வெண்பொங்கல் தெரியும், அது என்ன புளி பொங்கல்… வாங்க தெரிஞ்சுக்கலாம்!

சட்னி, சாம்பார் எதுவுமே இல்லாமல் காலை உணவை அசத்தலாக மாற்றும் கமகமக்கும் புளி பொங்கல் சுலபமாக எப்படி செய்வது என தெரிந்துகொள்ளுங்கள்.
புளி பொங்கல் puli pongal recipe
புளி பொங்கல் puli pongal recipe
Updated on

வழக்கமான வெண்பொங்கலின் மிளகு, சீரகச் சுவையிலிருந்து சற்று மாறி, நாவிற்கு இதமாக புளிப்பும் காரமுமாக ஏதாவது சாப்பிட வேண்டும் எனத் தோன்றினால், அதற்குச் சிறந்து புளி பொங்கல். இது புளியோதரை மற்றும் பொங்கல் ஆகிய இரண்டின் சுவையையும் ஒருங்கே தரக்கூடிய ஒரு அற்புதமான பாரம்பரிய உணவு. 

இதைச் செய்வதற்கு பெரிய அளவில் நேரமோ அல்லது தனியாக சைட் டிஷ்ஸோ தேவையில்லை. ஒரு அப்பளம் அல்லது வடகம் இருந்தாலே போதும், தட்டு நிமிடத்தில் காலியாகிவிடும். கோயில் பிரசாத சுவையில், வீடே மணக்கும் அளவிற்கு இந்த ரெசிபியை மிக எளிதாக எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி - 1 கப்

  • புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

  • நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

  • கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

  • கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

  • வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 4

  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

  • பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

  • வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - 2 கொத்து

  • வெல்லம் - ஒரு சிறிய துண்டு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

முதலில் அரிசியை நன்றாகக் கழுவி சுமார் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளுங்கள். புளியை இரண்டு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ச்சவும். 

புளி பொங்கல் puli pongal recipe
புளி பொங்கல் puli pongal recipe

நல்லெண்ணெய் பயன்படுத்துவதுதான் அசல் சுவையைக் கொடுக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்துப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பருப்புகள் சிவந்ததும், கிள்ளி வைத்த காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் ஆந்திரா ஸ்பெஷல் உருளைக்கிழங்கு தட்டைக் கொழுக்கட்டை!
புளி பொங்கல் puli pongal recipe

தாளிப்பு மணம் வந்தவுடன், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றுங்கள். ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்பது சரியான அளவு, எனவே புளித்தண்ணீருடன் தேவையான அளவு சாதாரண தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். 

தண்ணீர் நன்றாகத் தளதளவெனக் கொதித்து, புளியின் பச்சை வாசனை சென்ற பிறகு, ஊறவைத்துள்ள அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும். மிதமான தீயில் அரிசி குழைய வேக வேண்டும். அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடுங்கள்.

அரிசி முக்கால் பதம் வெந்து தண்ணீர் வற்றி வரும்போது, வறுத்து அரைத்த வெந்தயப் பொடி மற்றும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்துக் கிளறுங்கள். வெல்லம் சேர்ப்பது புளிப்பு மற்றும் காரத்தைச் சமநிலைப்படுத்தி அபாரமான சுவையைத் தரும். சாதம் நன்றாகக் குழைந்து சுருண்டு வரும்போது, மீண்டும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, ஒரு முறை கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள். 

இதையும் படியுங்கள்:
செட் தோசைக்கு ஹோட்டல் ஸ்டைல் வடை கறி வீட்லயே செய்வது இவ்வளவு ஈசியா?
புளி பொங்கல் puli pongal recipe

சுடச்சுட, நாவில் எச்சில் ஊறவைக்கும் கமகமக்கும் புளி பொங்கல் தயார். இதை ஒரு பத்து நிமிடம் மூடி வைத்துவிட்டுச் சாப்பிட்டால், புளிப்பு முழுமையாக சாதத்தில் இறங்கி சுவை தேவாமிர்தமாக இருக்கும். இன்றைய இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com