இந்த திகில் நிறைந்த 'பேய் சாலை' பக்கம் வண்டியை விட்டுடாதீங்க!

kalhatti-ghat-road-ooty
kalhatti-ghat-road-ooty
Updated on

மலைகளின் ராணியான நீலகிரி மாவட்டத்திற்கு ட்ரிப் செல்வது என்றாலே நம்மில் பலருக்கும் ஒரு தனி உற்சாகம். குளிர்ந்த காற்று, பசுமையான தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை அழகை ரசித்துக்கொண்டே காரிலோ பைக்கிலோ பயணிப்பது அலாதியான சுகம் தரும். ஆனால், மலைப்பாதைகளில் வாகனங்களை ஓட்டுவது நாம் நினைப்பது போல அத்தனை சுலபமான காரியம் கிடையாது. 

அதிலும் குறிப்பாக, ஊட்டியில் இருந்து மசினகுடிக்குச் செல்லும் கல்லட்டி மலைப்பாதை மிகவும் சவாலான ஒரு ரூட் ஆகும். ஆக்‌ஷன் படங்களில் வருவது போன்ற செங்குத்தான வளைவுகளைக் கொண்ட இந்த பாதையில் செல்வது மரண பயத்தைக் காட்டும் ஒரு திகில் அனுபவமாகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு அதிரடியான சாலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம் வாங்க.

பேய் சாலை!

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த மசினகுடி வழியில் சுற்றுலா வாகனங்கள் முதல் உள்ளூர் வாகனங்கள் வரை யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பயணிக்கலாம் என்ற நிலைதான் இருந்தது. சமவெளிப் பகுதிகளில் வண்டிகளை ஓட்டிப் பழகிய வெளியூர் டிரைவர்களுக்கு, இந்த பாதையின் அபாயகரமான செங்குத்து வளைவுகளை எப்படிக் கையாள்வது எனத் தெரிவதில்லை. 

கியர்களை சரியாகப் பயன்படுத்தாமல் பிரேக்கை மட்டும் நம்பி வண்டியை இறக்குவதால், கட்டுப்பாட்டை இழந்து பல கோர விபத்துகள் இங்கே அரங்கேறியுள்ளன. தொடர்ச்சியாக நடந்த இத்தகைய சோக சம்பவங்களால், இந்த பாதையை நீலகிரி மக்கள் பீதியுடன் 'பேய் சாலை' என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

அதிரடி கட்டுப்பாடு!

விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், வேறு வழியின்றி அதிகாரிகள் ஒரு அதிரடியான முடிவை எடுத்தனர். அதன்படி, மலைப்பாதைகளின் நெளிவு சுளிவுகளை நன்கு அறிந்த உள்ளூர் டிரைவர்களுக்கு மட்டுமே இந்த சாலையில் பயணிக்க தற்போது அனுமதி வழங்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
மழை வருமா? பயிர் வாடுமா? பூச்சிகள் தாக்குமா? வழிகாட்டும் வான்வழி வாகனங்கள்!
kalhatti-ghat-road-ooty

வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்கள் இந்த பக்கமே நுழைய முடியாதபடி, காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து தீவிரமான செக்போஸ்ட் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே பெரிய வேகத்தடைகளும், பாதுகாப்பான இரும்புத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. எந்த வளைவில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை ஓட்டுநர்களுக்குத் தெளிவாக உணர்த்தும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் ஏராளமான எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் எடுத்த இந்த கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு, மசினகுடி செல்லும் இந்த பாதையில் நடக்கும் விபத்துகள் பெருமளவு குறைந்துவிட்டன. இப்போது வெளியூர் வாகனங்களின் தொந்தரவு இல்லாததால், நீலகிரி மாவட்ட மக்கள் எந்தவிதமான அச்சத்துக்கும் இடமின்றி தங்களது அன்றாடப் பயணங்களை மிகவும் பாதுகாப்பாக மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:
பைக் சுற்றுலாவுக்காக 10 பைக்குகளை வாங்கிய அஜித்!
kalhatti-ghat-road-ooty

சுற்றுலாவுக்காக ஊட்டிக்குச் செல்பவர்கள், இந்த விதிமுறைகளை மதித்து பாதுகாப்பான மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயணிப்பதே அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. ஒரு காலத்தில் மரண பீதியைக் காட்டிய இந்த பேய் சாலை, இன்று விபத்துகள் இல்லாத ஒரு அமைதியான சாலையாக மாறியிருப்பது உண்மையிலேயே ஒரு நிம்மதியான விஷயம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com