அக்னி வெயிலிலும் வாடாத நந்தவனம்! கோடையைச் சமாளிக்கும் 10 சூப்பர் செடிகள் இதோ!

summer-gardening-tips
summer-gardening-tips
Published on

யற்கையின் சுழற்சியில் கோடைகாலம் என்பது வெப்பத்தின் உச்சத்தைக் குறிக்கும் காலமாகும். குறிப்பாக இந்தியாவில், சூரியனின் தாக்கம் நிலத்தடி நீரையும் மண்ணின் ஈரப்பதத்தையும் வேகமாக உறிஞ்சிவிடும். இத்தகைய கடுமையான சூழலில், பெரும்பாலான செடிகள் வாடிவிடும் நிலையில், சில தாவரங்கள் மட்டும் இயற்கையாகவே வெப்பத்தைத் தாங்கி வளரும் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன.

இந்தக் கோடை வெப்பத்தைச் சமாளித்து, நம் இல்லத்தையும் தோட்டத்தையும் பசுமையாக வைத்திருக்க உதவும் தாவரங்களைப் பற்றியும் அவற்றைப் பராமரிக்கும் முறைகளைப் பற்றியும் இங்கு காண்போம்.

1.பூச்செடிகள் (Flowering Plants)

சாமந்தி / வாடாமல்லி (Gomphrena): இவை அதிக வெயிலைத் தாங்கும் தன்மை கொண்டவை. குறைந்த தண்ணீரில் கூட நீண்ட நாட்கள் வாடாமல் பூத்திருக்கும்.

பத்து மணி செடி (Portulaca / Moss Rose): சூரிய ஒளி பட்டவுடன் காலை 10 மணிக்கு மலரக்கூடிய இவை, வறட்சியைத் தாங்கி தரையோடு தரையாகப் படர்ந்து வளரும்.

அரளி (Oleander): சாலை ஓரங்களிலும் தோட்டங்களிலும் வளரக்கூடிய இது, கடுமையான வெயிலிலும் கொத்துக் கொத்தாகப் பூக்க வல்லது.

போகன்வில்லா (Bougainvillea / காகிதப்பூ): இதற்கு அதிக கவனிப்பு தேவையில்லை. எவ்வளவு வெயில் கிடைக்கிறதோ, அவ்வளவு அதிகமாகப் பூக்களைத் தரும்.

செம்பருத்தி (Hibiscus): இந்திய தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றது. இதற்கு நேரடி சூரிய ஒளி மிகவும் அவசியம்.

ஜினியா (Zinnia): கோடை காலத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு அற்புதமான தாவரமாகும்.  இவை நேரடி சூரிய ஒளியை விரும்புபவை. “வண்ணத்துப் பூச்சிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஜினியா செடிகள், குறைந்த பராமரிப்பில் நிறைந்த பூக்களைத் தரக்கூடியவை. அக்னி வெயிலிலும் சோர்வடையாமல் பூத்துக் குலுங்கும் இவை, கோடைக்காலத் தோட்டக் கலைக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.”

இதையும் படியுங்கள்:
கறை படிந்த பழைய வெள்ளை சாக்ஸை நிமிடங்களில் புதுசு போல மாற்றும் சீக்ரெட் ட்ரிக் இதோ!
summer-gardening-tips

2.மூலிகை மற்றும் காய்கறி செடிகள் (Herbs & Vegetables)

துளசி (Tulsi): கோடைகால வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய ஒரு புனிதமான மற்றும் மருத்துவ குணம் கொண்ட செடி.

கற்றாழை (Aloe Vera): மணற்பாங்கான இடங்களிலும் குறைந்த நீரிலும் செழித்து வளரும். இது காற்றைச் சுத்திகரிக்கவும் உதவும்.

வெண்டைக்காய் (Okra): வெப்பமண்டல காலநிலைக்கு மிகவும் உகந்த காய்கறி செடி இது.

காராமணி (Cowpeas): கோடையில் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் மற்றும் வெப்பத்திலும் பலன் தரும்.

3.அலங்காரச் செடிகள் (Ornamental Plants)

பாம்புச் செடி (Snake Plant): இது வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கி ஆக்சிஜனை அதிகமாக வெளியிடும்.

அகாவே (Agave): இது கற்றாழை போன்ற தோற்றம் கொண்டது. இதன் இலைகள் தடிமனாக இருப்பதால் நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும், இதனால் வறட்சியை எளிதில் தாங்கும்.

பராமரித்தல்: அதிகாலையில் அல்லது மாலையில் சூரியன் மறைந்த பிறகு நீர் பாய்ச்சுவது சிறந்தது. செடிகளின் வேர் பகுதியில் காய்ந்த இலைகள் அல்லது தேங்காய் நார்களைப் போடுவதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட்போனை ஓரம் தள்ளுங்கள்... கோடை விடுமுறையை 'ஸ்மார்ட்' ஆக கொண்டாடுங்கள்!
summer-gardening-tips

வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக நாம் பசுமையைக் கைவிட வேண்டிய அவசியமில்லை. நம் ஊர் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உள்நாட்டுத் தாவரங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பதன் மூலம், கோடையிலும் ஒரு குளிர்ந்த சூழலை நம்மைச் சுற்றி உருவாக்க முடியும். முறையான நீர் மேலாண்மை மற்றும் சரியான தாவரத் தேர்வுகள் இருந்தால், அக்னி நட்சத்திர காலத்திலும் நம் தோட்டம் வாடாமல் செழித்திருக்கும். “மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” என்பதற்கு இணங்க, இந்த கோடையில் குறைந்தது ஒரு வெப்பம் தாங்கும் செடியையாவது நட்டு இயற்கையைப் பாதுகாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com