நமது இயற்கை சூழலின் மறைமுகக் காவலர்கள்: வௌவால்களின் முக்கியத்துவம்!

The importance of bats
Bats
Published on

ரங்களில் தலைகீழாகத் தொங்கும், இரவில் அதிசய ஒலியை எழுப்பி எதிர்வினைப் பெறும் இந்த வௌவால்கள் பலருக்கும் மர்மமான மற்றும் ஓரளவு பயமூட்டும் உயிரினமாகவே தோன்றும். ஆனால், அவை இயற்கை சூழலின் மறைமுக காவலர்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை.

1. பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிபுணர்கள்: வௌவால்கள் மிகவும் திறமையான பூச்சிகளைச் சாப்பிடும் உயிரினமாகும். ஒரே வௌவால் ஒரு இரவில் நூற்றுக்கணக்கான கொசு, எறும்பு, புழுக்கள் மற்றும் வேளாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்ணக்கூடியது. இதனால் விவசாய நிலங்களில் வேதி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் அளவு குறைக்கப்படுவதுடன், இயற்கையான பூச்சி கட்டுப்பாடும் ஏற்படுகிறது.

2. மலர்களைத் தூவும் தூதுவர்: பழ வௌவால்கள் மலர்களின் மீது உள்ள தேனை அருந்தும்போதே அவற்றைத் தூவுகின்றன. இந்தத் தூவல் செயல்முறையின் மூலம் மாவுப்பழம், வாழைப்பழம், அகேவ் (Agave) போன்ற பயிர்கள் சரிவர வளர முடிகிறது. வௌவால்கள் இல்லையென்றால் இந்தப் பயிர்களின் இன வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது உண்மை.

இதையும் படியுங்கள்:
மூலிகை சாகுபடியில் வெற்றி தரும் அஸ்வகந்தா!
The importance of bats

3. விதைகளைப் பரப்பும் வீரர்கள்: பழங்களை உண்ணும் வௌவால்கள் அதன் விதைகளை உடலில் சேர்த்துக்கொண்டு பறப்பதோடு மட்டுமல்லாமல், சிக்கலான காடுகளிலும் வீசியிருக்கின்றன. குறிப்பாக, அழிந்த காடுகளில் புது மரங்கள் வளர இந்த விதை பரப்புதல் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவை காடுகளை மீளச் சீரமைக்கும் இயற்கை புனரமைப்பாளர்கள் எனலாம்.

4. மருந்தியல் விஞ்ஞானத்திற்கு மாபெரும் பங்களிப்பு: வௌவால்களின் உடல் செயல்பாடுகள், நோய்களுக்கு எதிரான தற்காப்புச் செயல்கள் மற்றும் இரத்த உறைதல் எதிர்ப்புப் பண்புகள் இவை அனைத்தும் மருத்துவ ஆராய்ச்சிக்கு புதிய வழிகளைத் திறக்கின்றன. Vampire bat வகையின் நொதிகளிலிருந்து தயாரிக்கப்படும் ரசாயனங்கள் இதயக் கோளாறுகள், இன்சுலின் மற்றும் ரத்தக் கிளாட்டிங் மருந்துகளில் பயன்படுகின்றன.

5. சுற்றுச்சூழலுக்கு சமநிலை தரும் சக்தி: வௌவால்கள் இயற்கை சுழற்சி முறையின் ஒரு அத்தியாவசிய சங்கிலி. பூச்சி - மரம் – மலர் - மனிதன் எனும் சூழலியல் வலையில் இவை ஒரு மத்திய பாலமாக செயல்படுகின்றன. அவை இல்லாமை சுற்றுச்சூழலில் கவலைக்கிடமான இடைவெளிகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டை அழகாக்கும் கிளிகள்: பராமரிப்பு மற்றும் பழக்க வழக்கங்கள்!
The importance of bats

சுவாரஸ்யமான வௌவால்கள்:

1. வௌவால்கள் இரவில் மட்டுமே இயங்கும் ஒரே பறக்கும் பாலூட்டி (Mammal) வகை. அதனுடைய இரவு இயல்பால் (nocturnal) பிரபலமானவை.

2. பார்வைத் துல்லியம் குறைவாக இருந்தாலும், ஒலி அலைகளை அனுப்பி எதிர் பொருள்களின் இடம், தொலைவு, வடிவம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் நுண்ணறிவு கொண்டவை வௌவால்கள்.

3. வௌவால்களின் இறக்கைகள் நீண்ட விரல்களுடன் கூடிய மாற்றம் செய்யப்பட்ட முன்கைகளே!

4. வௌவால்கள் தங்கள் உடற்கட்டமைப்பால் கிளை அல்லது குடிசையிலிருந்து பறக்க எளிதாக இருக்க தலைகீழாகத் தொங்குகின்றன.

5. ‘Vampire Bats’ எனப்படும் மூன்று வகை வௌவால்கள் இரத்தத்தை மட்டுமே அருந்தும் (முதன்மையாகப் பூனைகள், மாடுகள் போன்ற மிருகங்கள்). ஆனால், மனிதர்களுக்கு ஆபத்தில்லாதவை.

இதையும் படியுங்கள்:
இவை தேனீக்கள் அல்ல: உங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கதண்டுகள்!
The importance of bats

6. அமெரிக்காவின் Bracken Cave என்ற இடத்தில் 2 கோடி வௌவால்கள் வசிக்கின்றன. இது உலகின் மிகப்பெரிய வௌவால் கூட்டமாகும்!

7. சில வௌவால்கள் பழங்கள், சில பூச்சிகள், சில மீன்கள், சில தாவர ரசம் இவற்றைச் சாப்பிடுகின்றன.

8. சிறிய வௌவால்கள் கூட 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும். இது ஓர் அதிசய சாதனை!

இயற்கை தரும் பல ஆச்சரியங்களில் வௌவால் மிக முக்கியமான ஒன்றாகும். அதிகமாக வெளிச்சத்திற்கு வராத பங்களிப்பாளராக வௌவால்கள் இருக்கின்றன. இவை மரபணு ஆராய்ச்சி முதல் வேளாண் பாதுகாப்பு வரை, பூச்சி கட்டுப்பாடு முதல் மருந்தியல் கண்டுபிடிப்பு வரை பூமிக்கே பயனுள்ள ஒரு மறைமுக சூழலியல் காவலரே என்பதை புரிந்துகொள்வது நம் கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com