"நான் பலவீனமானவனா?" - உங்களை அறியாமலேயே பலவீனப்படுத்தும் 6 பழக்கங்கள்!

Weak man
Weak man
Published on

உங்களை யாராவது அடிக்கடி பலவீனமாக பார்த்தால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையைப் பாதிக்கலாம். இதற்கு உங்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நீங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் தான் காரணம்.

சில நடத்தைகள், உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை பலவீனமானவராகவோ அல்லது தன்னம்பிக்கை இல்லாதவராகவோ சித்தரிக்கக்கூடும். அந்தப் பழக்க வழக்கங்களை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து விடை பெற்றால் தான் உங்களை அடுத்தவர்கள் பலவீனத்தோடு பார்க்க மாட்டார்கள். மாற்றப் படவேண்டிய பழக்க வழக்கங்களை பார்க்கலாம்.

1. அதிகமாக மன்னிப்பு கேட்பது:

நாம் அனைவரும் தவறு செய்கிறோம், உரிய நேரத்தில் மன்னிப்பு கேட்பது நல்ல பழக்கமாகும். இருப்பினும், மன்னிப்பு கேட்பதற்கும் அதிகமாக மன்னிப்பு கேட்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் தவறு செய்யாமலேயே அல்லது அறியாமல் செய்திருந்தாலும், ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பலமுறை மன்னிப்பு கேட்கும் போது அடுத்தவர்களுக்கு நீங்கள் பலவீனமாகத் தோன்றலாம்.

தன்னம்பிக்கை இல்லாமை அல்லது பயத்தின் காரணமாக சில பேர் இவ்வாறு பலமுறை மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பேற்பது முக்கியம். ஆனால், எல்லாமே உங்கள் தவறு அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள். உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது பரவாயில்லை, ஆனால் அதிகமாக மன்னிப்பு கேட்டால் அது உங்களை ஒரு பலவீனமான நபராக சித்தரிக்கும்.

இந்தப் பழக்கத்தை மாற்றி கொண்டால், நீங்கள் மற்றவர்களின் முன்னிலையில் உறுதியானவராகவும் தன்னம்பிக்கை கொண்டவராகவும் இருக்க முடியும்.

2. 'இல்லை' அல்லது ‘முடியாது’ என்று சொல்ல போராடுதல்:

சில பேருக்கு யாராவது பண உதவியோ அல்லது வேற உதவியோ கேட்டால் முடியாது என்றோ அல்லது இல்லை என்றோ சொல்ல வாய் வராது. தனக்கு இயலாது என்பதை சொல்ல மிகவும் தயங்குவார்கள். உதாரணத்திற்கு factory ல் இரண்டு ஷிப்ட் சேர்ந்து செய் என்று யாராவது எப்போதாவது வற்புறுத்தினால் நீங்கள் முடியாது என்று சொல்ல முடியாமல் செய்தால் பரவாயில்லை.

ஆனால், மற்றவர்கள் அடிக்கடி சொன்னால் நீங்கள் கண்டிப்பாக மறுத்தே தீர வேண்டும். இல்லை என்றால் உங்களின் மேல் low look வந்துவிடும். எப்போதும் உங்களையே வற்புறுத்துவார்கள். அவசர தேவைக்கு இல்லை அல்லது முடியாது என்று சொல்லாதீர்கள். ஆனால், எங்கு சொல்ல வேண்டுமோ அந்த இடத்தில் தைரியமாக முடியாது என்றோ அல்லது இல்லை என்றோ சொல்வதற்கு தயங்காதீர்கள்.

3. மோதலைத் தவிர்ப்பது:

மோதல்கள் சங்கடமானவை, அதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது தீர்வாகாது. நீங்கள் தொடர்ந்து மோதலைத் தவிர்க்கும்போது, உங்களை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளவோ அல்லது உங்கள் நம்பிக்கைகளுக்காக நிற்கவோ உங்களுக்கு தைரியம் இல்லாதது போல் தோன்றலாம். இது மற்றவர்கள் உங்களை குறைத்து மதிப்பிடவோ அல்லது உங்களை பலவீனமாகப் பார்க்கவோ வழிவகுக்கும்.

தேவையற்ற வாக்குவாதங்களைத் தொடங்க வேண்டுமோ அல்லது ஆக்ரோஷமாக இருக்க வேண்டுமோ என்று நான் கூறவில்லை. ஆனால், உங்கள் எண்ணங்களை அமைதியான, மரியாதைக்குரிய முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஆகவே எங்கு மோத வேண்டுமோ அங்கு நிதனமாக அமைதியாக உங்களின் கருத்துகளை கூறுங்கள். இல்லை என்றால் மற்றவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள் மேலும் அவர்கள் தவறுகளை தைரியமாக மேலும் மேலும் செய்வார்கள்.

4. தனிப்பட்ட எல்லைகளை நிர்ணயிக்காமல் இருப்பது:

எல்லைகள் மிகவும் அவசியம். அவை நாம் எதில் வசதியாக இருக்கிறோம், மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த அனுமதிக்கிறோம் என்பதை வரையறுக்கின்றன. எல்லைகளை நிர்ணயிப்பது உங்களை அணுக முடியாதவராகவோ அல்லது மோசமானவராகவோ ஆக்குவதற்காக அல்ல. மாறாக அது, உங்கள் சொந்த மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. இது சுயமரியாதை மற்றும் வலிமையின் தெளிவான குறிகாட்டியாகும்.

நீங்கள் உங்கள் எல்லைகளைச் செயல்படுத்தத் தொடங்கியதும், மற்றவர்கள் உங்களைப் பார்க்கும் விதத்தில் ஒரு மாற்றத்தைக் காண்பீர்கள். நீங்களே உங்களிடத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் காண்பீர்கள்.

இதையும் படியுங்கள்:
எந்த வயதிலும் சுறுசுறுப்பான மூளைக்கு... நீங்கள் செய்ய வேண்டியவை!
Weak man

5. எப்போதும் ஒப்புதலை எதிர்பார்ப்பது:

மற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது உங்களைப் பெருமையாக உணர வைக்கும். ஆனால், தொடர்ந்து அதை எதிர்பார்க்கும் போது அது உங்களை பலவீனமானவராகவோ அல்லது தேவையுள்ளவராகவோ காட்டக்கூடும்.

நீங்கள் எப்போதும் மற்றவர்களின் ஒப்புதலைத் தேடும்போது, அது உங்கள் சொந்த முடிவுகள் அல்லது திறன்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் குறிக்கிறது. இது நீங்கள் எப்போதும் அடுத்தவர்களை சார்ந்து இருப்பவராகவும் நிச்சயமற்றவராகவும் இருப்பதாக எடுத்து காட்டுகிறது. இதனால் மற்றவர்களின் முன்னால் உங்கள் பலம் குறைவாக தெரியும்.

உங்களின் மதிப்பையோ அல்லது உங்கள் தேர்வுகளையோ சரிபார்க்க வேறொருவரின் ஒப்புதல் உங்களுக்குத் தேவையில்லை என்பதை நினைவில் வைத்து கொள்வது மிக மிக அவசியம். உங்கள் சொந்த தீர்ப்பை நம்பி நீங்கள் உங்களுடைய முடிவுகளுக்குக் கீழ்ப்படிவது தன்னம்பிக்கையையும் வலிமையையும் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
தூய்மையான மனங்களில் தேவையில்லாத குப்பைகள் எதற்கு?
Weak man

6. சுய பராமரிப்பை புறக்கணித்தல்:

சுய பராமரிப்பு என்பது ஆடம்பரம் அல்ல, அது ஒரு தேவை. உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளத் தவறினால், அது சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இது உங்களை பலவீனமாகக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் உங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கும்.

சுய பராமரிப்புக்காக நேரம் ஒதுக்குவது, உங்கள் சொந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அளவுக்கு உங்களை நீங்களே மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. இது மற்றவர்களின் பார்வையில் உங்களை வலிமையானவராகவும் நம்பிக்கையுடனும் காட்டும். உங்களை நீங்களை கவனித்துக் கொள்வது என்பது ஒரு வலிமையான, மிகவும் உறுதியான நபராகக் கருதப்படுவதற்கான முதல் படியாகும்.

இந்த ஆறு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் உங்களை யாரும் பலவீனமாகவோ அல்லது குறை மதிப்பீட்டோ பார்க்க மாட்டார்கள். மேலும் உங்களின் தன்னம்பிக்கையும் மன வலிமையும் பெருகும்.

இதையும் படியுங்கள்:
உண்மையாய் வாழ்ந்துதான் பார்ப்போமே!
Weak man

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com