'முதுமை என்று எதுவும் இல்லை; நோய் என்று எதுவும் இல்லை; இயலாமை என்று எதுவுமில்லை' - பட்டினத்தார் சொன்னது!

Pattinathar
Pattinathar
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on

சாப்பிட்ட உணவு எப்படி மலமானது? உயிரோடுதான் இருந்தேன் எப்படி இறந்தேன்? மலமே உணவாக இருந்ததா? மரணமே வாழ்வாக இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளையா இத்தனைக் கண்கள் வட்டமிட்டன? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற வாழ்வைதானா? இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருக்க வேண்டும்.

காலம் கடந்த ஞானம் பெற்று பலனில்லை. பாயும், நோயும் தவிர யாரும் துணை வரப்போவதில்லை. பிணமானப்பின் வீடும் பணமும் நமதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும்? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கப்போவதில்லை.

மண்ணில் பிறந்த நமக்கு இறந்தபின்னர் மண்ணே சாசுவதம். "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று தழுவிக்கொள்ளும் மண். அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.

மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கின்றன. எந்தப் பறவையும் வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றவோ, விளக்கை அணைக்கவோ கூடாது... கோவிலில்?
Pattinathar

நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.

நான் சம்பாதித்தேன், காப்பாற்றினேன், வீடு கட்டினேன், உதவி செய்தேன், வேலை வாங்கி கொடுத்தேன் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே! 'நான் தான் என் இதயத்தை, என் மூளையை இயக்குகிறேன்' என்று சொல்ல முடியுமா? 'சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து நான் தான் இரத்தத்தில் சேர்க்கிறேன்' என்று சொல்ல முடியுமா? இவைகள் அனைத்தையும் யார் செய்கிறாரோ, இயக்குகிறாரோ அவர் ஒருவனுக்கே 'நான்' என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.

இதையும் படியுங்கள்:
வசந்த காலத்தை வரவேற்கும் சைத்ர நவராத்திரி - முதல் ஐந்து நாட்கள் சுபகாரியங்களை செய்யக்கூடாது... ஏன்?
Pattinathar
logo
Kalki Online
kalkionline.com