சத்ருஞ்செய மலை: 863 கோயில்கள் கொண்ட புனித மலை! போவது அத்தனை சுலபம் அல்ல!

உலகிலேயே அதிகமான கோயில்களைக் கொண்ட சத்ருஞ்ஜெய மலை. இம்மலையில் எத்தனை கோயில்கள் இருக்கின்றன தெரியுமா?
Satrunjaya Hill, Palitana city of Gujarat
Satrunjaya Hill, Gujarat tourism
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on
deepam strip

இந்தியாவில் குஜராத் மாநிலத்தின், பவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாலிதானா (Palitana) நகரம். இந்நகரத்திலிருந்து 3 கி மீ தொலைவில் சத்ருஞ்ஜெய மலை உள்ளது. இம்மலை சமண சமயத்தவர்களின் முக்கியமான ஐந்து புனிதத் தலங்களில் முதன்மையானதாகும்.

சத்ருஞ்ஜெய (Shatrunjaya) என்பதற்கு மனதின் எதிரிகளை வென்றவர் என்று பொருள். பண்டைய வரலாற்றில் இம்மலையின் பெயர் புண்டரீக மலை என்பதாகும். தீர்த்தங்கரரின் கணாதரர் எனப்படும் தலைமை மாணவரான புண்டரீக சுவாமி என்பவரின் பெயரால் இம்மலை புண்டரீக மலை என அழைக்கப்பட்டது என்று பண்டைய வரலாறு கூறுகிறது. இம்மலையில் பல தீர்த்தங்கரர்களுக்கு அறிவொளி கிடைத்ததால், இம்மலையை சித்த சேத்திரம், சித்தாலயம், முக்தி நிலையம் போன்ற சிறப்புப் பெயர்களாலும் அழைக்கின்றனர்.

சமணர்களின் முதல் தீர்த்தங்கரர், ஆதிநாதர் எனும் ரிசபதேவர், இம்மலையில் அமர்ந்து தியானம் செய்தார் என்பதும், ரிசபதேவர் இம்மலை மீதுதான் தனது சமயப் பரப்புரையை முதன் முதலில் மேற்கொண்டார் என்பதும் சமணர்களின் நம்பிக்கை.

இங்கு சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிசபதேவர் என்ற ஆதிநாதர் கோயில் முதன்மையான கோயிலாக இருக்கிறது. இங்கு ஆதிநாதர் கோயில் உட்பட, சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 863 கோயில்கள் அமைந்திருக்கின்றன. இக்கோயில் தொகுதி அமைந்திருக்கும் மலை 7,288 அடி (2,221 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியை அடைவதற்கு 3,750 கல் படிகளுக்கு மேல் ஏற வேண்டும். இம்மலையின் உச்சியில்தான் ஆதிநாதர் கோயில் அமைந்திருக்கிறது.

சத்ருஞ்சய மலையில் உள்ள பாலிதானா கோயில்கள் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 900 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் முதல் கோயிலைக் கட்டியவர் சமணப் புரவலரான குமார்பால் சோலங்கி என்பவராவார்.

இதையும் படியுங்கள்:
எமனுக்குக் கோவிலா? எமனை வணங்குவார்களா?
Satrunjaya Hill, Palitana city of Gujarat

கி.பி 1311 ஆம் ஆண்டில் துருக்கிய முஸ்லிம் படையெடுப்பாளர்களால் இந்தக் கோயில்கள் அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, துறவி ஜினபிரபாசூரி என்பவர் கோயில்களுக்கு தலைமை தாங்கி, கோயில்களை மீட்டெடுத்தார் என்று வரலாறுகள் சொல்கின்றன.

இம்மலையைப் பார்க்க நாள்தோறும் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இம்மலையில் ஏறுகின்றனர். கார்த்திகை மாதம் முழு நிலவு நாளன்று அதிக அளவிலான சமண சமயத்தினர் இங்குள்ள கோயில்களைத் தரிசித்துச் செல்கின்றனர். சமணர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சத்ருந்ஜெய மலையில் அமைந்திருக்கும் 863 கோயில் தொகுதிகளைக் கண்டு தரிசனம் செய்வதன் மூலம் மோட்சம் கிட்டும் எனக் கருதுகின்றனர். சத்ருஞ்ஜெய மலைக்கு நேமிநாதர் தவிர, மற்ற அனைத்து சமணத் தீர்த்தங்கரர்களும் வருகை புரிந்துள்ளனர் என்கின்றனர்.

ஸ்வேதாம்பர ஜெயின் மூர்த்தி பூஜக அறக்கட்டளைகளில் ஒன்றால் புனித ஸ்தலங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் இம்மலை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன்படி,

  • சத்ருஞ்சய மலையில் யாரும் இரவு தங்க அனுமதிக்கப்படுவதில்லை.

  • மழைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்ள முடியாது.

  • தோல் அல்லது ரோமங்களால் ஆன எதையும் இம்மலைக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

  • பார்வையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்குச் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், இம்மலைக்குச் செல்லும் அனைத்து பார்வையாளர்களும் சூரியன் மறைவதற்கு முன் கீழே இறங்கி விட வேண்டும். அக்டோபர் முதல் ஜூன் வரை மட்டுமே சத்ருஞ்சயாவை அணுக முடியும்.

இதையும் படியுங்கள்:
பகவத் கீதையின் 12 பொன் விதிகள்! உங்க வாழ்க்கைல ஜெயிக்க இது போதும்!
Satrunjaya Hill, Palitana city of Gujarat

பார்வையாளர்கள் நடந்துதான் உச்சியை அடைய வேண்டும் அல்லது டோலி எனும் ஒரு வகையான சுமந்து செல்லும் பல்லக்கில் செல்லலாம். கீழிருந்து நடந்து செல்லும் மக்கள் தங்கள் சக்தியை மீட்டெடுக்க, வழியில் விற்பனைக்குக் கிடைக்கும் தயிரைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

சமணர்களின் புனித மலையான இம்மலை, உலகில் அதிகமான கோயில்களைக் கொண்ட மலை என்கிற பெயரையும் பெற்றிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com