இரவு நேரத்தில் வேட்டையாடும் 'இராக்கொக்கு'!

Black - Crowned Night Heron
Black - Crowned Night Heron
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இராக்கொக்கு (Black - Crowned Night Heron) என்பது நீர்நிலைகளைச் சார்ந்திருக்கும் வாத்தினை ஒத்த உடலளவுடைய பறவையினம். இவற்றின் பேரினப் பெயரான Nycticorax என்பதற்கு 'இரவின் காகம்' என பொருள். இவை இரவில் பெரும்பாலும் வேட்டையாடுதலாலும், இவற்றின் ஒலி காகம் கரைவதைப் போலிருப்பதாலும் இவ்வாறாகப் பெயரிட்டனர்.

இளம் பறவைகள் பழுப்பும்-இளஞ்சிவப்பும் கலந்த உருவையும், பல இடங்களில் வெளிரிப்போன புள்ளிகளையும் கொண்டுள்ளன. அடிப்பகுதிகள் வெளுத்துப் போயிருக்கும். கண்கள் இளஞ்சிவப்பு கண்களும் பச்சை-மஞ்சள் கால்களும் கொண்டுள்ளன. இவைகள் மிகவும் அதிகமாக ஒலியெழுப்பும் தன்மையோடு ‘குவாக், குவாக்’ அல்லது ‘வாக், வாக்’ என்று கூக்குரலிடுகின்றன.

வளர்ந்த பறவைகட்கு கருப்பு நிறத்தில் தொப்பியினைப் போன்ற அமைப்பு தலையின் மீது இருப்பது தவிர, வெள்ளையாகவோ, பழுப்பாகவோ உடல் உள்ளது. சிவந்த கண்களும், குட்டையான மஞ்சள் நிறக்கால்களும் இருக்கும். கருத்த நிறத்திலும் மஞ்சள் கலந்த நிறத்திலும் அலகு உண்டு. இளம்பழுப்பு நிறத்தில் சிறகுகளும், கழுத்தும் உடலின் அடிப்பகுதியும் வெளிரிப் போனது போல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சாப்பாட்டு பந்தியின் தாத்பர்யம் தெரியுமா…?
Black - Crowned Night Heron

இனவிருத்திக் காலங்களில், இரண்டு அல்லது மூன்று இறகுகள் மட்டும் தலையின் பின்புறம் நீண்டிருப்பதுண்டு. இரு பாலினமும் ஒன்றாயிருப்பினும் ஆண்கள் பெரியதாக இருப்பதைக் காணலாம். இவை மற்ற நாரைகள் அல்லது கொக்குகள் போன்றில்லாமல் சற்றே தடித்த உடல் வாகுடனும் நீளம் குறைந்த அலகினையும் கால்களும், கழுத்தும் கொண்டுள்ளன.

கூனல் போட்டது போன்று அமர்ந்திருப்பது இதன் சிறப்பம்சம். இவை வேட்டையின் போது மட்டும் கழுத்தை நீட்டுவதால், இராக்கொக்கை நீரில் மேய்ந்துண்ணும் பறவைகளோடு (Wading Nirds) ஒப்பிட இயலும். மற்ற மீனுண்ணும் பறவைகள் பகலில் வேட்டையாட, இவை மட்டும் இரவுப் பறவையாயின.

இதையும் படியுங்கள்:
தேர்வு கால மாணவர்களுக் கான சத்தான எனர்ஜி உணவுகள்!
Black - Crowned Night Heron

இவை பகல் முழுதும் ஏதாவதொரு மரக்கிளையிலோ புதர்களிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலைப் பொழுதுகளிலும் இரவிலும் கூட்டங்களாக வேட்டையாடக் கிளம்புகின்றன. இராக்கொக்குகள் நீரின் கரையருகே இரவிலும் அதிகாலையிலும் அசையாது தன் இரையின் அசைவுகளை பார்த்திருக்கும். தருணம் சரியாய் அமையும் வேளையில் இவை கொத்திப் பிடித்துண்ணுகின்றன. இவற்றின் முக்கிய உணவு சிறிய மீன்கள், தவளைகள், தேரைகள், பூச்சிகள், ஓடுடைய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சிறிய பாலூட்டிகளுமாகும். இவற்றின் உடல் நீளம் சுமார் 64 செ. மீட்டர் வரையும் எடை 800 கிராம் வரையும் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com