“நான் உங்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் பார்த்திபன்” - ரஜினி ஏன் இவ்வாறு சொன்னார் தெரியுமா? 

Rajini Parthiban
Rajini Parthiban
Published on

பார்த்திபன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர் என பன்முகத் திறமை கொண்ட சினிமா நட்சத்திரம். புதுமையான சிந்தனைக்கும், படைப்பாற்றலுக்கும் பெயர் பெற்றவர். அவரது இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான பல படங்கள் வெற்றி வாகை சூடியுள்ளன. குறிப்பாக, பார்த்திபன் மட்டுமே நடித்த ‘ஒத்த செருப்பு’ மற்றும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ ஆகிய படங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கள ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பார்த்திபன் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், நகைச்சுவை நடிகர் வடிவேலு போன்றோருடன் நீண்டகால நட்பு கொண்டவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பார்த்திபன், ரஜினியுடன் தனக்கிருந்த நட்பு மற்றும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். 

“நானும் ரஜினியும் சுமார் 41 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்போம். ரஜினியே என்னை வீட்டிற்கு அழைப்பார். இருவரும் விடிய விடிய பல விஷயங்கள் பேசுவோம். ஒருமுறை, ‘நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணினால் எப்படி இருக்கும்?’ என்று ரஜினி கேட்டார். அப்போது நான் இயக்கிய ‘உள்ளே வெளியே’ திரைப்படத்தை அவருக்கு திரையிட்டுக் காட்டினேன். அதற்கு முன்பு வரை, ரஜினி ஒரு கதையைச் சொல்லி, அதை நான் இயக்க வேண்டும் என்றும், இருவரும் இணைந்து நடிக்கலாம் என்றும் கூறி வந்தார். ஆனால், ‘உள்ளே வெளியே’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு, அவரது எண்ணம் மாறியது. ‘நீங்கள் கேமராவுக்குப் பின்னாடியே இருங்கள். நாம் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம். படம் மிகவும் சிறப்பாக உள்ளது பார்த்திபன். நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை’ என்று கூறிவிட்டார்,” என பார்த்திபன் வெளிப்படையாகக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
ரஜினி 74 - ஒன்றல்ல இரண்டல்ல 50 ஆண்டுகள்; 170 படங்கள்!
Rajini Parthiban

இந்த நிகழ்வு, ரஜினியின் திரை ரசனையையும், பார்த்திபனின் தனித்துவமான திரைப்பட பாணியையும் எடுத்துக்காட்டுகிறது. ரஜினி, ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பவர். அதே நேரத்தில், பார்த்திபன் புதுமையான முயற்சிகளுக்கும், வித்தியாசமான கதைக்களங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். ‘உள்ளே வெளியே’ திரைப்படம் பார்த்திபனின் தனித்துவமான பாணியை வெளிப்படுத்தியதால், ரஜினி இருவரும் இணைந்து நடிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும், இந்த நிகழ்வு அவர்களின் நட்பில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்றும் அவர்கள் நெருங்கிய நண்பர்களாகத் தொடர்கிறார்கள். இந்த சம்பவம், இரண்டு பெரிய கலைஞர்களின் வெவ்வேறு அணுகுமுறைகளையும், ஒருவருக்கொருவர் அவர்கள் கொடுக்கும் மதிப்பையும் உணர்த்துகிறது. மேலும், பார்த்திபனின் படைப்பாற்றலை ரஜினியே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
'நடுகல்' - தமிழ் இலக்கியம் கூறுவது என்ன?
Rajini Parthiban

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இன்றும் திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தற்போது ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வரும் அவர், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com