இந்தியாவில் 20 வயதில் கோடீஸ்வரர் ஆக இதை மட்டும்...

Rich Man
Rich Man
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

இளம் வயதில் (20-30 வயது) செல்வம் சேர்ப்பது கனவு மட்டுமல்ல. சரியான திட்டமிடல், நிதி கட்டுப்பாடு மற்றும் முதலீட்டு அறிவால் அது நனவாக்க முடியும். இந்தியாவில் இன்று டிஜிட்டல் வாய்ப்புகள், ஸ்டார்ட்அப்கள், ஃப்ரீலான்சிங், பங்கு சந்தை மற்றும் தொழில் வளர்ச்சிகள் காரணமாக இளம் தலைமுறைக்கும் செல்வம் சேர்க்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.

கல்யாணத்துக்கு முன்னால் வீட்டில் இருப்பவர்கள் சம்பாதிப்பதால் பணப் பிரச்சினை நமக்கு தெரியவராது. ஆனால் தமக்கென்று ஒரு குடும்பம் வந்த பிறகு வருட வருமானத்தை கணக்கிட்டு 25 ஆக பெருக்கிக் கொண்டே வரும் போது 30 வயதிற்குள் பெரிய தொகையை அடைந்து விடலாம். இவ்வாறு நாம் செய்வதால் பாதி தொகையை செலவு செய்து விட்டு மீதியை நாம் சேமிக்கும் போது பணப் பிரச்சினை நம் வாழ்க்கையில் இருக்காது. அதனால் நமக்கு பிடித்தது போல் சாதனங்கள் வாங்கலாம். பல இடங்களை சுற்றி பார்க்கலாம்.

சுதந்திரமாக ஏதாவது பெரிய தொழிலில் ஆர்வம் இருந்தால் அதில் முழுமையாக செயல்படலாம். நிறைய பணத்தை பெற்ற பிறகு பணத்துக்காக வேலை செய்யாமல் நம் தனிப்பட்ட குறிகோளுக்காக வேலை செய்யலாம். அல்லது பிடித்த செயல்களை செய்து சுதந்திரமாக இருக்கலாம். இதுவே பொருளாதார ரீதியாக நமக்கு கிடைக்கும் நன்மை ஆகும்.

1. வருமானத்தின் அளவைக் கூட்டுதல்: முக்கிய வேலையுடன் பக்க வேலை தொடங்க வேண்டும். ஃப்ரீலான்சிங் (Freelancing), ஆன்லைன் கற்றல் அல்லது YouTube / Blogging வழியாக வருமானம் உருவாக்கலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங், கோடிங், டிசைனிங் போன்ற திறன்களில் நிபுணத்துவம் பெறுதல்.

2. சொத்துகளை அல்ல, வருமானத்தை முதலீடு செய்தல்: சம்பளம் கிடைத்தவுடன் குறைந்தது 20–30% சேமிப்பு / முதலீட்டுக்கு ஒதுக்குதல். பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் தொடங்குதல். நீண்டகாலம் (10–15 ஆண்டுகள்) வைத்திருக்கும்போது சேர்க்கை வட்டி பெரும் செல்வம் உருவாக்கும்.

3. அவசர நிதி மற்றும் கடன் கட்டுப்பாடு: அவசரத்துக்காக குறைந்தது 6 மாத செலவுக்குத் தகுந்த நிதி வைத்திரு. கிரெடிட் கார்டு கடன், தனிப்பட்ட கடன் போன்றவற்றை தவிர்க்கவும். வட்டி செலுத்துவதற்குப் பதிலாக அதைப் பெறும் நிலைக்கு மாறும் நோக்கத்துடன் இருக்கவும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கான 3 மந்திரங்கள்!
Rich Man

4. செலவுகளை கணக்குடன் நிர்வகித்தல்: வருமானம் அதிகமாக இருந்தாலும் அவசியமில்லாத செலவுகளை கட்டுப்படுத்து. 'நான் சம்பாதிப்பது விட, சேமிப்பது எவ்வளவு?' என்ற கேள்வியை அடிக்கடி கேட்க வேண்டும்.

5. தொடர்ந்து கற்றுக்கொள்: நிதி புத்தகங்கள், பங்கு சந்தை, முதலீடு, வணிகம் போன்றவற்றில் அறிவு பெற்று திறன்களை தொடர்ந்து மேம்படுத்தினால் அதுவே 'income power'-ஐ உயர்த்தும்.

6. சொந்த தொழில் அல்லது முதலீடு செய்யும் மனப்பான்மை உருவாக்குதல்: 20-களில் ஒரு சிறிய தொழில், ஆன்லைன் பிராண்ட் அல்லது டிஜிட்டல் தயாரிப்பு தொடங்க முயற்சி செய்யலாம். தோல்வி ஏற்பட்டாலும் அது அனுபவம் தரும்; வெற்றி கிடைத்தால் அது செல்வம் தரும்.

இதையும் படியுங்கள்:
இன்றைய சூழலில் குடும்பப் பொறுப்புகள்!
Rich Man

இளம் வயதிலேயே பணத்தை பெறக்கூடிய Fire நம்பரை கற்றுக் கொண்டவர்களின் பொது அறிவு மற்றும் மாதிரி பற்றி பார்க்கலாம்

  1. அவர்களுக்கு வேலை செய்ய எந்தக் கடமையும் இல்லை.

  2. அதிக சம்பளமுள்ள வேலைகளைப் பெறுகின்றனர்.

  3. இளவயதிலேயே பங்குச் சந்தையின் (equity) சக்தியை அறிந்து கொள்கிறார்கள்.

  4. வெளிநாடு செல்லும் எந்த வாய்ப்பையும் தவற விடுவதில்லை.

  5. இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை நடத்துகின்றனர்.

இளமையில் செல்வம் சேர்ப்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல. அது நிதி அறிவு + ஒழுக்கம் + நீண்டகால சிந்தனை என்பவற்றின் கூட்டுத் திறன். நீங்கள் 20 வயதில் ஆரம்பித்தால், 30 வயதுக்குள் நிதி சுதந்திரம் அடையலாம்.

logo
Kalki Online
kalkionline.com