துருக்கியின் கோபெக்கிலி தெப்பே (Göbekli Tepe) - 30,000 ஆண்டுக்கு முந்தைய சிற்பத் தூண்கள், புடைப்புச் சிற்பங்கள்..!

Göbeklitepe, Turkey
Göbeklitepe, Turkey
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

துருக்கியின் தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில் கோபெக்கிலி தெப்பே (Göbekli Tepe) என்கிற கற்காலத் தொல்பொருள் தளம் ஒன்று இருக்கிறது. இத்தளமானது, துருக்கியின், சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கி.மீ மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரமும், 300 மீட்டர் சுற்றவளவும் கூடிய கோபெக்கிலி தெப்பே, கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் உயரத்தில் உள்ளது.

கோபெக்கிலி தெப்பே என்றால் துருக்கி மொழியில் பெருவயிறு மலை என்று பொருள். மட்பாண்டத்திற்கு முந்தையப் புதிய கற்காலத்தில், அதாவது கி.மு. 10,000 முதல் கி.மு. 8,000 வரையிலான காலத்தில் அப்பகுதி மக்களின் சமூக, சமயச் சடங்குகளுக்கான இடமாக விளங்கியது. பெருவயிறு மலைத் தொல்லியல் மேட்டின் முதல் கட்டத்தில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில், உலகின் முதல் பெருங்கற்காலத்திய வட்ட வடிவக் கற்தூண்கள் ஆங்கில எழுத்திலான T வடிவத்தில் நிறுவப்பட்டிருந்தது அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பெருவயிறு மலை தொல்லியல் களத்தில் கிடைத்த 200 கற்தூண்களில், 20 கற்தூண்கள் ஒவ்வொன்றும் 6 மீட்டர் உயரமும், 10 டன் எடையும் கொண்டுள்ளது. இக்கற்தூண்கள் ஒவ்வொன்றும் படுகைப்பாறைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

பெருவயிறு மலையில் இரண்டாம் காலக் கட்டமானது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலமாகும். இக்காலத்தில் இங்கு நிறுவப்பட்டிருந்த மெருகூட்டப்பட்ட சிறு சுண்ணாம்புக்கல் தூண்களால் நிறுவப்பட்ட அறைகளும், தரை தளங்களும் பின்னர் சிதிலமடைந்தது. பெருவயிறு மலையின் தொல்லிய மேட்டை முதலில் 1996 ஆம் ஆண்டில் ஜெர்மானியத் தொல்லியல் அறிஞர்கள் அகழ்வாய்வு செய்தனர்.

உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல் 'கோபெக்லி டெபே' என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில், 20-க்கும் மேற்பட்ட கல் வட்ட அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன் வரை எடை கொண்டவை. அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம்.

இதையும் படியுங்கள்:
மவுண்ட் வெசுவியஸ்! (MOUNT VESUVIUS) உலகின் அதிபயங்கர எரிமலை!
Göbeklitepe, Turkey

அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.

இத்தொல்லியல் களத்தில், கற்தூணில் எருது, நரி மற்றும் கொக்கின் சிற்பம் இடம் பெற்றிருக்கிறது கண்டறியப்பட்டது. இக்களத்தில் புடைப்புச் சிற்பம், இரையைப் பிடிக்க இருக்கும் விலங்கின் சிற்பம், காட்டுப்பன்றியின் சிலை போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பதிவேட்டில் கோபெக்லி டெபே சேர்க்கப்பட்டது. மேலும், துருக்கிய சுற்றுலாத்துறை 2019 ஆம் ஆண்டை 'கோபெக்லி டெபே ஆண்டு' என்று அறிவித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மருதாணி விரைவில் சிவந்துவிட்டால்...?
Göbeklitepe, Turkey
logo
Kalki Online
kalkionline.com