30 வயசுக்கு மேல முதலீடு செஞ்சா இவ்ளோ லாபமா.. உங்களுக்கு யாரும் சொல்லாத உண்மை!

இருபதுகளில் சேமிக்கவில்லை என்று கவலைப்படாமல், முப்பது மற்றும் நாற்பது வயதுகளில் சரியான முதலீட்டு உத்தி மூலம் எப்படி எளிதாகக் கோடீஸ்வரராக மாறுவது என்பதைப் பற்றி இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
Wealth building in 30s முதலீட்டு உத்தி
Wealth building in 30s முதலீட்டு உத்திAI Image
Updated on

"இருபது வயதிலேயே சேமிக்கத் தொடங்கினால் நாற்பது வயதில் கோடீஸ்வரன் ஆகலாம்" என்ற தாரக மந்திரத்தை நாம் பலமுறை சமூக வலைத்தளங்களில் கேட்டிருப்போம். இதைக் கேட்கும்போதெல்லாம், "ஐயோ! நம்முடைய இருபதுகளை நாம் வீணடித்து விட்டோமே! இனிமேல் நம்மால் வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும்?" என்ற ஒருவிதமான குற்ற உணர்வு பலருக்கும் தோன்றும்.

உண்மையில் முப்பது மற்றும் நாற்பது வயதுகளில் இருப்பவர்கள் தான் சேமிப்பைப் பற்றியும் முதலீடுகள் பற்றியும் அதிகம் கவலைப்படுகிறார்கள். ஆனால் நிதி நிபுணர்கள் வேறு ஒரு உண்மையைச் சொல்கிறார்கள். நீங்கள் இருபதுகளில் பணத்தைச் சேமிக்கவில்லை என்பதற்காக எவ்விதமான குற்ற உணர்ச்சியும் கொள்ளத் தேவையில்லை. முப்பது வயதிற்குப் பிறகு முதலீடு செய்யத் தொடங்கினால் கூட உங்களால் ஒரு பெரிய செல்வத்தை நிச்சயமாக உருவாக்க முடியும். 

இருபதுகளில் ஏன் சேமிக்க முடிவதில்லை!

இருபது வயது என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும் காலகட்டமாகும். படிப்பு முடித்து வேலை தேடுவது, சொந்தமாக சம்பாதிப்பது, நண்பர்களுடன் சுற்றுவது என அந்த வயது முழுவதும் வாழ்க்கை ஒரு ஓட்டமாகவே இருக்கும். அந்த நேரத்தில் வாடகை, கல்விக்கடன் மற்றும் அன்றாடச் செலவுகளுக்கே நாம் சம்பாதிக்கும் பணம் சரியாகப் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
உலகின் விலை உயர்ந்த மூலிகை எங்கு விளைகிறது தெரியுமா?
Wealth building in 30s முதலீட்டு உத்தி

இதனால் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரால் மாதத்திற்கு ஒரு சிறிய தொகையை மட்டுமே சேமிக்க முடியும். அந்தச் சிறிய சேமிப்பைக் கொண்டு எதிர்காலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரன் ஆவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே இருபதுகளில் பணத்தைச் சேமிக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்படுவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. அது வாழ்க்கையை அனுபவிப்பதற்கான மற்றும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு தயாரிப்புப் பருவம் மட்டுமே.

முப்பதுகளின் மந்திரம்

ஆனால் முப்பது வயதைத் தொடும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல முதிர்ச்சியான மாற்றங்கள் நிகழ்கின்றன. அவனுடைய வருமானம் கணிசமாக உயர்ந்திருக்கும். அதே நேரத்தில் வாடகை மற்றும் இதர செலவுகள் இருபதுகளில் இருந்ததைப் போல அதிகமாகப் பெருகியிருக்காது. இதனால் அவனிடம் சேமிப்பதற்கான உபரிப் பணம் கணிசமாக அதிகரிக்கும். இதுதான் முதலீட்டு உத்தி அமைப்பதற்கான மிகச் சரியான காலகட்டமாகும்.

Wealth building in 30s முதலீட்டு உத்தி
Wealth building in 30s முதலீட்டு உத்திAI Image

இந்த உபரித் தொகையைச் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினால், இருபதுகளில் மாதம் சிறிய தொகையைச் சேமித்தவர்களை விட முப்பதுகளில் பல மடங்கு அதிகத் தொகையை உங்களால் சுலபமாகச் சேமிக்க முடியும். கூட்டு வட்டி இருபதுகளில் தொடங்கியவர்களுக்குச் சற்றுக் கூடுதலாகக் கிடைத்தாலும், நீங்கள் முப்பதுகளில் முதலீடு செய்யும் பெரிய தொகையானது அந்த வித்தியாசத்தை வெகு எளிதாக ஈடுசெய்து உங்களை முன்னணியில் நிறுத்தும்.

வரி விலக்கும் பங்குச்சந்தை முதலீடுகளும்

முப்பது வயதிற்குப் பிறகு உங்கள் வருமானம் உயரும்போது, வரியாகச் செலுத்தும் தொகையையும் நீங்கள் கவனிக்க வேண்டும். உங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை நேராக பி.எஃப் (Provident Fund) அல்லது என்பிஎஸ் (NPS) போன்ற ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரியை நீங்கள் சட்டப்பூர்வமாகப் பெரிய அளவில் மிச்சப்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
அடுத்ததாக ஒரு காதல் படம்! புதுமுக நடிகர்களை களத்தில் இறக்கும் மணிரத்னம்!
Wealth building in 30s முதலீட்டு உத்தி

அடுத்ததாக, நீண்ட காலச் செல்வத்தை உருவாக்க பங்குச்சந்தை அல்லது Mutual Fund-களில் முதலீடு செய்வது மிகவும் அவசியமாகும். உங்களால் முடிந்த ஒரு தொகையை மாதம் தோறும் SIP முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள். இத்தகைய சீரான முதலீட்டு உத்தி உங்களை ஐம்பது வயதிற்குள் ஒரு பெரிய கோடீஸ்வரராக மாற்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது.

எனவே உங்களின் இருபதுகளை வீணடித்து விட்டோமே என்று நினைத்து நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்தில் அனுபவித்து விட்டீர்கள், இப்போது சேமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்றே உங்களின் எதிர்காலத் தேவைகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப ஒரு முறையான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். உங்களின் வருமானத்தை அதிகரித்து, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, சரியான வழியில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம் உங்கள் வசப்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com