'உடுப்பி மட்டு குல்லா' - இது தலையில் மாட்ட அல்ல!

Udupi mattu gulla
Udupi mattu gulla
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உடுப்பி மட்டு குல்லா (Udupi mattu gulla) எனும் பச்சை நிறக் கத்தரிக்காய், கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள மட்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்தக் கத்தரிக்காய் மற்ற இடங்களைப் போன்று ஊதா நிறத்தில் இல்லாமல், பச்சை நிறத்திலிருப்பது அதன் தனித்தன்மையை காட்டுகிறது. நிறத்தில் மட்டுமின்றி சுவையிலும் தனித்தன்மை கொண்டதாக இருக்கும் இந்த பச்சை நிற கத்தரிக்காய்.

மற்ற இடங்களில் வளர்க்கப்படும் ஊதா கத்தரிக்காயைப் போலில்லாமல், ‘மட்டு குல்லா’ எனப்ப்படும் இக்கத்தரிக்காய் பச்சை நிறத்தில் உள்ளது. 'குல்லா' என்ற சொல் குறிப்பிடுவது போல, இது கோள வடிவத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
அஜித்துக்கு இப்படி ஒரு பழக்கமா? 25 கிலோ உடல் எடை குறைந்து தேகம் மெலிந்தது! 
Udupi mattu gulla

கர்நாடக மாநிலத்தில், உதயவர் நதிக்கும் சுவர்ணா நதிக்கும் இடைப்பட்ட 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த பச்சை நிறக் கத்தரிக்காய் பயிரிடப்பட்டிருக்கிறது. உடுப்பி அருகிலுள்ள மட்டு கிராமத்தினைத் தவிர, அருகிலுள்ள பங்களா, கொப்ளா, கைபுஞ்சால் கிராமங்களிலும் இக்கத்தரிக்காய் விளைவிக்கப்படுகிறது. இது பருவகால காய்கறியாகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பருவமழைக்குப் பிறகு வளர்க்கப்படுகிறது. குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டுள்ள இக்கத்தரிக்காய் தனித்துவமான சுவையுடையது.

மட்டு குல்லா உடுப்பி சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்கறியாக உள்ளது. குறிப்பாக, உடுப்பி சாம்பாரில் இக்காய் பயன்படுத்தப்படுகிறது. மட்டு குல்லாவின் அசாதாரண மற்றும் தனித்துவமான சுவை மற்றும் உற்பத்திக்காக பிரத்தியேக இருப்பிடத்திற்காக, மட்டு குல்லா எனப்படும் பச்சைக் கத்தரிக்காய்க்கு, 2011 ஆம் ஆண்டு, புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 வழிகள்!
Udupi mattu gulla

பூச்சித் தாக்குதல்கள் மற்றும் பி.டி.கத்தரிக்காயின் வருகை போன்ற பல்வேறு காரணங்களால் அண்மைய ஆண்டுகளில் மட்டு குல்லாவின் உற்பத்தி குறைந்து போயிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com