ஆச்சரியமூட்டும் சில மனோதத்துவ உண்மைகள்!

Some surprising psychological facts
Some surprising psychological facts
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on

* ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3,000 சிந்தனைகளைக் கொண்டிருப்பானாம். எண்ணங்கள் ஒருவரை ஆள்கிறது என்றால் அது மிகையில்லை.

* மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. மூன்று நாட்களுக்கு மேலும் கோபம் நீடித்தால், அவர்களிடம் அன்பு இல்லை என்பதைக் குறிக்கும்.

* முத்தம் கொடுத்தல், வாழைப்பழம், சாக்லேட் சாப்பிட்டால் சூயிங்கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உண்மை.

* பிறக்கும்போது நம் கண்கள் எந்த அளவுக்கு இருந்ததோ இறுதி வரை அதே அளவுதான் இருக்கும். ஆனால், காது மற்றும் மூக்கு அளவுகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை வளரும்.

இதையும் படியுங்கள்:
வால்நட்டிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்!
Some surprising psychological facts

* இனிப்புகளையும், சாக்லேட்டுகளையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ஆகவும், வெளிப்படையாகப் பேசும் சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.

* மூளையில் ஆண் மூளை, பெண் மூளை என்று தனித்தனியாகக் கிடையாது. மூளையை அவரவர் பழக்குவதில் உள்ளது.

* ஒருவர் சிங்கிளாக இருக்கும்போது சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் கவனிப்பார்கள் என மனோதத்துவ ஆய்வு கூறுகின்றது. சிறு வயதில் ஆண்களை விட பெண்களே வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுபவர்கள் ஆகவும் இருக்கிறார்கள்.

* உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும்போது பாட்டு பாடுவது. இவ்வாறு செய்யும்போது உண்மையில் மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து மனநிலை மேம்படும்.

இதையும் படியுங்கள்:
சர்வ பாப விமோசனம் தரும் சனி மகாபிரதோஷ வழிபாடு!
Some surprising psychological facts

* உண்மையான அன்பை ஒருவர் உங்களிடம் கொண்டிருந்தால் உங்களது வலியை, உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்னதான் வெளியே போலியாக சிரித்தாலும் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

* நேர்மறை எண்ணங்கள் கொண்டு ஒரு விஷயம் நடக்கும் என நம்பினால் நிச்சயமாக அது நடக்கும். எதிர்மறை எண்ணங்கள் நம்மை தவறான பாதைக்குதான் இட்டுச் செல்லும். எண்ணங்கள் வலுவானவை.

logo
Kalki Online
kalkionline.com