தனி மனித உரிமை காக்கும் 'ஹேபியஸ் கார்பஸ் மனு', 'கேவியட் மனு'...

தனி மனித உரிமை பாதிக்கப்படும் போது, அக்குறையை நீக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தின் ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது.
Kerala government
Kerala government
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒருவரைச் சட்டத்திற்குப் புறம்பாக, வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ காவல்துறையினர் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் அடைத்து வைத்திருப்பதாகக் கருதினால், அந்த நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுவை ஆட்கொணர்வு மனு என்று தமிழிலும், ஆங்கிலத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு (Habeas Corpus Petition) என்றும் சொல்கின்றனர். ஹேபியஸ் எனும் மத்தியக் கால இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ‘நீ உயிருடன் இருக்கிறாய்’ என்று பொருளாகும்.

ஆட்கொணர்வு மனுவினை சமர்ப்பிப்பதன் மூலம், அந்நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது. தனி மனித உரிமை பாதிக்கப்படும் போது, அக்குறையை நீக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தின் ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு தனிமனிதனின் சுதந்திரம் தடை செய்யப்படும் போது, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்தத் தடை பற்றி விசாரித்து தக்க தீர்வு கோர உரிமை உள்ளது.

இதையும் படியுங்கள்:
விவாகரத்து பெற்ற பின்னர் அதை வாபஸ் பெறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? 
Kerala government

ஆட்கொணர்வு நீதிப் பேராணை முதலில் இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பொதுநலவாய (Commonwealth) நாடுகளிலும், ஏனைய பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு, தனிமனித உரிமைக்கு ஒரு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது.

இந்தியாவில் பொதுவாக, ‘ஆட்கொணர்வு மனு’ உயர்நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டு, உயர்நீதி மன்றங்களின் வழியாக அதற்கான பேராணை பிறப்பிக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் பேராணையினைக் காவல் துறையினரே பெரும்பான்மையாகச் செயல்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பாலியல் குற்றங்கள் குறித்து போக்சோ (POCSO) சட்டம் என்ன சொல்கிறது?
Kerala government

ஆட்கொணர்வு மனு மீது வழங்கப்பட்ட பேராணையில் குறிப்பிடப்பட்ட நபரை, நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது காவல் துறையின் கடமையாகும். அந்தச் சுதந்திரத் தடை சட்டத்துக்குப் புறம்பாக இருப்பின், அவர் விடுவிக்கப்படலாம். இதன் மூலம், தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து, அவர்களின் தனி மனித உரிமைகளைக் காக்க இயலும். இந்த ஆட்கொணர்வு மனு காணாமல் போனவர்களைக் கண்டறியவும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதேப் போன்று, நீதிமன்றங்களில் முன்னெச்சரிக்கை மனு (Caveat Petition) என்று ஒரு மனுவும் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன்னறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், பிரதிவாதிக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதைத் தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கேவியட் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிற்கு முன் எச்சரிக்கை என்று பொருளாகும்.

இதையும் படியுங்கள்:
‘தாமதிக்கப்படும் நீதி அநீதிக்கு சமம்’ - இதை உணர்வது எப்போது?
Kerala government

நீதிமன்றத்தில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு செயல் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம், தன்னை அல்லது நிறுவனத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பினை உடனடியாக வழங்கிவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்கின்றனர். முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்ற பின்னர்தான், அந்நீதிமன்றம் தொடர்புடைய வழக்கின் தீர்ப்பை வழங்குவதால், தனி மனிதர்களின் அல்லது நிறுவனத்தின் உரிமை காக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com