திருமணத்தின் போது, மணமக்கள் செய்துகொள்ளும் ஏழு வேண்டுதல்கள் தெரியுமா?

Indian Wedding
Indian Wedding
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்து சமயத் திருமணத்தில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டிய பிறகு, மணமக்களாக அக்னியை ஏழு முறை வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது. அக்கினியை வலரும் வரும் போது செய்யும் ஏழு வேண்டுதல்கள் என்னவென்று தெரியுமா?

1. முதல் சுற்றில் மணமக்கள் ஏராளமான ஊட்டமளிக்கும் மற்றும் தூய்மையான உணவுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள்.

2. இரண்டாவது சுற்றில் மணமக்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள். அவர்கள் உடல், ஆன்மீக மற்றும் மன ஆரோக்கியத்தை கடவுளிடம் வேண்டுகிறார்கள்.

3. மூன்றாவது சுற்றில் மணமக்கள் செல்வத்திற்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள கடவுளிடம் வலிமையைக் கேட்கிறார்கள். மேலும், அவர்கள் செல்வம் பெற ஒன்றாக நடக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்கள்.

4. நான்காவது சுற்றில் மணமக்கள், ஒருவருக்கொருவர் மற்றும் அந்தந்த குடும்பங்கள் மீது அன்பும் மரியாதையும் அதிகரிக்கக் கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உணவு சமைக்க Non stick பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?
Indian Wedding

5. ஐந்தாவது சுற்றில் மணமக்கள் கடவுளிடமிருந்து அழகான, வீரம் மற்றும் உன்னதமான குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்கிறார்கள்.

6. ஆறாவது சுற்றில் தம்பதியினர் ஒருவருக்கொருவர் அமைதியான நீண்ட ஆயுளைக் கேட்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கூகுளில் இந்த 3 விஷயங்களைத் தேடினால் ஜெயில் தண்டனை நிச்சயம்!
Indian Wedding

7. இறுதி மற்றும் ஏழாவது சுற்றில் மணமக்கள் தங்களுக்கு இடையே தோழமை, ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் புரிதலுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள். தங்களை நண்பர்களாக்கி வாழ்நாள் முழுவதும் நட்பைக் கடைப்பிடிக்கும் பக்குவத்தைத் தருமாறு கடவுளிடம் வேண்டுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் ஏழு வேண்டுதல்கள் செய்த பிறகு நண்பர்களாகி விட்டதாகவும், அவர்கள் வாழ்க்கையில் தங்கள் நட்பை முறித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் கணவர் தனது புதிய மனைவியிடம் கூறுகிறார்.

logo
Kalki Online
kalkionline.com