'வெடலப் புள்ள' Vs. பெற்றோர்கள்: பெற்றோர்களே உஷார்! உங்கள் டீனேஜ் பிள்ளைகளுடன் மோதல் வேண்டாம்!

parents vs Teenage children
Teenage children
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

விடலைப் பருவத்தினருடன் மோதும் பெற்றோர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்!

"வெடலப் புள்ள நேசத்துக்கு

செவத்த புள்ள பாசத்துக்கு

அழகர் மலக் காத்து வந்து

தூது சொல்லாதோ”

என்று பெரிய மருது திரைப்படத்திற்கு வாலி எழுதிய பாடலிலும்,

“வெட்டி வேரு வாசம்…

வெடல புள்ள நேசம்…

பூவுக்கு வாசம் உண்டு…

பூமிக்கும் வாசம் உண்டு…”

என்று ‘முதல் மரியாதை’ திரைப்படத்திற்கு வைரமுத்து எழுதிய பாடலிலும் இடம் பெற்றிருக்கும் ‘வெடலப் புள்ள’ என்பதற்கான பொருள் உங்களுக்குத் தெரியுமா?

வெடலப் புள்ள என்பது விடலைப் பருவம் என்று அழைக்கப்படும் வளரிளம் பருவத்துப் பெண்களை வட்டார மொழி வழக்கில் குறிக்கும் சொல்லாகும். இதேப் போன்று வளரிளம் பருவத்து ஆண்களை வட்டார மொழி வழக்கில் 'வெடலப் பசங்க' என்று சொல்கின்றனர்.

மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டத்திலிருக்கும் பருவத்தை விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்கின்றனர். இப்பருவத்துக்கான வயதெல்லை என்பது ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை.. அந்தந்தச் சமூகப் பண்பாடுகளுக்கேற்றபடி அமைகிறது.

பல காலங்களாக, பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி, விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மருவத்துவ அடிப்படையில் விடலைப் பருவமானது, 10 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட காலம் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவக் காலத்தில் ஆண்களிடம் உயரம், எடை அதிகாிக்கும், தசைகள் வலுவடையும், தோள்கள் அகன்று காணப்படும், எண்ணெய் சுரப்பு அதிகம் ஆவதால் பருக்களும், சிறுகட்டிகளும் தோன்றும். வியர்வை மற்றும் உடல் நாற்றம் அதிகாிக்கும்., சோா்வு அதிகமாகக் காணப்படும். இனப்பெருக்க உறுப்புகள் (விந்தகம்) வளா்ச்சியடையும். குரல்வளை அகன்று குரல் சிறிது கடினமாக மாறும் என்று சொல்கின்றனர்.

இதேப் போன்று பெண்களிடம் உயரம், எடை அதிகாிக்கும், இடுப்பு பொிதாகி உடல் நெளிவு சுளிவுடன் கூடிய வடிவத்தைப் பெறும், எண்ணெய் சுரப்பு அதிகம் ஆவதால் பருக்கள் தோன்றும். வியர்வை மற்றும் உடல் நாற்றம் அதிகாிக்கும். சோா்வு அதிகமாகக் காணப்படும். இனப்பெருக்க உறுப்புகள் (அண்டகம்) வளா்ச்சியடையும். குரல் மென்மையாக மாறும், மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கும், மார்பகம் வளர்ச்சியுறும் என்று சொல்கின்றனர்.

சமூகவியலில், விடலைப் பருவம் என்பது, ஒரு பண்பாட்டுத் தோற்றப்பாடாகவே இருக்கிறது. இதனால் இதன் தொடக்கமும் முடிவும் உடல் ரீதியான எல்லைகளுடன் தொடர்புபடுத்தப்படுவது கடினமாக இருக்கிறது. இப்பருவம் சிறுவர் வளர்ந்தவர்களாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம்மாற்றம், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் சார்பான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் உயிரியல் மாற்றங்களும், உளவியல் மாற்றங்களுமே இலகுவாக அளவிடப்படக் கூடியவையாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஓடவே தெரியாத 5 உயிரினங்கள்: ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!
parents vs Teenage children

விடலைப் பருவத்து ஆண், பெண்களிடம் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களால், அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் குழந்தைப் பருவச் செயல்பாடுகளைக் கடந்ததாக இருக்கின்றன. மேலும், விடலைப் பருவத்தினர் பொருளாதாரத் தேவைகளுக்குப் பெற்றோர்களைச் சார்ந்திருப்பதால், அவர்களது செயல்பாடுகளுக்குப் பெரும் தடைகள் ஏற்படுகின்றன.

பெற்றோர்கள், விடலைப் பருவத்தினர்களைக் குழந்தைகளைப் போலவே எண்ணி அவர்களது செயல்பாடுகள் அனைத்தையும் கண்டிக்கின்றனர். இதனால், பெற்றோர்கள் தங்களது விடலைப் பருவ மகள் அல்லது மகனைச் சமாளிக்க முடியாமல் விரக்தியடைந்து மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். விடலைப் பருவத்தினருக்கும் பெற்றோர்களுக்கிடையே நடைபெறும் இப்போராட்டம் குடும்பத்தின் அமைதியையும் சீர்குலைக்கிறது.

இந்நிலையில், பெற்றோர்கள் விடலைப் பருவத்தினர்களுக்கு ஏற்ற வகையில் கண்டிப்புகளாக இல்லாமல், அன்புடன் கூடிய அறிவுரைகளை வழங்கி அவர்களுடன் இணைந்து செயலாற்றினால் நல்லது.

இதையும் படியுங்கள்:
பணத்தை ஈர்க்கும் மேஜிக் செடி: உங்க வீட்ல இருக்கா?
parents vs Teenage children
logo
Kalki Online
kalkionline.com