தேனிச் செங்கரும்பு இனிப்போ இனிப்பு!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு உற்பத்தி செய்யப்பட்டாலும், தேனியில் உற்பத்தியாகும் செங்கரும்புக்கு மதிப்பு அதிகம்தான்.
Sugarcane
Sugarcane
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் செங்கரும்பு பொங்கல் பண்டிகைக் காலத்தில் மட்டுமே சாப்பிடக் கூடியதாக இருக்கிறது. தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று அந்த மூன்று நாட்களும் இந்த செங்கரும்பை நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம்.

பொங்கல் திருநாளின் போது, நாம் சுமார் மூன்று நாட்களுக்கு கரும்பைச் சாப்பிடுகிறோம். ஆனால், இந்தக் கரும்பு உற்பத்திக்கு விவசாயிகள் குறைந்தது பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. கரும்பு உற்பத்திக்கு விவசாயத்தில் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.

  • கரும்பு உற்பத்திக்கு முன்பாக, ஒரு அரும்புடைய கரணைகளைக் கொண்டு நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.

  • 25 முதல் 35 நாட்களான இளங்கரணைகளை மரபு வழியில், 3 அரும்புகளுடைய கரணைகளை நேரடியாக நடுகின்றனர். இம்முறையில் பயிர் இறப்பு விகிதம் சற்றேக் குறைவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கரும்போ கரும்பு!
Sugarcane
  • நடவு வயலில் அகன்ற இடைவெளியான 5 x 2 அடி பாதுகாத்தலினால் 75 சதவிகிதம் விதை தேவையைக் குறைக்க முடிகிறது. அதாவது, ஏக்கருக்கு 16000, 3 அரும்புடைய கரணைகள் நடவு செய்யப்படுகின்றன. மரபு வழி இடைவெளி 1.5 x 2.5 அடி என்கிற அகன்ற இடைவெளி அமைப்பு பயிருக்கு எளிதான காற்று மற்றும் சூரிய ஒளி ஊடுறுவதலுக்கு வழிவகிக்கிறது. இதனால் சிறந்த மற்றும் ஆரோக்கியமான கரும்பு வளர்ச்சி ஏற்படுகிறது. மேலும் ஊடு சாகுபடி முறைகளும் எளிதாக செயல்பட முடிகிறது.

  • போதுமான ஈரத்தன்மையை வழங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் 40 சதவிகிதம் நீரை சேமிக்க முடிகிறது. ஒரு கிலோ கரும்பு உற்பத்திக்கு 2500 லிட்டர் நீரை பயிர்ச்செடி உட்கொள்கிறது.

  • இயற்கை முறை ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பை வலியுறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 253.70 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு!
Sugarcane
  • மேலும், ஊடுபயிர் சாகுபடி முறைகளை வழக்கப்படுத்துகிறது. உருளைக்கிழங்கு, தட்டைப்பயிறு, சீமைக் கொத்தவரை, கொண்டைக்கடலை, நீர்முலாம் பழம், கத்திரிக்காய் போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடுதல் பரிந்துரைக்கப்பட்டாலும், தேனியில் ஊடுபயிர்கள் பயிரிடுவதில்லை.

  • தேவையான இயற்கை உரம் போட்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம், களைகளை எடுப்பது, தோகைகளை உரித்துவிடுவது என இருந்தால் போதும். பத்து மாதங்களில் சுவையான இயற்கை செங்கரும்பு அறுவடைக்கு தயாராகிவிடுகிறது.

  • மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றும் போது, கரும்பின் நீளம் மற்றும் எடை அதிகமாகிறது. ஒரு செங்கரும்பு சராசரியாக 7 அடி முதல் 10 அடி வரை வளர்கின்றது. குறைந்தது ஒரு பயிருக்கு 20 முதல் 25 தூர்கள் மற்றும் ஒரு பயிருக்கு 9 முதல்10 கரும்புகளையும் பெற முடிகிறது.

இதையும் படியுங்கள்:
கரும்பு வாங்கும்போதும் உண்ணும்போதும் கவனிக்க வேண்டியவை!
Sugarcane

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு உற்பத்தி செய்யப்பட்டாலும், தேனியில் உற்பத்தியாகும் செங்கரும்புக்கு மதிப்பு அதிகம்தான். கரும்பு என்றாலே, தேனிக் கரும்புதான் என்று சொல்லும் அளவுக்கு, தேனியில் விளையும் கரும்பில் இனிப்பு சுவை அதிகமிருக்கும். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், கூழையனூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனத்தின் மூலம் அவை நன்றாக விளைச்சல் அடைகிறது. இங்கு விளையும் கரும்பின் இனிப்புச் சுவைக்காக, வணிகர்கள் இங்கிருந்து கரும்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com