மக்களை குழந்தைகளாகக் கருதி இறைவன் உணவூட்டுவதாக நினைவுகூரும் ‘சாவ்ங்நாட் சடங்கு!’

pawl kut festival mizoram
pawl kut festival mizoram
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மிசோரம். இம்மாநிலத்தில் வைக்கோல் அறுவடை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவினை, மிசோரம் மக்களின் மொழியில் ‘பாவ்ல் குட்’ என்கின்றனர். மிசோரம் மொழியில் ‘பாவ்ல்’ என்றால் ‘வைக்கோல்’ என்று பொருள்.

‘பாவ்ல் குட்’ என்றால் ‘வைக்கோல் அறுவடை திருவிழா’ என்று பொருள் கொள்ளலாம். இந்தத் திருவிழா பொதுவாக, டிசம்பரில் அறுவடை முடிந்த பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாக இம்மாநில மக்களால் கொண்டாடப்படுகிறது.

கி.பி. 1450 முதல் 1700ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மிசோரம் மக்கள் தியாவ் நதிக்கு அருகில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இந்தத் திருவிழாவின் தோற்றம் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், மிசோரம் பகுதியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழை பொழியாமல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால், வருத்தமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுடைய நிலங்களில் அதிக விளைச்சலைத் தர வேண்டி கடவுளை வழிபட்டு வந்தனர்.

இதையும் படியுங்கள்:
தொழு நோய் ஒரு தொற்று நோயா? அதைத் தடுக்க வழிகள் உண்டா?
pawl kut festival mizoram

இதனைத் தொடர்ந்து, நான்காம் ஆண்டில் அவர்கள் எதிர்பாராத அளவுக்கு விவசாய நிலங்களில் அதிக அளவிலான விளைச்சல் ஏற்பட்டது. அதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த இம்மாநில மக்கள், ஏராளமான விளைச்சலைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், இந்த வைக்கோல் அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடத் தொடங்கினர்.

மிசோரம் மாநில மக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் திருவிழாவின்போது, ‘சாவ்ங்நாட்’ எனப்படும் ஒரு வித்தியாசமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தச் சடங்கின் முக்கியமான நிகழ்வாக, இறைச்சி மற்றும் முட்டை விருந்து படைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் 6 பழக்கங்கள்!
pawl kut festival mizoram

‘சாவ்ங்நாட்’ சடங்கின்போது, ஒவ்வொரு குடும்பத்தின் தாயும், அவரது குழந்தைகளும் இந்தத் திருவிழாவின் நோக்கத்திற்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்ட நினைவு மேடையில் அமர வைக்கப்படுகின்றனர். அங்கு முதலில் தாய் தனது குழந்தைகளுக்கு இறைச்சி மற்றும் முட்டைகளை ஊட்டி மகிழ்கிறார். அதன் பின்பு, குழந்தைகள் தங்களது தாய்க்கு முட்டை மற்றும் இறைச்சியுடன் உணவளிக்கிறார்கள். இந்தச் சடங்கானது, இறைவன் இம்மக்களை குழந்தைகளாகக் கருதி உணவூட்டுவதை நினைவுகூர்வதாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com