

ஒரு கருப்பு பூனை குறுக்கே சென்றதால் உங்கள் பயணத்தை அல்லது நீங்கள் செல்லும் வண்டியே ஐந்து நிமிடங்களுக்கு நிறுத்தியிருக்கிறீர்களா? இந்தப் பழைமையான நம்பிக்கை இன்றும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட முடிவுகளை பாதிக்கிறது.
ஒரு பூனை குறுக்கே போனால் உண்மையிலேயே கெட்டது நடக்குமா?அல்லது இது பல நூற்றாண்டுகளாகப் பரிணாமம் அடைந்த பண்டைய நம்பிக்கைகளின் சுவாரஸ்யமான கலவையா?
கருப்பு பூனைகள் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இது மத்தியகால ஐரோப்பாவில் தொடங்கியது. அங்கு கருப்பு பூனைகள் சூனியக்காரிகள், மந்திரம் மற்றும் பிசாசுடன் தொடர்புபடுத்தப்பட்டன. இரவில் யாரும் கவனிக்காமல் நடமாட சூனியக்காரிகள் கருப்பு பூனைகளாக உருமாற முடியும் என்று மக்கள் நம்பினர்.
காலனித்துவம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் பரவியபோது, இந்த மூடநம்பிக்கைகள் இந்திய சமூகத்திலும் ஊடுருவி, உள்ளூர் சகுனங்கள் மற்றும் ஜோதிட நம்பிக்கைகளுடன் கலந்தன.
இந்தியாவில், பூனைகள் தீயவை என்ற பயத்தை விட, அது நேரம் மற்றும் திசையுடன் ஒப்பிடப்படுகின்றன.
பண்டைய இந்து ஜோதிடத்தின்படி, ஒரு பூனை, பயணத்தின் நடுவில் உங்கள் பாதையை கடப்பது ஒரு தடையாகக் கருதப்பட்டது. அதாவது, ஒரு கணம் நிறுத்தி, மீண்டும் நல்ல நேரத்தில் பயணத்தைத் தொடங்குவதற்கான ஒரு சிக்னல் போல பார்க்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த நடைமுறை கெட்ட சகுனம் என்ற மூடநம்பிக்கையாக மாறியது.
எல்லா கலாச்சாரங்களும் கருப்பு பூனைகளுக்கு பயப்படுவதில்லை.
ஜப்பானில் கருப்பு பூனை குறுக்கே போனால் செல்வம் வரும் என நம்பப்படுகிறது. ஸ்காட்லாந்து மக்கள் எதிர்பாராத பணம் அல்லது புதிய விருந்தினர் வருவார்கள் எனக் கருதுகின்றனர்.
பண்டைய எகிப்தில் பூனைகள், பாதுகாப்பு, கருவுறுதல் மற்றும் மகிழ்ச்சி உடன் இணைக்கப்பட்ட புனித உயிரினங்களாக வழிபடப்பட்டன. கருப்பு பூனையை வைத்திருப்பது தெய்வீக ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்று நம்பப்பட்டது.
பூனைகள் எப்போதும் மனிதர்களை கவர்ந்துள்ளன. அவை அமைதியானவை, மர்மமானவை மற்றும் ஒலியின்றி இருளில் நகரும்.
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அதைப் பொறுத்து, ஒரே பூனை அதிர்ஷ்டத்தையும், அன்பையும் அல்லது இழப்பையும் கொண்டு வர முடியுமா?
ஒரு பூனை சாலையைக் கடந்த பிறகு ஏதாவது கெட்டது நடந்தால், மக்கள் இரண்டையும் இணைத்து, இந்த கட்டுக்கதையை வலுப்படுத்துகிறார்கள். உண்மையில், பூனைகள் தங்கள் உள்ளுணர்வுகளைப் பின்பற்றும் அப்பாவி விலங்குகள். மனிதர்களின் நம்பிக்கைகளைப் பற்றி அவற்றுக்குத் தெரியாது.
ஒரு கருப்பு பூனை சகுனமா அல்லது ஆசீர்வாதமா என்பது நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஆன்மீகமும், மூடநம்பிக்கையும் கலந்த இந்தியாவில், இத்தகைய நம்பிக்கைகள் விலங்குகளைப் பற்றி பேசுவதை விட, மனித உளவியலைப் பற்றியே அதிகம் வெளிப்படுத்துகின்றன.