திருமணத்தின் போது, மணமக்கள் செய்துகொள்ளும் ஏழு வேண்டுதல்கள் தெரியுமா?

Indian Wedding
Indian Wedding
Published on

இந்து சமயத் திருமணத்தில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டிய பிறகு, மணமக்களாக அக்னியை ஏழு முறை வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது. அக்கினியை வலரும் வரும் போது செய்யும் ஏழு வேண்டுதல்கள் என்னவென்று தெரியுமா?

1. முதல் சுற்றில் மணமக்கள் ஏராளமான ஊட்டமளிக்கும் மற்றும் தூய்மையான உணவுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள்.

2. இரண்டாவது சுற்றில் மணமக்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள். அவர்கள் உடல், ஆன்மீக மற்றும் மன ஆரோக்கியத்தை கடவுளிடம் வேண்டுகிறார்கள்.

3. மூன்றாவது சுற்றில் மணமக்கள் செல்வத்திற்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள கடவுளிடம் வலிமையைக் கேட்கிறார்கள். மேலும், அவர்கள் செல்வம் பெற ஒன்றாக நடக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்கள்.

4. நான்காவது சுற்றில் மணமக்கள், ஒருவருக்கொருவர் மற்றும் அந்தந்த குடும்பங்கள் மீது அன்பும் மரியாதையும் அதிகரிக்கக் கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உணவு சமைக்க Non stick பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?
Indian Wedding

5. ஐந்தாவது சுற்றில் மணமக்கள் கடவுளிடமிருந்து அழகான, வீரம் மற்றும் உன்னதமான குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்கிறார்கள்.

6. ஆறாவது சுற்றில் தம்பதியினர் ஒருவருக்கொருவர் அமைதியான நீண்ட ஆயுளைக் கேட்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கூகுளில் இந்த 3 விஷயங்களைத் தேடினால் ஜெயில் தண்டனை நிச்சயம்!
Indian Wedding

7. இறுதி மற்றும் ஏழாவது சுற்றில் மணமக்கள் தங்களுக்கு இடையே தோழமை, ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் புரிதலுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள். தங்களை நண்பர்களாக்கி வாழ்நாள் முழுவதும் நட்பைக் கடைப்பிடிக்கும் பக்குவத்தைத் தருமாறு கடவுளிடம் வேண்டுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் ஏழு வேண்டுதல்கள் செய்த பிறகு நண்பர்களாகி விட்டதாகவும், அவர்கள் வாழ்க்கையில் தங்கள் நட்பை முறித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் கணவர் தனது புதிய மனைவியிடம் கூறுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com