பாயசத்துடன் சேர்க்கும் ஜவ்வரிசி: இது எப்படி உருவாகுதுன்னு தெரியுமா?

Javvarisi Payasam with Sago Palms
Javvarisi Payasam
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

வீட்டிலோ அல்லது விசேஷங்களிலோ பாயசம் தயாரிக்கப்படும்போது சேமியாவுடன் சேர்த்துப் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருள் ஜவ்வரிசி. மிகச்சிறிய உருண்டை வடிவில் மணி மணிகளாக இருக்கும் இந்த ஜவ்வரிசி எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

மாவுப் பொருட்களை அதிக அளவில் கொண்டிருக்கும் மரங்களிலிருந்தே ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இந்தோனேசிய தீவுகளில் வளர்கின்ற ஜவ்வரிசிப் பனை மரம் (Sago Palms) எனப்படும் மரத்திலிருந்து ஜவ்வரிசி பெருமளவில் பெறப்படுகின்றது. இந்த ஜவ்வரிசி மரம் பப்புவாத் தீவில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. இதேபோன்று, அரெகாசெயா (Arecaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மெட்ராக்சிலன் சாகு (Mertroxylon Sagu), அதே வகையைச் சேர்ந்த மெட்ராக்சிலன் ரம்பீ (Metroxylon rumphii) போன்ற மரங்களிலிருந்தும் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த இரு வகையான ஜவ்வரிசி மரங்கள் இந்தோனேசியாவின் செராம் (Ceram) என்ற தீவில் பெருங்காடுகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது போர்னியோ (Borneo) தீவிலும் ஜவ்வரிசி மரங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆனைமலை அதிசயம்: நீங்கள் அறியாத இருவாச்சிகளின் மறுபக்கம்!
Javvarisi Payasam with Sago Palms

தாழ்ந்த சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய ஜவ்வரிசி தாவரங்கள் 9 மீட்டர் (30 அடி) வரை உயரமாக வளரக்கூடியவை. இம்மரங்களின் தண்டுப் பகுதி தடிப்பாக விருத்தியடையும். 15 ஆண்டுகளில் ஜவ்வரிசி மரம் முதிர்ச்சி நிலையை அடையும். இந்நிலையில் பல பூக்களைக் கொண்ட ஒரு பூந்துணர் உருவாகும். இக்காலத்தில் தாவரத் தண்டின் நடுப்பகுதியில் பெருமளவு மாவுப்பொருள் சேகரிக்கப்பட்டிருக்கும். பூக்களிலிருந்து காய்களை உருவாகி அவை முதிர்ந்து கனியத் தொடங்கி விட்டால், தண்டிலுள்ள மாவுப்பொருள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, மரத்தின் தண்டின் நடுப்பகுதி வெறுமையாகிவிடும். இதனால் காய்கள் பழுத்த பின்னர் தாவரம் மடிந்து விடும்.

இதனால், ஜவ்வரிசி பெறுவதற்காகப் பயிரிடப்பட்ட மரங்கள் பூந்துணர் தோன்றிய உடன் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதன் பின்னர், குற்றிகள் துண்டங்களாக வெட்டப்பட்டு பிளக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து ‘சோறு’ எனும் மாவுப்பொருள் நிறைந்த நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இவ்வாறு தூளாக்கப்பட்ட பகுதியில் மாவுப் பொருளோடு நார்களும் கலந்திருக்கும். இத்தூளை நீரோடு சேர்த்துப் பிசைந்து அரிதட்டு ஒன்றினூடாக வடியச் செய்வதன் மூலம் மாவுப் பகுதியில் சேர்ந்திருக்கும் நார்கள் அகற்றப்படுகின்றன. இப்படி பல முறை நீரினால் அலசிய பின்னர், மாவுப்பகுதி பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாறி விடுகின்றது. இந்த மாவுப்பொருளை, உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்காக நேரடியாகப் பயன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
நீரில் நடக்கும் 'இயேசு கிறிஸ்து பல்லி' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
Javvarisi Payasam with Sago Palms

இருப்பினும், இந்த மாவுப்பொருளை ஏற்றுமதி செய்வதற்காக மணிகளாக மாற்றப்படுகின்றன. இதற்காக ஜவ்வரிசி மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மாவை நீரோடு கலந்து பிசைந்து பசை போலாக்கி அதனை அரிதட்டுகளினூடாகத் தேய்க்கும்போது ஜவ்வரிசி மணிகள் உருவாகின்றன. வித்தியாசமான பருமனுள்ள அரிதட்டுகளைப் பயன்படுத்துவதன் வழியாக, வித்தியாசமான பருமன் கொண்ட ஜவ்வரிசி மணிகள் பெறப்படுகின்றன. பன்னாட்டுச் சந்தையில் முத்துச் ஜவ்வரிசி என்ற பெரிய வகையும், சன்னச் ஜவ்வரிசி என்ற சிறிய வகையும் கிடைக்கின்றன.

ஜவ்வரிசி தூய மாவுப்பொருளைக் கொண்டது. அதில் 88 சதவீதம் கார்போஹைட்ரேட், 0.5 வீதம் புரதம், மிக நுண்ணிய அளவு கொழுப்பும் அடங்கியுள்ளன. இவை தவிர, சிறிதளவு உயிர்ச்சத்து பி இருக்கின்றன. ஜவ்வரிசி எளிதில் செரிமானமடையக் கூடியது. தென்மேற்கு பசிபிக் பகுதி மக்களின் அடிப்படை உணவாக இருக்கும் ஜவ்வரிசியினைப் பிற நாடுகள் சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள், இனிப்புக் கூழ்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில், பாயசம் உள்ளிட்ட சில உணவுப் பொருள் தயாரிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கைத்தொழில்துறையில் துணிகளை விறைப்பாக்குவதற்கும் ஜவ்வரிசி மாவு பயன்படுத்தப்படுகின்றது.

logo
Kalki Online
kalkionline.com