

பட்டு என்றாலே போதும், நம் நினைவுக்கு முதலில் வருவது நமது காஞ்சீவரம்தான். ஆனால், அதைப் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிரபலமான பட்டுகள் உள்ளன. அவற்றில் சில ரகங்கள் நம்முடைய அலமாரியிலும் இருக்கும்; நாம் அணிந்தும் இருப்போம்.
இந்திய கைநெசவு என்பது சாதாரண துணி அல்ல; அது வரலாறு, கலாசாரம், கலை—அனைத்தும் சேர்ந்த ஒன்று. கனமான பட்டு சேலைகளிலிருந்து, கோடைக்காலத்தில் அணிய இலகுவான பருத்தி சேலைகள் வரை, ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான கதையை சொல்கிறது. இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதன் நெசவுகளைப் பார்ப்பதே போதும். இங்கே காஞ்சீவரம் முதல் பந்தனி வரை இந்திய மாநில வாரியாக பிரபலமான சேலைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் 28 பிரபலமான சேலைகள்
தென்னிந்தியாவின் சிறப்பு
தென்னிந்திய சேலைகள் மிகவும் பிரபலமானவை. தமிழ்நாட்டின் காஞ்சீவரம் சேலை தூய பட்டு மற்றும் ஜரி வேலைப்பாடுகளால் மிகவும் மதிப்புமிக்கது. கேரளாவின் கசவு சேலை வெள்ளை நிறத்தில் பொன் எல்லையுடன் எளிமையான அழகை தருகிறது. கர்நாடகாவின் இலகல் சேலை அதன் சிவப்பு பல்லுவால் அடையாளம் காணப்படும்.
ஆந்திராவின் உப்பாடா ஜம்தானி சேலை இலகுவாகவும் அழகாகவும் இருக்கும்.
தெலங்கானாவின் பொச்சம்பள்ளி இகாட் சேலை கோடு வடிவங்களுடன் தனித்துவமாக தெரியும்.
வட இந்தியாவின் அழகு
வட இந்தியாவில் சேலைகள் அரச மரபும், பாரம்பரியமும் கலந்தவை.
உத்தரப் பிரதேசத்தின் பனாரசி சேலை தங்கம், வெள்ளி வேலைப்பாடுகளுடன் மிக அழகாக இருக்கும்.
பஞ்சாபின் புல்காரி சேலை நிறமயமான மலர் வேலைப்பாடுகளால் கவரும்.
ஹரியானாவின் ரேஷம் தூரியா பருத்தியில் பட்டு வேலை சேர்த்து எளிமையும் அழகும் தருகிறது.
மலைப் பகுதிகளில், ஹிமாச்சலத்தின் குல்லு பட்டி சேலைகள் வண்ணமயமான கோடு வடிவங்களுடன் இருக்கும்.
உத்தரகண்டின் பஞ்சாசுலி சேலைகள் அமைதியான, மென்மையான அழகை காட்டும்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா
கிழக்கு இந்தியாவில் சேலைகள் கதைகளைச் சொல்வதுபோல் இருக்கும்.
மேற்கு வங்கத்தின் பாலுசாரி சேலையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் வடிவமாக இருக்கும்.
பீஹாரின் பாகல்புரி துச்சார் இயற்கையான தோற்றத்துடன் எளிமையாக இருக்கும்.
ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கிடைக்கும் துச்சார் மற்றும் சம்பல்புரி இகாட் சேலைகள் இயற்கை வடிவங்களால் அழகாக இருக்கும்.
வடகிழக்கு மாநிலங்களில் நெசவுகள் மிகவும் சிறப்பு.
அசாமின் முகா பட்டு மிகவும் பிரபலமானது.
மேகாலயாவின் எரி பட்டு மென்மையாகவும் சுகமாகவும் இருக்கும்.
அருணாச்சல், சிக்கிம் போன்ற மாநிலங்களில் எளிய கோடு வடிவ சேலைகள் காணப்படும்.
நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மாநிலங்களில் பழங்குடி வடிவங்கள் கொண்ட சேலைகள் அதிகம்.
மணிப்பூரின் மொய்ராங் பீ சேலை அதன் எளிய அழகால் தனித்துவம் பெறுகிறது.
மேற்கு மற்றும் மத்திய இந்தியா
மேற்கு இந்தியாவில் நிறமிடும் கலையில் சிறப்பு உள்ளது.
ராஜஸ்தானின் பந்தனி சேலை கட்டு-நிறமிடும் முறையில் வண்ணமயமாக இருக்கும்.
குஜராத்தின் பட்டோலா சேலை மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுடன் தயாரிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் பைத்தானி சேலை மயில் வடிவங்களால் அழகாக இருக்கும்.
கோவாவின் குன்பி சேலை காற்றோட்டமான பருத்தியில் எளிமையாக இருக்கும்.
மத்தியப் பிரதேசத்தின் சந்தேரி சேலை இலகுவாகவும் கோடைக் காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும
சத்தீஸ்கரின் கோசா பட்டு சேலை சிறிய கலை வடிவங்களால் அலங்கரிக்கப்படுகிறது.
இவ்வாறு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்ட சேலைகளை வழங்குகிறது. அவை அனைத்தும் நம் பாரம்பரியத்தின் பெருமையைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.