பயணம் ஒரு மனப்பதிவு: நாட்குறிப்பில் உயிர்பெறும் அனுபவங்கள்!

payanam articles
Travel is a mental note
Published on

யணம் என்பது மனிதன் மனதை மாற்றி வளர்த்திடும் ஒரு அற்புத அனுபவம். புது இடங்கள், புதுமையான மக்கள், அந்நிய உணவு, அன்றாட வாழ்வில் காணாத காட்சிகள் இவை அனைத்து நினைவுகளையும் பாதுகாக்கப் பயணிகள் பெரும்பாலும் ஒரு “நாட்குறிப்பு” எழுதுவார்கள். அது ஒரு புத்தகம் அல்ல; அது ஒரு மனப்பதிவு. அது அவர் பயணம் தொடங்கிய முதல் நொடியில் இருந்தே உயிர்பெறும்.

அன்றைய காலையில் எழுந்த உணர்வு, பைகளில் எடுத்துச்செல்லும் பொருட்கள், ரயில் நிலையம் அல்லது விமான நிலையத்தில் தெரியும் கூட்டம் ஒவ்வொன்றும் அட்டவணையின் முதல் பக்கத்தை நிரப்பும்.

புது இடத்தை அடைந்தவுடன், அந்த நிலத்தின் மணம், காற்றின் மிருதுவான உணர்வு, அங்குள்ள மக்களின் முகப் புன்னகைகள், வித்தியாசமான மொழி இவை அனைத்தும் தினக்குறிப்பில் சொற்களாக அல்ல, உணர்வுகளாக பதிவாகும்.

மலைப்பகுதிகளில் பயணம் செய்த பயணி, மேகங்களின் நடுவே நடந்த ஒரு காலை நடைப்பயணத்தை பதிவு செய்வார். கடற்கரையில் அமர்ந்தவர், அலைகள் அடிக்கும் ஒலி கொண்ட அற்புதமான மாலை நேரத்தை எழுதுவார். நகரங்களில் சுற்றித் திரிபவர், ஒளிரும் தெருக்களையும், உணவு மணமும், கலாச்சார கலவைகளையும் பதிவுசெய்வார்.

ஒரு நல்ல நாட்குறிப்பில் வெறும் காட்சிகள் மட்டும் இல்லை; அந்நாளின் மனநிலையும் இருக்கும். மகிழ்ச்சி, ஆச்சரியம், சில சமயம் ஏற்படும் சிறிய சிரமங்கள், பயணத்தின்போது சந்தித்த அந்நியர்கள், அவர்களுடன் நடந்த சுருக்கமான உரையாடல்கள், அவர்கள் பகிர்ந்த ஒரு சிரிப்பு அனைத்தும் இடம் பெறும்.

இரவு முடிவில், ஓர் அமைதியான விடுதியில், ஓர் பயணி தனது நாள்குறிப்பைத் திறந்து அன்று கண்ட அனுபவங்களை மெதுவாக எழுதிக்கொள்வார். அந்தப் பக்கங்கள் ஆண்டுகள் கடந்த பின்னும் வாசித்தால், அந்தப் பயணத்தின் நிமிடங்கள் மனதில் மீண்டும் உயிர்ப்பெடுக்கும்.

ஓர் பயணியின் நாள்குறிப்பு என்பது வெறும் நினைவுப்புத்தகம் அல்ல; அது அவரின் உள்ளார்ந்த வளர்ச்சியின் சான்று. புது அனுபவங்களைத் தாங்கி வரும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பக்கமாக அது திகழ்கிறது. பயணம் முடிந்தாலும், நாள்குறிப்பில் எழுதிய அனுபவங்கள் வாழ்க்கையையே ஒரு பயணமாக பார்க்கச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
இயற்கை காட்டும் வர்ணஜாலம்! – உலகின் தனித்துவமான 6 வண்ண மலைகள்!
payanam articles

பயணத்தின்போது “வழியில் கண்ட வாழ்க்கை”

வாழ்க்கை என்ற பாடத்தை நமக்கு அதிகம் கற்றுத்தருவது வழி. நாம் தினமும் செல்வதற்கான சாலைகளில், தெருக்களில், பேருந்து நிறுத்தங்களில், சந்தைகளில் எங்கே பார்த்தாலும் அனுபவங்களின் நூல் விரிகிறது.

மனிதர்களின் பன்முகம்: வழியில் நடக்கும் மனிதரை கவனித்தால் ஒவ்வொருவரும் தனித்தனியான கதையை கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் அவசரமாக ஓடுவது வாழ்க்கையின் சுமையை; மற்றொருவர் சிரித்துக்கொண்டே நடப்பது சிறு மகிழ்ச்சியை; சாலை ஓரத்தில் அமர்ந்து இருக்கும் முதியவர் காலத்தின் பயணத்தை நினைவுபடுத்துகிறது.

சிறு சம்பவங்கள்–பெரிய பாடங்கள்: ரொட்டி வாங்க பணம் இல்லாமல் நிற்கும் குழந்தைக்கு உதவியாக ஒரு மனிதர் கொடுப்பதைப் பார்க்கும்போது மனிதநேயம் தெரியும்.

போக்குவரத்து நெரிசலில் கூட பொறுமையாக நின்றிருக்கும் ஒருவர், “காத்திருக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்” என சொல்லுகிறார்.

இயற்கையின் அமைதி: சாலையோர மரங்கள், பறவைகளின் குரல், மாலை நேர சூரியன் அனைத்தும் நமக்கு கற்றுத்தருவது “வாழ்க்கை எவ்வளவு வேகமாக இருந்தாலும், அமைதியைத்தேடி நின்றால்தான் நிஜ அழகை காணமுடியும்.”

இதையும் படியுங்கள்:
இயற்கை படிக்கட்டுகள், வற்றாத கிணறு: குஜராத்தின் ரணவவ் குகை அதிசயங்கள்!
payanam articles

சமூகத்தின் நிறம்: விற்பவரின் குரல், பள்ளி குழந்தைகளின் சிரிப்பு, வாகனங்களின் இரைச்சல் இவை அனைத்தும் ஒரு சமூகத்தின் உயிரோட்டம்.

“வழியில் கண்ட வாழ்க்கை” என்பது ஒரு பெரிய பாடசாலை. நாம் நடப்பதற்காகவே ஒரு வழி இல்லை; நாம் கற்க, உணர, மனிதனாக வளர அந்த வழி நம்மை அழைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com