முதலாம் உலகப் போர்: ராணுவத்தில் இணைந்து வீரப்பதக்கம் வென்ற ஒரு குரங்கின் நம்பமுடியாத பயணம்!

Corporal Jackie monkey
Corporal Jackie monkey
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

1910 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தென்னாப்பிரிக்காவின் ஆல்பர்ட் மார் என்பவர் தனது பண்ணையில் ஒரு பபூன் வகைக் குரங்குக் குட்டியைக் கண்டெடுத்து, அதற்கு ஜாக்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்தக் குரங்கை, தன் குடும்பத்தின் உறுப்பினராக வளர்த்துப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ஆல்பர்ட் மாரின் பண்ணையில் ஜாக்கி இருந்து வந்தது.

முதலாம் உலகப் போர் வெடித்த பிறகு 1915 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் மாருக்கு இராணுவத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. இராணுவத்தின் அழைப்பை ஏற்ற அவர், “என்னுடன் ஜாக்கியையும் அழைத்து வருவேன், ஜாக்கி இல்லாமல் இராணுவப் பணிக்கு வர இயலாது” என்று சொன்னார். இராணுவ அதிகாரிகள் முதலில் மறுத்தாலும், பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்று, ஜாக்கியை உடன் அழைத்து வர ஒப்புக் கொண்டனர்.

ஆல்பர்ட் மாருடன் சேர்ந்து ஜாக்கியும் இராணுவப் பணிகளைச் செய்து வந்தது. சிறிது காலத்தில் ஜாக்கியும் தென்னாப்பிரிக்க தரைப்படையில் ஒரு வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர், மூன்றாவது தென்னாப்பிரிக்கக் காலாட்படை படைப்பிரிவின் (டிரான்ஸ்வால்) ஒரு சின்னமாக மாற்றப்பட்டு, அந்தக் குரங்கு அவர்களுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டது.

ஜாக்கிக்கு ஒரு தொப்பி, அதன் உணவுக்காகத் தனித் தொகை, அதற்கென்று சம்பள புத்தகம் கொண்ட அதிகாரப்பூர்வ பணி சீருடை போன்றவைகளும் வழங்கப்பட்டன. ஜாக்கி உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கப் பயிற்சி பெற்றிருந்தது. வீரர்களின் சிகரெட்டுகளைப் பற்ற வைக்கும் பணிகளையும் செய்து வந்தது.

ஜாக்கியின் உயர்ந்த புலன்கள் காரணமாக, இரவில் பணியில் இருந்த காவலாளிகளுக்கு உதவியாக காவல் காத்தது. தாக்குதல் வரும் போது அல்லது எதிரி வீரர்கள் நடமாட்டம் இருப்பதை முதலில் தெரிந்து கொள்வது இந்த பபூன் குரங்கு தான். இராணுவத்தில் இருந்த போது ஜாக்கிக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அவற்றை உண்ண தனியே, தட்டு, முள் கரண்டி, கை கழுவத் தனியே கைகழுவும் தொட்டி போன்றவை வழங்கப்பட்டன. படையணி அணிவகுத்துச் செல்லலும் போது, ஜாக்கி அவர்களுடன் இருக்கும்.

ஆல்பர்ட் மார் எகிப்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1916 ஆம் ஆண்டு, பிப்ரவரி 26 ஆம் நாளன்று அகாகியா போரில், ஜாக்கியும் அவருடன் இருந்தது. அப்போது ஆல்பர்ட் மாரின் தோளில் குண்டு பாய்ந்து. காயத்துக்கு சிகிச்சை பெற அவர் உதவிக்காகக் காத்திருந்த போது, ஜாக்கி அவரது தோள் காயத்தை நக்கி ஆற்றுப்படுத்தியது.

பிரான்சில் உள்ள அகழிகளில் ஜாக்கி நேரத்தைச் செலவிட்டது. அங்கு எதிரிகளின் கடுமையான துப்பாக்கிச் சூட்டிற்கு இடையில் இருந்தது. போரின் போது ஜாக்கியின் வலது கால் உடைந்து போனதுடன், அதன் கால் மற்றும் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டன. மருத்துவர்கள் ஜாக்கியின் காயங்களுக்குச் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது. அதற்கு ஏற்பட்ட காயத்தினால் விரைவில் இறந்துவிடும் என்று மருத்துவர்கள் எண்ணியிருந்த நிலையில் அது உயிர் பிழைத்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் புதிய ஃபேஷன் ட்ரெண்டான 'இந்த' பைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Corporal Jackie monkey

காயமடைந்ததற்காக ஜாக்கிக்கு வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் பிரவேட் என்னும் பதவியிலிருந்து கார்போரல் என்ற பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. கார்போரல் ஜாக்கியின் (Corporal Jackie) சேவைகளைப் பாராட்டி, ‘பிரிட்டோரியா குடிமக்கள் சேவை பதக்கம்’ வழங்கப்பட்டது.

போர் முடிந்த பிறகு, கேப் டவுனில் உள்ள மைட்லேண்ட் முகாமில் ஜாக்கி ஆவணங்களுடன் விடுவிக்கபட்டது. தென்னாப்பிரிக்க இராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒரே பபூன் குரங்கு ஜாக்கி மட்டுமல்ல என்றாலும், பிரவேட் அல்லது அதற்கு மேற்பட்ட கார்போரல் பதவியை அடைந்த ஒரே பபூன் குரங்கு இதுதான்.

இதையும் படியுங்கள்:
குறியீடுகளின் ரகசிய அர்த்தங்கள் பற்றி தெரியுமா?
Corporal Jackie monkey

போருக்குப் பிறகு, மார் ஜாக்கியை தென்னாப்பிரிக்காவிற்கு மீண்டும் அழைத்து வந்தார். ஒரு ஆண்டு கழித்து 1921 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் காயமடைந்த பபூன் இறந்தது. ஒரு பபூன் குரங்கு இராணுவப் படையில் சேர்ந்து பிரவேட் மற்றும் கார்போரல் எனும் உயர் பதவிகளைப் பெற்றது என்பது உண்மையில் வியப்பூட்டுகிறது.

logo
Kalki Online
kalkionline.com