டிசம்பர் 16: இந்தியாவின் வெற்றி நாள்! பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவான நாள்

இந்தியாவின் வெற்றி நாள்-டிசம்பர் 16
இந்தியாவின் வெற்றி நாள்-டிசம்பர் 16
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

1971 ஆம் ஆண்டில் இந்தியா வங்கதேச முக்தி வாகினியுடன் இணைந்து இந்திய - பாகிஸ்தான் போரில் நிறைவு பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 16 அன்று, வெற்றி நாள் (Victory Day) கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், தற்போதைய வங்காளதேசப் பகுதி கிழக்குப் பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாகிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோ மீட்டர். மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்துப் போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெற வேண்டும் என்றிருந்தது. மேலும், இப்பகுதியில் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் பேசப்படும் வங்காள மொழியேப் பயன்பாட்டிலிருக்கிறது.

இந்நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின் போது, இந்திய இராணுவத்தின் போர் செயல்பாடுகளால் பின்னடைவைச் சந்தித்த பாகிஸ்தான் இராணுவம், தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணடைந்தது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தயப் மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஒன்பது மாதங்கள் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. அலுவல் முறையாக பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானது.

இதையும் படியுங்கள்:
மோமோஸ் இந்தியாவுக்கு வந்த கதையை தெரிந்து கொள்வோமா?
இந்தியாவின் வெற்றி நாள்-டிசம்பர் 16

வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு நாடாளுமன்ற ஜனநாயக நாடாகும். இதன் நாடாளுமன்றம், ‘ஜாதியோ சங்சத்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது.

இந்தியப் படைகளுடன் தனிநாடு கோரிக்கையில் வெற்றியடைந்த வங்காளத் தேசத்தில் டிசம்பர் 16 அன்று, 'வங்காளதேச வெற்றி நாள்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அங்கு தேசிய விடுமுறை நாளாகவும் இருக்கிறது. இந்நாளை இந்தியாவும் ‘வெற்றி நாள்’ என்று கொண்டாடுகிறது.

இதையும் படியுங்கள்:
நாளிதழின் கீழே இருக்கும் நான்கு புள்ளிகளுக்கான அர்த்தம் தெரியுமா?
இந்தியாவின் வெற்றி நாள்-டிசம்பர் 16

இந்நாளில், இந்தியாவின் தலைநகர் புதுடில்லி இந்திய வாயிலிலுள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார். அதே போல், பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் டிசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர். நாமும் இந்நாளில் போரில் உயிர் நீத்த படைவீரர்களை நினைவில் கொண்டு அஞ்சலி செலுத்துவோம்!

logo
Kalki Online
kalkionline.com