வெள்ளை அரிசியை தூக்கி போடுங்க... இந்த பாரம்பரிய அரிசி வகை நன்மைகளைப் பாருங்க!

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி, உடல் வலிமையை அதிகரிக்கும் தமிழ்நாட்டின் சிறந்த 9 பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அவற்றின் வியக்க வைக்கும் மருத்துவ நன்மைகள் இதோ.
 Traditional rice பாரம்பரிய அரிசி
Traditional rice பாரம்பரிய அரிசிAI Image
Updated on

ஒரு காலத்தில் நம் பாட்டி தாத்தா காலத்தில் நோய்கள் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் தான். குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் பயிரிடப்பட்டன. 

இன்று நவீன வாழ்க்கையின் காரணமாக நாம் பழைய உணவுப் பழக்கவழக்கங்களை மெல்ல மெல்ல மீண்டும் தேடிக் கொண்டிருக்கிறோம். அதிலும் இந்த பழங்கால நெல் வகைகளுக்கு இப்போ செம டிமாண்ட். அவை நமது உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் பலத்தையும் வாரி வழங்குகின்றன.

ஆரோக்கியத்தைக் காக்கும் கருப்பு மற்றும் சிவப்பு அரிசிகள்!

சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா இளைஞர்களுக்கு மிகவும் ஏற்றது. இது உடலில் உள்ள நரம்புகளை முறுக்கேற்றி நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். இது அல்சர் போன்ற பிரச்சனைகளையும் எளிதாக சரிசெய்யும் ஒரு அற்புதமான இயற்கை மருந்தாகும். அதேபோல, சோழ மன்னர்கள் விரும்பிச் சாப்பிட்ட கருப்பு கவுனி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சூப்பர் ஹீரோவாக செயல்படுகிறது. இது உடலில் இன்சுலின் சீராகச் சுரக்க உதவி, உடற்பருமன் குறையவும் வழிவகுக்கிறது.

மற்றொரு சிறந்த வகை காட்டுயானம். சுமார் ஏழு அடி உயரம் வரை வளரும் இந்த நெல் வகை, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகச் சிறந்தது. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை முற்றிலும் போக்கும். மேலும் இதிலுள்ள சத்துக்கள் காயங்களை விரைவில் ஆற்றவும் நமது தோலில் சுருக்கங்கள் விழாமல் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 Traditional rice பாரம்பரிய அரிசி
Traditional rice பாரம்பரிய அரிசிAI Image

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற அரிசிகள்!

பெண்களுக்கான ஸ்பெஷல் என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் நல்லது. இது ஹார்மோன் பிரச்சனைகளைச் சரிசெய்து, சுகப்பிரசவம் ஆகவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை வைத்து புட்டு, இடியாப்பம் போன்ற சுவையான சிற்றுண்டிகளை ஈஸியாக செய்யலாம். அதேபோல, சீரக சம்பா உணவு எளிதாகச் செரிமானம் ஆகப் பெரிதும் உதவும். பிரியாணி செய்ய இதுவே பலரின் முதல் தேர்வாக இன்றும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் 'பாசிப்பருப்பு உருண்டை': இளமையைத் தக்கவைக்கும் அற்புத உணவு!
 Traditional rice பாரம்பரிய அரிசி

இளமையைத் தக்கவைக்க விரும்பும் பலருக்கும் தூயமல்லி ஒரு வரப்பிரசாதமாகும். இது உள் உறுப்புகளைப் பாதுகாத்து உடலை எப்போதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதேபோல கிச்சிலி சம்பா சருமத்தைப் பளபளப்பாக்கி, எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது. இந்த இரண்டு வகைகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் சாப்பிட மிகவும் உகந்தவை. இவற்றை மதிய உணவிற்குப் பயன்படுத்தினால் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

தனித்துவமான சுவையும் நன்மைகளும் கொண்ட அரிசி ரகங்கள்!

இலுப்பைப்பூ சம்பா உடலின் சூட்டைக் குறைத்து மூட்டு வலியைப் போக்கக்கூடிய ஒரு அருமையான வகையாகும். இதில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால், பழுதடைந்த செல்களை எளிதாகப் புதுப்பிக்கிறது. அதேபோல நவரை அரிசி, அனைத்து நோய்களுக்கும் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இது எலும்புகளை இரும்பு போல வலுவாக்குவதோடு, உடலில் உள்ள கெட்ட நச்சுக்களையும் முழுமையாக வெளியேற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
பழங்களை எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்? நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதோ!
 Traditional rice பாரம்பரிய அரிசி

நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற இந்த பாரம்பரிய அரிசி வகைகள் உண்மையில் விலைமதிப்பற்ற பல மருத்துவப் பொக்கிஷங்களாகும். வெறும் சுவைக்காக மட்டுமில்லாமல், ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இவற்றை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். 

மீண்டும் பழைய உணவுப் பழக்கங்களுக்கு மாறுவதன் மூலம், பல்வேறு நவீன நோய்களிலிருந்து நம்மை நாமே மிக எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே, முடிந்தவரை தினமும் ஒரு வகையான சத்தான மேலே குறிப்பிட்ட அரிசி தானிய உணவைச் சாப்பிட்டு நோயற்ற வளமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com