி 500 (S&P 500) போன்ற குறியீடுகளில் முதலீடு செய்வது எளிதான வழியாகும். எனினும் ஆர்பிஐ விதித்துள்ள உச்சவரம்பு காரணமாக சில சமயங்களில் புதிய முதலீடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.
GIFT சிட்டி (GIFT City Route):
இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேர்ப்பு மையத்தின் வாயிலாக உள்நாட்டு ஒழுங்குமுறை வரம்புகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு சந்தை பங்குகளை வாங்கலாம்.
டிசிஎஸ்(TCS) மற்றும் வரி விதிகள்:
வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களுக்குத் தற்போதைய விதிமுறைப்படி வரி பிடித்தம் (TCS) மற்றும் மூலதன ஆதாய வரி பொருந்தும்.
உலகளாவிய சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் இயல்பு என்பதால் நீண்டகால முதலீட்டுத் திட்டத்தை கடைபிடிப்பது நல்லது.
இந்தியாவில் வெளிநாட்டு பங்குகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
இந்திய குடியுரிமை பெற்றவராக இருந்தால், உங்களின் உலகளாவிய வருமானத்திற்கு இந்தியாவில் வரி விதிக்கப்படும். இதில் வெளிநாட்டுப் பங்குகள், வெளிநாட்டு ஈடிஎஃப்கள், வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் பிற வெளிநாட்டுச் சொத்துக் களிலிருந்து கிடைக்கும் வருமானம் அடங்கும்.
வெளிநாட்டுப் பங்குகளைப் பொறுத்தவரை பொதுவாக இரண்டு வகையான வருமானங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
*மூலதன ஆதாயம்:
ஒரு வெளிநாட்டுப் பங்கை, அதை வாங்கிய விலையை விட அதிக விலைக்கு விற்கும்போது கிடைக்கும் லாபம்.
*பங்கு ஈவுத்தொகை வருமானம்:
ஒரு வெளிநாட்டு நிறுவனம் தனது லாபத்தின் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு விநியோகிக்கும்போது பெறப்படும் வருமானம்.
நேரடி வெளிநாட்டு நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, மூலதன ஆதாயங்களுக்கான வரி விதிப்பு முறையானது, பங்குகளை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து அமைகிறது.
ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்களாகக் கருதப்பட்டு, 12.5% மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் வரி விதிக்கப்படும்.
24 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக வைத்திருக் கப்படும் பங்குகள், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் குறுகிய கால மூலதன ஆதாயங்களாகக் கருதப்பட்டு வருமானத்துடன் சேர்க்கப்படும். மேலும் உங்கள் தனிப்பட்ட வரி விகிதத்தின்படி அவற்றுக்கு வரி விதிக்கப்படும்.
அமெரிக்க பங்குகளில் இருந்து கிடைக்கும் ஈவுத்தொகைக்கு இந்தியாவில் வரி விதிக்கப்படுமா?
அமெரிக்கப் பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகைக்கு இந்தியாவில் வரி விதிக்கப்படும். மேலும் அமெரிக்காவில் அவற்றுக்கு வரிப் பிடித்தம் விதிக்கப்படலாம். இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்த (DTAA) விதிகள் மற்றும் தாக்கல் தேவைகளுக்கு உட்பட்டு, முதலீட்டாளர்கள் இந்தியாவில் வெளிநாட்டு வரி வரவைக் கோரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: