கோயிலுக்குள் போகும் முன் செருப்பை கழற்றுவது ஏன்?

A woman removing the footwear on entrance of temple
Removing the footwear on entrance of temple
Published on

கோயிலுக்குள் நுழையும் முன் வாசலிலேயே எல்லாரும் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். இது ஒரு மரியாதை நிமித்தமான பழக்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் குட்டிச் செயலுக்குப் பின்னால் எவ்வளவு ஆழமான காரணங்களும், அறிவியலும் ஒளிந்திருக்கிறது தெரியுமா?

அட ஆமாங்க! இது நம்முடைய உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு நன்மை தரும் ஒரு அறிவியல் சார்ந்த விஷயம். வாருங்கள்! இந்தக் கட்டுரையில் அதைப் பற்றிப் பார்க்கலாம்.

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம். நம் வீடு போல, அதுவும் ஒரு புனிதமான இடம்.நாம் அணிந்து செல்லும் காலணிகள், சாலைகள், கழிவறைகள், அசுத்தமான இடங்கள் எனப் பலவற்றிலிருந்தும் தூசியையும், கிருமிகளையும் சுமந்து வருகின்றன.

அந்தக் கிருமிகளை அல்லது அசுத்தத்தை உள்ளே கொண்டு செல்வது, கோயிலின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, செருப்பைக் கழற்றுவது என்பது, 'நான் இந்த இடத்தின் தூய்மைக்கு மதிப்பளிக்கிறேன்' என்று சொல்வதற்குச் சமம். இது, சுத்தமே கடவுளுக்கு அடுத்தது (Cleanliness is next to Godliness) என்ற தத்துவத்தின் அடிப்படையானது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள்: விஞ்ஞானத்தை மிஞ்சும் சாகசங்கள்!
A woman removing the footwear on entrance of temple

ஆன்மிக ரீதியாக, செருப்பைக் கழற்றுவதற்கு மிக முக்கியமான ஒரு பொருள் உள்ளது. செருப்பு என்பது நம்மை வெளியுலகத் தொடர்புகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு பொருள் ரீதியான அடையாளம். நாம் அதைக் கழற்றி வைக்கும்போது, நம்முடைய அகங்காரம், கோபம், கவலைகள், மற்றும் உலகப் பற்றுக்கள் அனைத்தையும் வாசலிலேயே விட்டுவிட்டுச் செல்கிறோம் என்று அர்த்தம். காலணியில்லாமல் வெறுங்காலுடன் நடப்பது பணிவின் வெளிப்பாடு. இறைவனின் சன்னதிக்கு முன்னால், நாம் அனைவரும் சமம் என்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது. வெளியே வைக்கப்பட்டிருக்கும் செருப்பைப் பார்க்கும்போது, நீங்கள் ஒரு தற்காலிக ஓய்வுக்காக வெளியே உலக விஷயங்களை விட்டு வந்துள்ளீர்கள் என்று உங்கள் மனதுக்கு அதுவே நினைவூட்டுகிறது.

கோயில்கள் வெறுமனே கற்களால் ஆன கட்டிடங்கள் அல்ல. அவை நேர்மறை அதிர்வுகளை (Positive Vibrations) ஒருமுகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கோயில்கள், வாஸ்து சாஸ்திரத்தின்படி, பூமியின் அதிக ஆற்றல் கொண்ட புள்ளிகளில் கட்டப்படுகின்றன. நாம் வெறுங்காலுடன் நடக்கும்போது, கோயிலின் தரையிலிருந்து அந்த நேர்மறை ஆற்றலை நம் பாதங்கள் வழியாக நேரடியாக உடல் உள்வாங்குகிறது.

இதையும் படியுங்கள்:
இறந்தவர்களின் வீட்டில் ஒப்பாரி வைத்து, மாரடித்து அழுவது ஏன்? வெறும் சடங்கா? அறிவியல் காரணம் உண்டா?
A woman removing the footwear on entrance of temple

யோகக் கலைப்படி, நம் பாதங்கள் பூமியோடு நெருங்கியுள்ள மூலதார சக்கரத்தை தூண்ட உதவுகிறது. செருப்பு அணிந்திருந்தால், இந்த நேரடி ஆற்றல் பரிமாற்றம் தடுக்கப்படும். மேலும், பல கோயில்களின் தரையில், குங்குமம், மஞ்சள் போன்ற கிருமி நாசினி மற்றும் மருத்துவ குணமுள்ள பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெறுங்காலுடன் நடப்பதால், அதன் பலன்கள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.

இன்னொரு முக்கியக் காரணம், முற்காலத்தில், பெரும்பாலும் காலணிகள் தோல் கொண்டு செய்யப்பட்டிருக்கும். இந்து மதத்தில், இறந்த விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பொருட்களைப் புனிதமான கோயிலுக்குள் எடுத்துச் செல்வது அசுத்தமாகக் கருதப்படுகிறது. அகிம்சையின் அடையாளமாகவும், விலங்குகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும் தோல் பொருட்களை உள்ளே தவிர்ப்பது ஒரு முக்கியமான பாரம்பரியமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
சென்னை கட்டட வரலாற்றின் சாதனை மனிதர்: யார் இந்த ‘நம்பெருமாள் செட்டியார்’...?
A woman removing the footwear on entrance of temple

அதனால்தான், கோயிலுக்குச் செல்லும் இந்தியர்கள் இந்தச் சின்னஞ் சிறிய செயலைத் தவறாமல் செய்கிறார்கள். இது வெறும் பழக்கம் அல்ல; சுத்தம், பணிவு, ஆரோக்கியம், ஆன்மீகப் பலன் ஆகிய பல காரணிகளை உள்ளடக்கிய ஒரு ஆழமான தத்துவம்.

அடுத்த முறை நீங்கள் செருப்பைக் கழற்றும்போது, இந்த ரகசிய காரணங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com