திகில் நிறைந்த இந்தியாவின் 6 ஆபத்தான சுற்றுலா தளங்கள்.. தவறி கூட இங்க போகாதீங்க!

ரம்மியமான இயற்கை அழகுக்கு நடுவே மரண பயத்தை காட்டும் இந்தியாவின் மிகவும் ஆபத்தான மற்றும் திகிலான ஆறு சுற்றுலா தளங்கள் குறித்த முழுமையான தொகுப்பு.
Dangerous tourist places India
Dangerous tourist places India
Updated on

Dangerous tourist places India: சுற்றுலா செல்வது என்றால் நண்பர்கள், குடும்பத்தினருடன் ஜாலியாக நேரத்தை செலவிடத்தான் பலரும் விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு எப்போதுமே ஒரு த்ரில்லான அனுபவத்தை தேடிச் செல்வதில் அலாதி பிரியம் இருக்கும். நமது இந்தியாவில் மனதை மயக்கும் அழகிய இடங்களுக்கு பஞ்சமே இல்லை என்றாலும், உயிரை பணயம் வைத்து செல்லக்கூடிய மிக ஆபத்தான இடங்களும் நிறையவே உள்ளன. 

கொஞ்சம் தைரியம் உள்ளவர்கள் மட்டும் செல்லக்கூடிய, குடும்பத்துடன் செல்வதை தவிர்க்க வேண்டிய இந்தியாவின் சில ஆபத்தான சுற்றுலா தலங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. டுமாஸ் கடற்கரை - குஜராத்!

குஜராத் மாநிலத்தில் அரபிக் கடல் ஓரம் அமைந்துள்ள இந்த டுமாஸ் பீச் (Dumas Beach) பார்ப்பதற்கு மிகவும் அமைதியான ஒரு சாதாரண கடற்கரை போலவே தோற்றமளிக்கும். ஆனால் இதன் பின்னணியில் ஒரு பெரிய திகில் வரலாறு உள்ளது. முந்தைய காலங்களில் இந்த பகுதி இந்துக்களின் மயானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 

இங்குள்ள மணல் கருப்பு நிறத்தில் இருப்பதற்கு அதுவே முக்கிய காரணம் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பகல் நேரத்தில் மட்டுமே இங்கு செல்ல அனுமதி உண்டு. சூரியன் மறைந்த பிறகு இங்கு செல்வதற்கு அரசு கடுமையான தடை விதித்துள்ளது.

2. பாம்பன் பாலம் - தமிழ்நாடு!

நமது தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் (Pamban Bridge) ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு மிகச்சிறந்த வரலாற்று சின்னமாகும். சுமார் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த ரயில் பாலம் கடலுக்கு நடுவே செல்வது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், பயணம் செய்வதற்கு மிக ஆபத்தான ஒன்றாகும். பலத்த காற்று வீசும் நேரங்களில் ரயில் மிக மெதுவாகவே இயக்கப்படும். ஒரு சிறு தவறு நடந்தாலும் மிகப்பெரிய விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.

3. சிஜு குகை - மேகாலயா!

மேகாலயாவில் அமைந்துள்ள இந்த சிஜு (Siju) வௌவால் குகை மிகவும் மர்மங்கள் நிறைந்த ஒரு பகுதியாகும். பூமிக்கு அடியில் சுமார் நான்கு கிலோமீட்டர் ஆழம் வரை இந்த குகை செல்கிறது. இங்குள்ள பல இருட்டான பகுதிகளுக்கு மனிதர்கள் இன்னும் முழுமையாக சென்று ஆராயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
சம்மரில் உங்க ஆரோக்கியத்தை நாசமாக்கும் 6 மோசமான காய்கறிகள் பற்றி உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Dangerous tourist places India

4. குல்தாரா - ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குல்தாரா (Kuldhara) கிராமம் ஒரு காலத்தில் மக்கள் கூட்டத்தால் மிகவும் பரபரப்பாக காணப்பட்ட ஒரு இடமாகும். ஆனால் ஏதோ ஒரு மர்மமான காரணத்தால், அங்கு வாழ்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒரே இரவில் அந்த இடத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு இன்றுவரை அங்கு யாரும் வசிக்கவில்லை.

5. அந்தமான் தீவுகள்!

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகள் (Andaman Islands) இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருந்தாலும், இதன் சில பகுதிகள் மனிதர்களுக்கு எமனாக மாறக்கூடியவை. இங்குள்ள பல தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடுமையான தடை உள்ளது. வெளியாட்களை கண்டால் கோபமடையும் ஆபத்தான பழங்குடியின மக்கள் அங்கு வசிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

6. ஹெமிஸ் தேசிய பூங்கா - லடாக்!

பனிச்சிறுத்தைகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் லடாக்கில் உள்ள ஹெமிஸ் நேஷனல் பார்க் (Hemis National Park) மிகவும் ஆபத்தான ஒரு பனி பிரதேசமாகும். இங்கு குளிர் மைனஸ் இருபது டிகிரி வரை செல்வதால், சாதாரண மனிதர்கள் அங்கு சென்று வருவது உயிரை பணயம் வைக்கும் ஒரு சாகச பயணமாகவே அமையும்.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல நிலவில் பெட்ரோல் பங்க்... 150 கோடி ஆண்டு ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்!
Dangerous tourist places India

இந்த இடங்கள் அனைத்தும் சாகசத்தை விரும்பும் தைரியசாலிகளுக்கு மட்டுமே ஏற்றவை. குடும்பத்தினருடன் பாதுகாப்பாக நேரத்தை செலவிட நினைப்பவர்கள் இந்த திகிலான சுற்றுலா தலங்களை தவிர்ப்பதே மிகவும் நல்லது. எங்கு சென்றாலும் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பயணத்தைத் தொடர்வதே புத்திசாலித்தனமாகும்.

logo
Kalki Online
kalkionline.com