இந்தியாவில் 'பால் பள்ளத்தாக்கு' எங்கிருக்கிறது தெரியுமா?

Doodhpathri
Doodhpathri
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்தியாவின் ஒன்றியப் பகுதியான ஜம்மு - காஷ்மீரிலுள்ள ஒரு மலை வாழிடத்தின் பெயர் தூத்பாத்ரி (Doodhpathri) எனப்படுகிறது. இது பட்காம் மாவட்டத்தின் பீர்வா பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,730 மீட்டர் (8,960 அடி) உயரத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. ஒன்றியப் பகுதியின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 42 கி.மீ. (26 மைல்) தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான பட்காமிற்கு 22 கி.மீ. (14 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

"தூத்பாத்ரி" என்ற பெயருக்கு பால் பள்ளத்தாக்கு என்று பொருள். இப்பகுதிக்கு இப்பெயர் வந்தததற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, காஷ்மீரின் புகழ் பெற்ற துறவியான ஷேக் உல் ஆலம் ஷேக் நூர் தின் நூரானி இங்கு பிரார்த்தனை செய்திருக்கிறார். ஒரு முறை அவர் பிரார்த்தனை செய்வதற்கு, புல்வெளிகளில் தண்ணீரைத் தேடிய போது, ஒரு குச்சியால் தரையில் குத்தியிருக்கிறார். அந்த இடத்திலிருந்து தண்ணீருக்குப் பதிலாக, பால் வந்ததால், இப்புல்வெளிப் பகுதிக்கு, பால் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படும் "தூத்பத்ரி" என்ற பெயர் வந்தது என்று அந்தக் கதை சொல்கிறது.

உண்மையில் இங்குள்ள புல்வெளிகளில் பாயும் நீர் தொலைவிலிருந்து பார்க்கும் போது பாலின் வெண்மையான நிறத்தைக் கொண்டுள்ளது. மேலும், ஆண்டு முழுவதும் மிகவும் குளிராக இருக்கிறது. பரந்த புல்வெளிகளுக்கு மேல் பசுமையான புற்களும், பெரிய கற்களின் மீது ஓடும் நீரோடைகளும் அதன் அழகை மேலும் அதிகரிக்கின்றன. தூத்பத்ரி, சாங் பகுதி வரை பல வண்ண மலர்களின் பன்முகத்தன்மை கொண்ட புல்வெளி நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற தோசா மைதானம் இதன் மேற்கில் அமைந்துள்ளது.

இமயமலையின் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் ஒரு கிண்ண வடிவிலான பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து 2,730 மீ (8,957 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது பனி மூடிய மலைகளாலும், பைன், தேவதாரு , போன்ற மரங்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்தப் புல்வெளிகள் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
சந்தோஷ நிம்மதி தரும் 'அமைதிப் பள்ளத்தாக்கு' - இயற்கை அற்புதத்தின் உச்சம்!
Doodhpathri

தூத்பத்ரிக்கு நிரந்தர குடியேற்றம் என்பது இல்லை. மேலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, குளிர்காலத்தில் இதை அணுக முடியாது. கோடைக்

காலத்தில் பட்காம் மாவட்டத்தின் சமவெளிகளில் இருந்து இடையர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து வந்து இங்கு சுமார் ஆறு மாதங்கள் வரை தங்கியிருப்பார்கள்.

ஸ்ரீநகர் அல்லது ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து தூத்பத்ரியை கார் அல்லது பேருந்து மூலம், ஸ்ரீநகர் - பட்காம் - கன்சாஹிப் - இரையார் வழியாக மொத்தம் சுமார் 42 கிமீ (26 மைல்) கடந்து 2 முதல் 3 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும்.

இதையும் படியுங்கள்:
இயற்கை கொஞ்சும் வட்டவடா பள்ளத்தாக்கு! போக அனுமதி வேணுமே!
Doodhpathri
logo
Kalki Online
kalkionline.com