

மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP) திட்டம் நவம்பர் 2008 இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகளை 'ஜன் ஔஷதி கேந்திரா' (மக்கள் மருந்தகம்) மூலமாக வழங்குகிறது. பிராண்டட் மருந்துகளின் விலையைவிட 50% முதல் 90% வரை குறைந்த விலையில் இங்கு மருந்துகள் கிடைக்கின்றன. இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர மருத்துவச் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது.
1) இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
*மருந்துகளின் விலை மற்றும் தரம்:
மருந்தக நிறுவனங்களின் (branded) விலையுயர்ந்த மருந்துகளுக்கு இணையான தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் GMP தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து மட்டுமே மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மருந்துகள் அனைத்துமே அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் தரக்கட்டுப்பாடு சோதனை செய்யப்பட்டவை.
*கிடைக்கும் பொருட்கள்:
மார்ச் 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் 19,000க்கும் மேற்பட்ட கேந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் தயாரிப்புப் பட்டியலில் 2,100 மருந்துகளும் 300 அறுவை சிகிச்சை உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. மருந்துகளுடன் சேர்த்து உயர்தர அறுவை சிகிச்சை உபகரணங்கள், சிரிஞ்சுகள், பேண்டேஜ்கள் மற்றும் மருத்துவ நுகர் பொருட்களும் மலிவு விலையில் வழங்கப்படுகின்றன.
பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மிகக் குறைந்த விலையில் (ஒரு ரூபாய் போன்ற மானிய விலையில்) மட்கும் தன்மையுடைய (Oxo-biodegradable) சானிட்டரி நாப்கின்கள் ஜன் ஔஷதி கேந்திராக்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த மையங்களில் மருந்துகளை வாங்குவதற்கு எவ்வித சிறப்பு தகுதிச் சான்றிதழ்களும் தேவையில்லை. மருத்துவரின் செல்லுபடியாகும் மருந்துச் சீட்டை காண்பித்து யார் வேண்டுமானாலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
2) சொந்தமாக கடை திறக்கலாம்:
இந்தத் திட்டம் மக்களுக்கு மருந்துகளை வழங்குவது மட்டுமின்றி புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. அரசு இத்திட்டத்தின் கீழ் புதிய மருந்தகம் அமைக்கத் தேவையான நிதி உதவி மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குகிறது. தனிநபர், வேலையில்லாத பட்டதாரிகள், மருத்துவர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
மருந்தாளுநர்கள் (Pharmacists), அரசுப் பதிவு பெற்ற மருத்துவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் சுயதொழில் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தின் நிதி உதவி மற்றும் ஊக்கத் தொகையுடன் இந்த "மக்கள் மருந்தகத்தை" சொந்தமாகத் தொடங்க முடியும்.
3) இத்திட்டத்தின் நன்மைகள்:
சாமானியர்களுக்கு தரமான மருந்துகளை சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் வழங்கி மருத்துவ செலவை கணிசமாக குறைக்கிறது.
அனைத்து வகையான ஜெனரிக் மருந்துகளும் கிடைக்கின்றன.
மருந்துகளுடன் சேர்த்து தரமான சுகாதாரப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
4) தொழில் முனைவோருக்கான நன்மைகள்:
புதிய "ஜன் ஔஷாதி கேந்திரா" மருந்தகம் தொடங்குபவர்களுக்கு அரசு ரூ.5 லட்சம் வரை நிதி உதவி வழங்குகிறது.
பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கடைகள் அமைக்க நிதி உதவி வழங்கப்படுகிறது.
மருந்து விற்பனை செய்யும் ஆபரேட்டர்களுக்கு ஒவ்வொரு மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) 20% வரை லாப வரம்பு மற்றும் விற்பனையின் அடிப்படையில் மாதாந்திர ஊக்கத்தொகையும் கிடைக்கிறது.
இந்த வழிகாட்டியின் மூலம் உங்கள் குடும்பத்தின் மாதாந்திர மருத்துவச் செலவுகளை 90% வரை உடனடியாக மிச்சப்படுத்துவதோடு, மத்திய அரசின் நிதியுதவியுடன் நீங்களே ஒரு வெற்றிகரமான மருந்துக்கடை தொழில்முனைவோராக மாறுவதற்கான எளிய வழிமுறைகளையும் முழுமையாக அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: