மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள் - காட்டுயிர்கள் மேல் அக்கறை கொள்வோம்!

மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 ஆம் நாளன்று, உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவர இனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில், “காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் அழிந்து வரும் உயிரினங்களின் பன்னாட்டு வணிக சாசனம்” (CITES) மூலம், மார்ச் 3 ஆம் நாளை உலகக் காட்டுயிர் நாள் கடைப்பிடிக்க வேண்டுமென்கிற தாய்லாந்தினால் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டிலிருந்து உலகக் காட்டுயிர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காட்டுயிர் (wildlife) என்பது வீட்டைச் சாராத அனைத்துத் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை வீட்டுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது.

இது சுற்றுப்புறத்திற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காட்டுயிர்களை அனைத்து சூழ்நிலை மண்டலங்களிலும் காணலாம். பாலைவனங்கள், மழைக்காடுகள், சமவெளிகள் போன்ற இடங்களில் மட்டுமன்றி மிகவும் வளர்ச்சியுற்ற நகர்ப்புறங்களில் கூடத் தனித்துவமான காட்டுயிர்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் காட்டுயிர்கள் மனித நடவடிக்கைகளால் தாக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

வரலாற்று ரீதியாக, சட்டம், சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த உணர்வு உள்ளிட்ட பல வழிகளில் நாகரிகத்தை காட்டுயிர்களில் இருந்து மனிதர்கள் பிரித்திருக்கின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் விவாதத்திற்கான காரணமாகின. சமயங்கள் பொதுவாக சில விலங்குகளைப் புனிதத்தன்மை உடையவையாகத் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலியர்கள் கண்டு அஞ்சும் ஆக்ரோஷ பறவை!
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்

தற்காலத்தில் இயற்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள அக்கறை, மனித நன்மைக்காக அல்லது பொழுதுபோக்குக்காக காட்டுயிர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்வலர்களால் மேற்கொள்ளுவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

மனிதனால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுயிர்களின் வாழ்விடச் சூழல் பறிப்பு மட்டுமின்றி, உணவு, மருந்து மற்றும் மனிதர்களின் ஆடம்பர ஆசைக்காகப் பெரிதும் கொல்லப்பட்டு, கடத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்டுயிர்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

மனிதனால் காடு என்று வரையறுத்துள்ள எல்லைக்குள் வாழும் உயிர்களே காட்டுயிர் என்று தவறாக எண்ண வேண்டாம்.

உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள தாவரங்கள் விலங்குகளை நேசியுங்கள். அணில், பல்லி, சிட்டுக் குருவி, ஓணான், தேனீ போன்றவைகளையும் நேசியுங்கள். அவசியமின்றி, வீட்டிற்கு அருகிலுள்ள புல், புதர் தாவரங்களை அகற்ற வேண்டாம். வீட்டில் பறவைகள் கூடு கட்டியிருந்தால் அதை அவசரப்பட்டு அகற்றி விடாதீர்கள். காட்டுயிர் இறைச்சிகள், ஆபரணப் பொருட்கள் போன்றவைகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். காட்டுயிர் வேட்டையாடப்பட்டால் தடுத்து விடுங்கள். இதேப் போன்று காட்டுயிர்கள் கடத்தப்பட்டால் தகவல் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

2015 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், ஒரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் காட்டுயிர்களின் பாதுகாப்பும், மக்களிடம் காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக, “காட்டுயிர் பாதுகாப்பு நிதி: மக்கள் மற்றும் புவியியல் மீதான முதலீடு” (Wildlife Conservation Finance: Investing in People and Planet) என்று அமைந்திருக்கிறது.

அப்புறமென்ன, இனியாவது, காட்டுயிர்கள் மேல் அக்கறை கொள்வோம். அவைகளைப் பாதுகாக்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவோம்.

இதையும் படியுங்கள்:
பால் கறக்கும் இயந்திரங்கள் - நல்லதா? கெட்டதா?
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்
logo
Kalki Online
kalkionline.com