உலகத்தின் 'இசை நகரம்' எதுவென்று தெரியுமா?

Vienna, Austria
Vienna, Austria
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

இசையை விரும்பாத மனிதர்களே இல்லை. விலங்குகள் கூட இசைக்கு அடிபணிகின்றன. இன்னும் சொல்ல போனால் பால் கறக்கும் போது கூட பால் கறப்பவன் பாட்டு பாடியே பாலை கறப்பான். அந்த மாடும் அவன் பாடும் வரை எதுவும் செய்யாமலும் அசையாமலும் அழகாக நின்று கொண்டிருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு கூட இசை என்றால் உயிர். ஒரு பாட்டை போட்டு விட்டால் போதும், அழுகின்ற குழந்தை கூட வாயை மூடும். அப்படிப்பட்ட இசையை உயிராக கொண்ட நகரம் எது என்று தெரியுமா வாருங்கள் இப்பதிவில் பார்க்கலாம்....

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா தான் உலகத்தின் இசை நகரமாக கருதப்படுகிறது. பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்துடனான ஆழமான தொடர்பிற்கு பெயர் பெற்ற வியன்னா, இசை சிறப்பின் உலகளாவிய மையமாக திகழ்கிறது. மேற்கத்திய பாரம்பரிய இசையை வடிவமைத்து சிறந்த படைப்புகளை உருவாக்கிய மொஸார்ட், பீத்தோவன், ஸ்கூபர்ட், ஹேடன் மற்றும் ஸ்ட்ராஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களை இந்த நகரம் பெற்று தந்துள்ளது.

வியன்னாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் கச்சேரி அரங்கத்திலும் மற்றும் கஃபே, ஓட்டல் ஆகியவற்றிலும் அந்த நகரத்தின் காலத்தால் அழியாத இசை உணர்வு பிரதிபலிக்கிறது. இதனால் தான் இந்த நகரத்தை இசை நகரம் என்று அழைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மன்னர் சுவாதித் திருநாள் கட்டிய ‘குதிரை மாளிகை’: 122 சிரிக்கும் குதிரைகள் கொண்ட அரண்மனை!
Vienna, Austria

பாரம்பரிய இசை உலகில் ஈடு இணையற்ற பங்களிப்பின் காரணமாக வியன்னா 'இசை நகரம்' என்ற பட்டத்தைப் பெற்றது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், இந்த நகரம் ஐரோப்பாவின் கலைத் தலைநகரமாக மாறியது. சிறந்த இசையமைப்பாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களை ஈர்த்தது. பிரம்மாண்டமான ஓபரா ஹவுஸ்கள் மற்றும் பாராட்டும் பார்வையாளர்களின் ஆதரவும் சேர்ந்து வியன்னாவை படைப்பாற்றலுக்கான சரியான சூழலாக மாற்றியது.

வியன்னாவில் இசை என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே திகழ்கிறது. இந்த நகரம் ஆண்டுதோறும் சிம்பொனிகள் மற்றும் ஓபராக்கள் முதல் தெரு நிகழ்ச்சிகள் வரை ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இந்த நகரத்தை பொறுத்தவரையில், இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்ந்து ஊக்குவிக்க கூடிய ஒரு கலாச்சார பாரம்பரியமுமாகும்.

இதையும் படியுங்கள்:
நீலகிரியின் தோடா எம்பிராய்டரி (பூக்கூர்) கலை ரகசியம்! அன்று வெறும் சடங்கு ஆடை; இன்று சர்வதேச சந்தையில்...
Vienna, Austria

வியன்னாவை இசை நகரமாக மாற்றிய இசையமைப்பாளர்கள்:

1. வொல்ஃப்கேங் அமேடியஸ் மொஸார்ட் - வியன்னாவில் வசிக்கும் போது தி மேஜிக் புல்லாங்குழல் மற்றும் தி மேரேஜ் ஆஃப் ஃபிகாரோ போன்ற புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கினார்.

2. லுட்விக் வான் பீத்தோவன் – வியன்னாவின் ஒன்பதாவது சிம்பொனி உட்பட தனது மிகச்சிறந்த சிம்பொனிகளை இயற்றினார்.

3. ஃபிரான்ஸ் ஷூபர்ட் - வியன்னாவை பூர்வீகமாகக் கொண்டவர், நூற்றுக்கணக்கான பாடல்கள் மற்றும் சிம்போனிக் படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்

4. ஜோசப் ஹெய்டன் - சிம்பொனியின் தந்தை என்று இவரை சொல்லலாம்.

5. ஜோஹன் ஸ்ட்ராஸ் II - வால்ட்ஸ் மன்னர், இவரின் இசையமைப்புகள் வியன்னா வால்ட்ஸை உலகப் புகழ் பெறச் செய்தன.

இதையும் படியுங்கள்:
40,000 ஆண்டுகளுக்கு முன்பே சன்ஸ்கிரீனா? விஞ்ஞானிகளை வியக்க வைத்த மர்மம்!
Vienna, Austria

இன்றும், வியன்னா இசைக்கான உலகளாவிய மையமாக தொடர்ந்து செழித்து வருகிறது. இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் 15,000க்கும் மேற்பட்ட இசை நிகழ்வுகளை நடத்துகிறது.

வியன்னாவில் உள்ள ஒவ்வொருவரின் இதயமும் இசையுடன் சேர்ந்து தான் துடிக்கிறது என்ற ஒரு உறுதியான கருத்து இன்றளவும் நிலவுகிறது. இது அதனுடைய பராம்பரியமான கலாச்சாரத்தை முழுமையாகப் படம் பிடித்து காட்டுகிறதென்றே சொல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com