ஏழு வகை பிறப்புகளும் அவற்றின் குணநலன்களும்!

The characteristics of seven types of birth
The characteristics of seven types of birth
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on

புராணங்கள், ஏழு வகைப் பிறப்புகள் எவையெவை என்பன பற்றியும், அவை மனிதராகப் பிறந்தால் அவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும் என்றும் ‘பரிபூரணம் 1200’ல் அகத்தியர் கூறும் தகவல்களைக் காண்போம். உயிர்களின் நல்வினை, தீவினை முடியும் வரை அவர்களின் வினைக்கேற்ப தேவர்களாக, மனிதர்களாக, மிருகங்களாக, பறவைகளாக, நீரில் வாழ்வனவாக, ஊர்வனவாக, தாவரங்களாகப் பிறப்பு எடுப்பார்கள்.

மேலே கூறிய ஒழுங்கின்படிதான் உயிர்கள் பிறப்பு எடுப்பார்கள் என்று கூற முடியாது. அவர்களின் வினைக்கேற்ப எந்த ஒழுங்கு முறையிலும் உயிர்கள் பிறப்பு எடுக்கும்.

தேவர்களும் மனிதராவர், மனிதர்களும் மனிதராவர், மிருகங்களும் மனிதராவர், பறவைகளும் மனிதராவர், நீர் வாழ்வனவும் மனிதராவர், ஊர்வனவும் மனிதராவர், தாவரங்களும் மனிதராவர். இந்த மனிதப் பிறப்பிற்கு முன்னர் எடுத்த பிறப்பிற்கேற்ப மனிதர்களின் குண நலன்கள் மாறுபடும்.

இதையும் படியுங்கள்:
ஆண்கள் அணியும் உள்ளாடைகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
The characteristics of seven types of birth

தேவர்கள் மனிதராகப் பிறந்தால் எப்போதும் சிவபெருமானையும் சக்தியையும் வணங்குவார்கள். தான, தர்மங்கள் செய்வார்கள். குருவைப் போற்றுவார்கள்.

மனிதர்கள் மனிதராகப் பிறந்தால் தவம் செய்வார்கள். தான் என்ற அகங்காரம் இல்லாமல் நல்லோரிடமும் பெரியோரிடமும் அன்பாக, பண்பாக நடப்பார்கள். அறுசுவை உணவுகளை வழங்குவார்கள்.

மிருகங்கள் மனிதராகப் பிறந்தால் முரண்பட்டுச் சண்டை செய்வார்கள். தான தர்மம் செய்யாமல் பேய் போல் திரிந்து அலைவார்கள்.

பறவைகள் மனிதராகப் பிறந்தால் பசிக்கிறது என்று கேட்டாலும் உணவு கொடுக்க மாட்டார்கள். நல்ல சொற்களைக் கேட்க மாட்டார்கள். நன்மை செய்ய மாட்டார்கள். எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
வெற்றிகரமான வாழ்க்கைக்கு தவிர்க்க வேண்டிய 6 குணங்கள்!
The characteristics of seven types of birth

நீரில் வாழ்வன மனிதராகப் பிறந்தால் தெரு தெருவாய் சுற்றித் திரிவார்கள். சண்டை செய்வார்கள். கொலை, களவு, சதி செய்வார்கள். குருவை, பெரியோரை மதிக்க மாட்டார்கள்.

ஊர்வன மனிதராகப் பிறந்தால் கடவுளை நம்ப மாட்டார்கள். புத்தி கெட்டு உழன்று பரிதவித்துத் திரிவார்கள். நல்ல வாசகங்களைக் கேட்கவோ பேசவோ மாட்டார்கள். நன்மை செய்ய மாட்டார்கள்.

தாவரங்கள் மனிதராகப் பிறந்தால் இன்பமானவற்றை செவி கொடுத்துக் கேட்க மாட்டார்கள். இன்ப. துன்பங்களை அறிய மாட்டார்கள். சிவபெருமானையும் சக்தியையும் வழிபட மாட்டார்கள். வேடமிட்டுப் பொய் பேசுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com