Geethai Upadesam
Geethai Upadesam

வாழ்வியலின் வழிகாட்டியாக செயல்படும் பகவத் கீதை!

Published on

ன்மிக இலக்கியங்களில் மிக உயர்ந்த இடம் பெற்றிருப்பது பகவத் கீதை. இது வெறும் ஒரு மத நூல் அல்ல; வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்வது, ஒவ்வொரு சோதனையையும் எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி அளிக்கும் வாழ்வியல் கையேடு. இந்நூல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு, பல அறிவு ஜீவிகளால் வாழ்வின் வழிகாட்டியாகப் பாராட்டப்படுகிறது.

பகவத் கீதையின் தோற்றம்: பகவத் கீதையில் நாம் முதலில் காண்பது மஹாபாரதத்தில். குருக்ஷேத்திர யுத்தம் தொடங்கவிருக்கும் தருணத்தில், அர்ஜுனன் உறவினர்கள் மீது யுத்தம் செய்ய முடியாது என மன வலிமை இழந்து குழம்புகிறான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு உபதேசித்த 700 சுலோகங்களே பகவத் கீதையாகும். இது 18 அதிகாரங்களைக் கொண்ட ஒரு அறம், கர்மம், ஞானம், பக்தி அடிப்படையிலான வாழ்வியல் நூலாகும்.

இதையும் படியுங்கள்:
சிறுவாபுரி முருகன் சிறப்பு!
Geethai Upadesam

வாழ்க்கையின் தருணங்களில் பகவத் கீதையின் இடம்:

1. மன அமைதிக்கு: மனக்குழப்பம், பயம், விரக்தி, தயக்கம் போன்ற அனைத்து உணர்வுகளுக்கும் தீர்வை பகவத் கீதை தருகிறது. ‘அசோச்யான் அன்வசோச்சஸ்த்வம்’ - நீ துயரப்பட வேண்டியதைப் பற்றி துயரப்படுகிறாய், என்று ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார்.

2. கடமையின் முக்கியத்துவம்: இது ஒரு முக்கியமான பாகம். ‘கர்மண்யேவாதிகாரஸ்தே’ - உனது உரிமை செயலில் மட்டுமே உள்ளது; அதற்கான பலனில் அல்ல. இது இன்றைய வேலைப்பழக்கத்தில் ‘முடிவைப் பற்றிக் கவலைப்படாமல் முழுமையாக முயற்சி செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை ஊக்குவிக்கிறது.

3. வாழ்க்கையின் சமநிலை: ‘சமத்துவம் யோகம் உச்யதே’ - வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அனைத்தையும் சமமாக பார்க்கும் மனப்பாங்குதான் யோகமாகும். இது நம்மை ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனநிறைவுடன் வாழ வைக்கிறது.

4. பயம் இல்லாத நிலை: ‘ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்’ - ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இந்த ஞானம் வாழ்வின் ஏமாற்றங்களுக்கும், மரணச் சிந்தனைக்கும் வலிமையாக எதிர் நிலைக்கச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
குறையாத செல்வம் பெருக்கும் சம்பந்தர் உரைத்த தேவாரப் பதிகம்!
Geethai Upadesam

மாணவர்களுக்கு: தேர்வு, போட்டி, எதிர்பார்ப்பு இவையால் மாணவர்கள் பல சமயம் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பகவத் கீதையின் சிந்தனைகள் முயற்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றுக்கு வழிகாட்டும்.

தொழிலாளர்களுக்கு: வேலை வாய்ப்புகள், நிர்வாக அழுத்தங்கள், எடுக்கும் முடிவுகள் என இவை அனைத்தும் கீதையின் ‘detached involvement’ (பிணைபட்ட, அக்கறையற்ற செயல்பாடு) கொள்கையால் சமாளிக்க முடியும்.

குடும்ப வாழ்க்கையில்: உறவுகள், தகராறுகள், எதிர்பார்ப்புகள் இவையனைத்தையும் சமபாவனையுடன் அணுகுவதற்கு கீதையின் போதனைகள் மிகவும் பயனுள்ளவை.

இதையும் படியுங்கள்:
நம்பிக்கையே பக்தியின் அடித்தளம்!
Geethai Upadesam

பகவத் கீதையின் 4 முக்கிய பாதைகள்:

கர்ம யோகம்: செயல் மூலம் அடையும் ஆன்மிக விடுதலை.

ஞான யோகம்: அறிவின் மூலம் அடையும் விழிப்புணர்வு.

பக்தி யோகம்: இறை பக்தி மூலம் அடையும் இறைநிலை.

தியான யோகம்: மனதை ஒருமுகப்படுத்தி அடையும் உள்ளார்ந்த அமைதி.

இந்த நான்கு வழிகளும் தனித்தனி அல்ல; ஒருவரின் வாழ்க்கையில் அனைத்தும் ஒருசேர கலந்து இருப்பதே முழுமையான ஆன்மிக வழி.

பகவத் கீதையின் பாடம் வாழ்க்கையில் பயன்பாடு, செயலில் அக்கறை, பலனில் பிணைப்பு இல்லாமல் இரு, மன அழுத்தம் குறைதல், நம்பிக்கை மற்றும் தவறுகளிலிருந்து கற்றுக்கொள், ஆற்றல் மற்றும் மன உறுதி, வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள். பகவத் கீதை என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னது என்றாலும், அதில் உள்ள போதனைகள் இன்று கூட பசுமை குன்றாதவை. இதைப் படிப்பதும், புரிந்து கொள்வதும் மட்டுமல்ல; வாழ்க்கையில் நடைமுறையில் பயன்படுத்துவதுதான் உண்மையான ஆன்மிகம். அறிந்துகொள், அணுகுக, அனுபவிக்கவும் எனும் முக்கோணத்தில் பகவத் கீதையை ஒரு வாழ்க்கை நூலாக மாற்றிக்கொள்வோம்.

logo
Kalki Online
kalkionline.com