ஆழ்கடலின் அசுத்தத்தை நீக்கும் சூப்பர் ஹீரோக்கள் சிப்பிகளின் துப்புரவு ரகசியம்!

Oysters that remove pollution from the deep sea
Sea oyster
Published on

கடலின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் வகையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு உயிரினம் செயல்படுகிறது. அவைதான் சிப்பிகள். இவை பெரும்பாலும் அனைவராலும் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன. இவை நமது கடலின் சுற்றுச்சூழல் சமநிலையை பேணிப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சிப்பிகள் முக்கியமான கடல் இனங்களாகச் செயல்பட்டு, கடலுக்கு அடியில் மிகச் சிறந்த சுற்றுச்சூழலை வடிவமைக்கின்றன. கடல் நீரை வடிகட்டுவது முதல், பல்லுயிர் பெருக்கம் வரை பெருங்கடலின் உயிர்ச் சக்தியை பராமரிப்பதில் இந்த உயிரினம் இன்றியமையாத ஒன்றாக செயல்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவற்றின் முக்கியப் பங்களிப்பு என்னவென்றால், இவை கடலின் இயற்கையான வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பூமிக்குள் இருக்கும் நரகம்: உலகில் அதிக எரிமலைகளை கொண்ட முதல் 5 நாடுகள்!
Oysters that remove pollution from the deep sea

இவை கடல் நீருக்கு அடியில் உள்ள அதிகப்படியான பாசிகள், வண்டல் மற்றும் மாசுபாடுகளை சுத்திகரிக்கின்றன. இந்த செயல்முறையால் கடல் நீரின் தரம் கணிசமாக மேம்பட்டு, பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆரோக்கியமான வாழ்விடமாக அமைவதை இந்த சிப்பிகள் உறுதி செய்கின்றன.

இவற்றின் வடிகட்டுதல் திறன்களைத் தாண்டி, சுற்றுச்சூழல் அமைப்புகளின் கட்டமைப்பிலும் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. அதாவது, கடலுக்கு அடியில் உள்ள சிப்பிப் பாறைகள் பலவிதமான கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பாதுகாப்பை வழங்கும் இடமாகவும் இருக்கின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் ஆதரவாக உள்ளன இந்த சிப்பிகள்.

மேலும், சிப்பிகள் கரையோரங்களை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. சிப்பிப்பாறைகள் ஒரு இயற்கையான கரையோர தடுப்பானாகச் செயல்படுகிறது. இதனால் கரையோரங்கள் மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இது சுற்றியுள்ள நிலத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, முழு கடலோர சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
தினசரி உபயோகப் பொருட்களில் நிறுவனங்கள் உங்களை ஏமாற்றும் 5 கிரீன்வாஷிங் தந்திரங்கள்!
Oysters that remove pollution from the deep sea

கடலில் சிப்பிகள் இருப்பது பிற உயிரினங்களின் ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவுகிறது. கடலில் உள்ள சிறு சிறு துகள்களை சிப்பிகள் உண்கின்றன. அவை தன் ஓடுகளில் திசுக்களாக சேகரிக்கப்பட்டு, இறுதியில் இறந்ததும் பிற உயிரினங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் சுற்றுச்சூழலையும் ஏற்படுத்துகின்றன. எனவே, இது கடலின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து சமநிலைக்கு பங்களித்து பிற உயிரினங்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.

இந்த அளவுக்கு கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு சிப்பிகள் பெரிதும் உதவுகின்றன. எனவே, பெருங்கடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த உயிரினத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com