உங்க வீட்டுப் பக்கம் சின்னப் பாம்பே நடமாடலையா? அப்போ ராஜநாகம் இருக்குன்னு அர்த்தம்! உஷார்!

king cobra
king cobra
Published on

மழைக்காலம் வந்துவிட்டது! பூமி குளிர்ந்தாலும், இந்த நேரத்தில் நமக்கு ஒரு பெரிய தலைவலியும் கூடவே வரும். அதுதான் பாம்புகளின் தொல்லை. மழைநீர் பாம்புகளின் வளைகளுக்குள் புகுந்துவிடுவதால், அவை உயிர் பிழைக்கப் பாதுகாப்பான, உலர்ந்த இடங்களைத் தேட ஆரம்பிக்கும். 

அந்தத் தேடல் பெரும்பாலும் நமது வீடுகள், கொட்டகைகள், அல்லது விறகு அடுக்கி வைத்திருக்கும் இடங்களில் வந்து முடிகிறது. பாம்புகளைப் பார்த்தால் நமக்கு இயல்பாகவே ஒரு பயம் வரும். ஆனால், சில சமயங்களில் அந்தப் பயமே பெரிய ஆபத்தாகிவிடுகிறது. இந்த மழைக்காலத்தில் பாம்புகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று பார்ப்போம்.

ராஜநாகம்: பாம்புகளை வேட்டையாடும் தலைவன்!

நம்மில் பலர் என்ன நினைப்போம் என்றால், "எங்க வீட்டுப் பக்கம் சின்னச் சின்ன பாம்புகூட நடமாடுவதில்லை, அதனால் நாங்க ரொம்பப் பாதுகாப்பாக இருக்கிறோம்" என்று. ஆனால், நிபுணர்கள் சொல்வது வேறு. 

உங்கள் தோட்டத்திலோ அல்லது வீட்டைச் சுற்றியோ சாதாரண சாரைப் பாம்புகள் அல்லது மற்ற சிறிய பாம்புகளே தென்படவில்லை என்றால், அங்கே ஒரு 'பெரிய இடத்துப்' பாம்பு தங்கியிருக்க வாய்ப்புள்ளது. அதுதான் ராஜநாகம் (King Cobra).

ராஜநாகம் ஒரு விசித்திரமான குணம் கொண்டது. அதற்கு "ஓபியோஃபேஜி" (Ophiophagy) என்று பெயர். அதாவது, இதன் முக்கிய உணவே மற்ற பாம்புகள்தான். இது விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள் என எதையும் விட்டுவைக்காது, அத்தனையையும் வேட்டையாடிச் சாப்பிட்டுவிடும். 

இதன் அசுர பலமும், கொடிய விஷமும் மற்ற பாம்புகளை எளிதில் வீழ்த்திவிடும். எனவே, உங்கள் பகுதியில் மற்ற பாம்புகளே இல்லை என்றால், அது ஒருவேளை ராஜநாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாக இருக்கலாம் என்பதற்கு அது ஒரு அறிகுறி!

இதையும் படியுங்கள்:
பாம்புக்கடியால் இறந்தவர்களில் பலர் பயத்தால் இறந்தவர்களே! பாம்பு கடித்தால்...
king cobra

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • வீட்டைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்காமல், புற்களை வெட்டிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • பழைய பானைகள், கல் குவியல்கள், குப்பைக் கூளங்கள் இருந்தால், அது பாம்புகள் ஒளிந்துகொள்ள வசதியான இடமாகிவிடும். உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.

  • மழைக்காலத்தில் இரவில் வெளியே நடக்கும்போது, கையில் டார்ச் லைட் இல்லாமல் போகவே போகாதீர்கள். காலணிகள் அணிவது மிகமிக அவசியம்.

  • தண்ணீர் தேங்கும் இடங்கள், வடிகால்களைச் சுத்தமாக வைத்திருங்கள். ஈரப்பதம் பாம்புகளை ஈர்க்கும்.

கடிபட்டுவிட்டால் என்ன செய்வது?

ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், தயவுசெய்து பதற்றமே அடையாதீர்கள். நீங்கள் பதற்றப்பட்டால், விஷம் உடலில் வேகமாகப் பரவும். டாக்டர் அனுராக் அகர்வால் போன்ற நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், பாம்பு கடித்த இடத்திற்குச் சற்று மேலே ஒரு கட்டுப் போட வேண்டும். 

இதையும் படியுங்கள்:
திருமணம் குறித்து மனம் திறந்த சல்மான் கான்! கருத்துக்கு பலர் எதிர்ப்பு!
king cobra

ஆனால், இங்கேதான் முக்கியமான விஷயம். பலர் ரத்த ஓட்டமே நின்றுபோகும் அளவுக்கு மிக இறுக்கமாகக் கட்டிவிடுவார்கள். அது தவறு. அப்படிச் செய்தால், அந்த உறுப்புக்கே ரத்தம் செல்லாமல் அழுகிப் போகும் அபாயம் உள்ளது. 

விஷம், ரத்தத்தின் வழியாகப் பரவுவதை விட, நிணநீர் வழியாகவே மெதுவாகப் பரவும். எனவே, அந்த நிணநீர் ஓட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு லேசான அழுத்தத்துடன் கட்டினால் போதும். உடனே மருத்துவமனைக்கு விரைவதுதான் முதல் வேலை.

பாம்புகளைக் கண்டதும் அடித்துக் கொல்ல முயற்சிப்பது சட்டப்படி தவறு. அது நமக்கும் ஆபத்தானது. பாதுகாப்பான தூரத்திற்கு விலகிச் சென்று, உடனடியாக வனத்துறைக்கோ அல்லது பாம்பு பிடிப்பவர்களுக்கோ தகவல் கொடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com