

நம்மில் பலரும் வீட்டில் சாம்பார் வைக்க வேண்டும் என்றால் உடனே கடைக்குச் சென்று, நல்ல பிராண்டு சாம்பார் பொடியைப் பார்த்து வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அதை வாங்கி வைத்திருப்பதே ஒரு வசதியும் பெருமையும் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், அவசர நேரத்திற்கு கடையில் வாங்கும் சாம்பார் பொடி பயன்படுத்திக் கொள்ளலாம்; அதில் தவறில்லை.
ஆனால், வீட்டிலேயே நமக்குத் தேவையான பொருட்களைத் தரமாகத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, சரியான பதத்தில் வறுத்து சாம்பார் பொடி தயாரித்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த பழக்கம். நம் கையால் தயாரித்த பொடியின் சுவையும் மணமும் மட்டுமல்ல, அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
வீட்டில் தயாரிக்கும் சாம்பாருக்கும், கடைகளில் கிடைக்கும் சாம்பாருக்கும் சுவையில் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் பொருட்களிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.