ஆவணி மாத விசேஷங்கள்: எந்தெந்த நாட்களில் என்னென்ன பண்டிகைகள்? முழு விவரம்!

தமிழ் மாதங்களில் ஐந்தாவதாக வரும் ஆவணி மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகளும் அதன் சிறப்புகளையும் விரிவாக பார்க்கலாம் வாங்க...
aavani month events|ஆவணி விசேஷங்கள்
aavani month events|ஆவணி விசேஷங்கள்AI Image
Updated on

தமிழ் மாதங்களில் ஐந்தாவதாக வரும் ஆவணி மாதம் பல முக்கிய விசேஷங்களும் பண்டிகைகளும் நிறைந்த புனித மாதமாகும். குறிப்பாக ஆடி மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுப காரியங்கள் அனைத்தையும் மீண்டும் துவக்கும் மாதமாகும். இம்மாதத்தில் ஆவணி அவட்டம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆவணி மூலம் போன்ற மிக முக்கியமான ஆன்மீக விழாக்கள் வருகின்றன. இந்தாண்டு இன்று (ஆகஸ்ட் 18 ம் தேதி) தொடங்கி, செப்டம்பர் 17-ம்தேதி வரை ஆவணி மாதம் நீடிக்க உள்ளது.

இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் எந்தெந்த விசேஷங்கள் எந்தெந்த நாட்களில் வருகிறது (ஆவணி விசேஷங்கள்) என்பதை தெரிந்துகொள்ளலாம்.

சுபமுகூர்த்த நாட்கள் : ஆகஸ்ட் 23, 30, 31, செப்டம்பர் 7, 13, 17

வரலட்சுமி விரதம் (ஆகஸ்ட் 21): 2026 ஆம் ஆண்டில் வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21 அல்லது ஆகஸ்ட் 28 ஆம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சுமாங்கலி பெண்கள் அன்னை மகாலட்சுமியை மனதார நினைத்து இந்நாளன்று விரதம் இருந்து பூஜிப்பர். இது ஆடி அல்லது ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும்.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்கும், குடும்ப நல்வாழ்வுக்காகவும் மற்றும் செல்வம் பெருகி வாழவும் இந்த நோன்பை ஆவணி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கின்றனர்.

ஆவணி மூலத் திருவிழா (ஆகஸ்ட் 22) : ஆவணி மூலத் திருவிழா என்பது தமிழ் மாதமான ஆவணியில் மூல நட்சத்திர நாளில் சிவபெருமானைக் குறித்தும், மதுரையை ஆண்ட சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்களைப் போற்றியும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பெருவிழா ஆகும். சிவபெருமானின் திருவிளையாடல்கள் தினசரி ஒரு லீலை வீதம் நாடக வடிவில் பக்தர்களுக்கு விளக்கப்படுகின்றன.

மதுரையில் சுந்தரேசுவரர் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலைக் குறிக்கும் விதமாக, ஆவணி மூல நட்சத்திரத்தன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம்

அதேபோல் நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோவிலிலும் இத்திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி ஞாயிறு விரதங்கள்: ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை நினைத்து மேற்கொள்ளப்படும் ஆவணி ஞாயிறு விரதம், உடல் நலம், மன உறுதி, உத்தியோக உயர்வு மற்றும் நீண்ட ஆயுளைத் தரும் சிறப்புமிக்க வழிபாடாகும்.

இந்த நாளில் சூரிய உதயத்தின்போது கிழக்கு நோக்கி சூரியனை வணங்கி, சிவப்பு மலர்கள் மற்றும் கோதுமை தானம் வழங்குவது மிகவும் உகந்தது. உப்பு, எண்ணெய் மற்றும் காரம் இல்லாத எளிய உணவை சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஒருவேளை மட்டும் உட்கொள்ள வேண்டும். அன்றைய தினம் முழுவதும் 'ஆதித்ய ஹ்ருதயம்' அல்லது காயத்ரி மந்திரம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆவணி அவிட்டம் திருநாள்: பூணூலின் உண்மையான மகிமை என்ன?
aavani month events|ஆவணி விசேஷங்கள்

ஓணம் பண்டிகை (ஆகஸ்ட் 26): மலையாள மாதமான சிங்கம் (ஆவணி) மாதத்தில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் கொண்டாடப்படும் பாரம்பரிய அறுவடைத் திருவிழாதான் ஓணம் பண்டிகை ஆகும்.

இது நீதியான அரசன் மகாபலி தன் மக்களைப் பார்க்க ஆண்டுதோறும் செவ்வாய் முறையே வந்து செல்வதாக நம்பப்படும் புராண நிகழ்வையும், மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தையும் நினைவுகூர்கிறது. இந்தாண்டு ஓணம் பண்டிகை, ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 26 வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் திருவோண நாளான ஆகஸ்ட் 26 அன்று மிகப்பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) (செப்டம்பர் 4) : கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) என்பது மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளை கொண்டாடும் இந்துக்களின் முக்கியப் பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் நன்னாளில் நள்ளிரவில் இக்கொண்டாட்டம் சிறப்பிக்கப்படுகிறது. இல்லங்களில் கிருஷ்ணரின் கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, வெண்ணெய், அவல் மற்றும் பழங்கள் பிரசாதமாகப் படைத்து வழிபாடுகள் நடக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆவணி மாத சிறப்புகள்...
aavani month events|ஆவணி விசேஷங்கள்

கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக ஐதீகம் என்பதால், இரவு நேரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுவர்.

விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 14) : தடைகளை நீக்கும் முழுமுதற்கடவுளான விநாயக பெருமான் அவதரித்த சதுர்த்தி திதி ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் களிமண் விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து மலர்கள் மற்றும் அருகம்புல் கொண்டு பூஜிப்பர். கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபடுவர். பூஜிக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வழிபாடு நிறைவுபெறும்.

ஆவணி அவிட்டம் (உபகர்மா) (ஆகஸ்ட் 27) : ஆவணி மாத பௌர்ணமி நாளில் காயத்ரி ஜபமும், பூணூல் அணியும் நிகழ்வும் சிறப்பாகக் கடைபிடிக்கப்படுகிறது. ஆவணி அவிட்டம் என்பது உபநயனம் செய்து கொண்ட பிராமணர், விஸ்வகர்மா மற்றும் செட்டியார் சமூகத்தினரால் ஆவணி மாதத்தில் பௌர்ணமி மற்றும் அவிட்ட நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் புனித சடங்கு ஆகும்.

இதையும் படியுங்கள்:
ஆவணி மாதத்தில் இந்த விஷயங்களை செய்தால் நீங்கள் நினைத்தது உடனே நடக்கும்!
aavani month events|ஆவணி விசேஷங்கள்

இந்நாளில் பழைய பூணூலைத் துறந்து புதிய பூணூல் அணியும் வழக்கம் மற்றும் வேதங்களை படிக்கத் தொடங்கும் தொடக்க நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com