நெல் பருவங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

Paddy seasons
Agricultural...
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

வேளாண் வழக்கத்தில் கார், குறுவை, சொர்ணவாரி, தாளடி, நவரை, பிசாணம், பின் பிசாணம், பின் சம்பா, முன் சம்பா என்று நெல் பருவங்கள் குறிப்பிடப்படுகின்றன.

கார் பருவம்

இலையுதிர் காலமான கார் பருவம் என்பது வேளாண் வழக்கில் கார் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக்கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

மே முதல் ஜூன் (தமிழ்: வைகாசி முதல் ஆனி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவமானது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் (தமிழ்: ஆவணி முதல் புரட்டாசி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக்கொண்ட இந்தக் கார் பருவம், குறுகிய கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

குறுவைப் பருவம்

இலையுதிர் காலமான குறுவைப் பருவம் என்பது வேளாண் வழக்கில் குறுவைப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

ஜூன் முதல் ஜூலை (தமிழ்: ஆனி முதல் ஆடி) வரையிலான மாதங்களில் தொடங்கும். இப்பருவம், செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி முதல் ஐப்பசி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்தக் குறுவைப் பருவம், குறுகிய கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

சொர்ணவாரி பருவம்

இளவேனிற்காலமான சொர்ணவாரிப் பருவம் என்பது வேளாண் வழக்கில் சொர்ணவாரிப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். ஏப்ரல் முதல் மே (தமிழ்: சித்திரை முதல் வைகாசி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவம்,

ஜூலை முதல் ஆகஸ்ட் (தமிழ்: ஆடி முதல் ஆவணி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்த சொர்ணவாரிப் பருவம், குறுகியக் கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

இதையும் படியுங்கள்:
வருடத்திற்கு ஒருமுறை இரவில் மலரும் கடும் புல் மலரின் (Epiphyllum oxypetallum) இயற்கைப் பண்புகள்!
Paddy seasons

தாளடி பருவம்

குளிர் காலமான தாளடிப் பருவம் என்பது வேளாண் வழக்கில் தாளடிப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி முதல் ஐப்பசி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவம், டிசம்பர் முதல் ஜனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்தத் தாளடிப் பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

நவரைப் பருவம்

குளிர்காலமான நவரைப் பருவம் என்பது வேளாண் வழக்கில் நவரைப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்ம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். டிசம்பர் முதல் சனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் தொடங்கும் இப்பருவம்,

ஏப்ரல் முதல் மே (தமிழ்: சித்திரை முதல் வைகாசி) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்த நவரைப் பருவம், குறுகியக்கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

பிசாணம் பருவம்

குளிர் காலமான பிசாணப் பருவம் என்பது வேளாண் வழக்கில் பிசாணப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி முதல் ஐப்பசி) மாதங்களில் தொடங்கும் இப்பருவம், டிசம்பர் முதல் ஜனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த பிசாணப் பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

பின் பிசாணம் பருவம்

குளிர் காலமான பின் பிசாணப் பருவம் என்பது வேளாண் வழக்கு பின் பிசாணப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

செப்டம்பர் முதல் அக்டோபர் (தமிழ்: புரட்டாசி - ஐப்பசி) வரையிலான மாதங்களில் தொடங்கும் இப்பருவம், டிசம்பர் முதல் ஜனவரி (தமிழ்: மார்கழி முதல் தை) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த பின் பிசாணப் பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே அதிகளவு நீரை கடலில் கலக்கும் அமேசான் நதி...
Paddy seasons

பின் சம்பா பருவம்

கோடைக் காலமான பின் சம்பாப் பருவம் என்பது வேளாண் வழக்கில் பின் சம்பாப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

அக்டோபர் முதல் நவம்பர் (தமிழ்: ஐப்பசி முதல் கார்த்திகை) மாதங்களில் தொடங்கும் இப்பருவம், மார்ச்சு முதல் ஏப்ரல் (தமிழ்: பங்குனி முதல் சித்திரை) வரையிலான மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த பின் சம்பா பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

முன் சம்பா பருவம்

குளிர் காலமான முன் சம்பாப் பருவம் என்பது வேளாண் வழக்கு முன் சம்பாப் பட்டம் எனப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் காலம் மற்றும் சாகுபடிக் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

ஜூன் முதல் ஜூலை (தமிழ்: ஆனி முதல் ஆடி) மாதங்களில் தொடங்கும் இப்பருவம், நவம்பர் முதல் டிசம்பர் (தமிழ்: கார்த்திகை முதல் மார்கழி) மாதங்களில் முடிவடைகிறது. 130 முதல் 135 நாட்களைக் கொண்ட இந்த முன் சம்பா பருவம், மத்தியக் காலம், மற்றும் நீண்ட கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாகும்.

logo
Kalki Online
kalkionline.com