உங்களை அதிக பணம் செலவழிக்க வைக்க மால்கள் பயன்படுத்தும் 'மாயாஜால' தந்திரம்!

shopping mall psychology
shopping mall psychology
Updated on

ஷாப்பிங் மால்களுக்குச் செல்லும்போது நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அங்கே கடிகாரங்களோ அல்லது வெளிப்புற உலகத்தைப் பார்ப்பதற்கான ஜன்னல்களோ பெரும்பாலும் இருக்காது. இது தற்செயலாக நடப்பது அல்ல; இதற்குப் பின்னால் ஒரு பெரிய விற்பனை உளவியல் (Consumer Psychology) மற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பு ஒளிந்துள்ளது.

அதற்கான முக்கிய காரணங்கள் இதோ:

நேரத்தை மறக்கடிக்க:

​மால்களில் ஜன்னல்கள் இல்லாததற்கு மிக முக்கிய காரணம், வாடிக்கையாளர்களுக்கு நேர உணர்வை மறக்கடிப்பதுதான். வெளியில் பகலா, இரவா, வெயிலா அல்லது மழையா என்று தெரியாதபோது, மக்கள் நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நிதானமாகப் பொருட்களை வாங்குவார்கள். மால்களுக்குள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கவனச்சிதறலைத் தவிர்க்க:

​வெளியே நடக்கும் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அல்லது இயற்கை காட்சிகள் வாடிக்கையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பலாம். ஜன்னல்கள் இல்லாதபோது, வாடிக்கையாளர் களின் முழுக் கவனமும் பிரகாசமான விளக்குகள், அழகான கடைகளின் முகப்புகள் (Storefronts) மற்றும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ள பொருட்களின் மீதே இருக்கும்.

சூதாட்ட விடுதிகளில் (Casinos) பின்பற்றப்படும் அதே உத்திதான் இது. ஜன்னல்கள் இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கு 'உள் உலகம்' மட்டுமே நிஜமாகத் தோன்றும். பசி, சோர்வு போன்ற உணர்வுகள் கூட ஓரளவுக்கு தள்ளிப்போடப்பட்டு, மனித மூளை தொடர்ந்து புதிய பொருட்களையும் சலுகைகளையும் நோக்கியே சிந்திக்கும்படி தூண்டப்படுகிறது.

மால்களுக்குள் மென்மையான இசை எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இது வாடிக்கையாளர்களை நிதானமாக, நிம்மதியாக நடக்க வைக்கும். வெளியே இருக்கும் வாகனங்களின் சத்தம், ஹாரன் சத்தம் போன்றவை உள்ளே வந்தால் இந்த அமைதியான சூழல் கெட்டுவிடும். மூடிய சுவர்கள் வெளிப்புறச் சத்தத்தைத்தடுத்து, உள்ளே ஒரு தனி உலகத்தை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
நீங்களும் முதலாளி ஆகலாம்! புதிய பிசினஸ் தொடங்க சில கோல்டன் டிப்ஸ்!
shopping mall psychology

இடவசதி மற்றும் பாதுகாப்பு:

​மால்களில் உள்ள சுவர்களில் ஜன்னல்கள் வைத்தால், அந்த இடத்தில் கடைகளின் ரேக்குகளையோ (Shelves) அல்லது விளம்பரப் பலகைகளையோ வைக்க முடியாது. ஜன்னல்கள் இல்லாத சுவர்கள், கடைகள் தங்களின் பொருட்களை அதிகளவில் அடுக்க உதவுகின்றன. மேலும், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தால் பாதுகாப்புப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மூடிய சுவர்களே பாதுகாப்பாகக் கருதப்படுகின்றன.

பொருட்களின் பாதுகாப்பு மற்றும் வெப்பநிலை:

​சூரிய ஒளி நேரடியாகப் பொருட்களின் மீது படும்போது, ஆடைகளின் நிறம் மங்குவதற்கும், சில பொருட்கள் பாழாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஜன்னல்கள் வழியாக வெளியிடும் வெப்பம் உள்ளே வந்தால், ஏர் கண்டிஷனர் (AC) குளிர்ச்சியைப் பராமரிப்பது கடினம்.

சுருக்கமாகச் சொன்னால்:

மால்கள் என்பவை வாடிக்கையாளர்களை வெளிப்புற உலகத்திலிருந்து முற்றிலும் துண்டித்து, அவர்களை ஒரு மாயாஜால ஷாப்பிங் உலகிற்குள் வைத்திருக்கவே ஜன்னல்கள் இல்லாமல் வடிவமைக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தூக்கம் வரவில்லையா? உங்கள் லேப்டாப்பில் இருக்கும் இந்த ஒரு பட்டன் போதும்!
shopping mall psychology
இதையும் படியுங்கள்:
கால்கள் நூறு... வேகம் தாறுமாறு... இந்த பூச்சியை நிரந்தரமா துரத்த இதுதான் சிம்பிள் டெக்னிக்!
shopping mall psychology

தெரிந்துகொள்ள வேண்டியவை: 

நவீன காலத்தில் சில புதிய மால்கள், வாடிக்கையாளர் களுக்கு மூச்சுத்திணறல் போன்ற உணர்வு (Claustrophobia) வராமல் இருக்க, மாலின் மையப்பகுதியில் உள்ள கூரையில் மட்டும் கண்ணாடி அமைத்து (Skylights) இயற்கை வெளிச்சம் உள்ளே வரும்படி வடிவமைக்கின்றன. ஆனால், கடைகள் இருக்கும் பகுதிகளில் இன்னும் ஜன்னல்கள் தவிர்க்கப்பட்டே வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com