புதிய புத்தர் 'மைத்திரேயர்' எப்போது தோன்றுவார்? அவர் தோற்றத்தை எப்படி அறிவது?

maitreya
maitreya
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

'புத்தர்' என்பது பொதுவாக, புத்த சமயத்தை உருவாக்கிய கௌதம புத்தரையேக் குறிக்கிறது. கௌதம புத்தருக்கு முன்பாகவும் பல புத்தர்கள் தோன்றியிருக்கின்றனர். கௌதம புத்தருடன் சேர்த்து இதுவரை 28 புத்தர்கள் தோன்றியிருக்கின்றனர் என்கிறது புத்த சமயம். அடுத்து, 29 ஆம் புத்தராகத் தோன்றவிருப்பவர் பெயர் ‘மைத்திரேயர்’ (Maitreya) என்கிறது 'மைத்ரேயவியாகரணா' என்ற சமஸ்கிருத நூல்.

மைத்திரேயரின் அவதாரம் நிகழ்ந்தவுடன் உலகில் உள்ள தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களும் இவரை வழிபடுவர் எனக் கூறப்பட்டுள்ளது. மைத்திரேயர் இரு கால்களும் தரையில் படும் வண்ணம் ஆசனத்தில் அமர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையவில்லை என்பதைக் குறிப்பில் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

மேலும், அவர் பிக்ஷுவின் உடைகளுடனோ, அரச உடைகளுடனோ காணப்படுகிறார். அவரை போதிசத்துவராகச் சித்தரிக்கப்படும் பட்சத்தில் அவர் அணிகலன்கள் அணிந்து நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். அவரது கைகளில் தர்மசக்கரத்தை ஏந்தியுள்ளார். காந்தாரச் சிற்பங்களின் மைத்திரேயர், மத்திய ஆசிய அரசக் குடும்பத்தினரைப் போல் சித்தரிக்கப்படுகிறார்.

மைத்திரேயர் தற்சமயம் துஷித உலகில் இருந்து வருகிறார். மேலும், தியானத்தின் மூலம் அவரைத் தொடர்பு கொள்ள இயலும் எனக் கருதப்படுகிறது. கௌதம புத்தரும் கூட பூமியில் அவதரிப்பதற்கு முன் துஷித உலகில் இருந்தார். பொதுவாக போதிசத்துவர்கள், மனித உலகில் புத்தர்களாகத் தோன்றுவதற்கு முன்னர் துஷித உலகத்தில் தங்களுடையத் தோற்றக் காலத்திற்காகக் காத்திருப்பர் எனப்படுகிறது.

மைத்திரேயரின் தோற்றம், இக்காலத்து புத்தரான கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்த பின் நிகழும் எனக் கருதப்படுகிறது. மைத்திரேயரின் தோற்றம் நிகழும் காலக்கட்டத்தில், தர்மம் என்பதே இந்த உலகத்தில் இருந்து முழுவதுமாக மறைந்திருக்கும். மைத்திரேயர் தன் முன் பிறவியில் செய்த அபரிமிதமான நல்ல கர்மங்களின் காரணமாக, இவ்வுலகில் தோன்றிய ஏழே நாட்களில் போதி நிலை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்திரேயரின் தோற்றம் நிகழும் காலக்கட்டத்தை பின்வரும் நிகழ்வுகளால் அறிந்து கொள்ள முடியும்:

1. பெருங்கடல்கள் அனைத்தும் மைத்திரேயர் கடக்கும் அளவுக்கு சுருங்கிப் போகும்.

2. புத்தரின் பிச்சைப் பாத்திரம் துஷித உலகத்துக்குச் செல்லும்.

3. மனிதர்களின் வாழும் காலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைந்து போய் விடும்.

4. கௌதம புத்தரின் மீதம் உள்ள அனைத்து உடற்பாகங்களும், போதி கயை சேகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு விடும்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ சுதர்சனர் வழிபாடு பற்றிய அரிய 10 விஷயங்கள்!
maitreya

5. மைத்திரேயர் அவருடைய போதனைகளால் தர்மசக்கரத்தை மீண்டும் சுழல வைப்பார். மறைந்த தர்மத்தை அறிவுறுத்தி, அனைத்து உயிர்களும் நற்பலன் பெற்றிட வழி வகுப்பார்.

மைத்திரேயர் என்ற சொல், ‘மைத்ரீ’ என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. ‘மைத்ரீ’ என்றால் ‘அன்பு’ என்று பொருள். மைத்திரேயர் குறித்த கருத்துக்கள் முதன் முதலில் சகவத்தி சூத்திரம் என்ற பாளி சூத்திரத்தில் காணப்படுகிறது. தேரவாத பௌத்தத்தினர் நம்பும் ஒரே போதிசத்துவர் மைத்திரேயரே ஆவார். மைத்திரேயரின் தோற்றம், இந்து சமயத்தின் கல்கி அவதாரதத்துடன் ஒத்து இருப்பதைக் கவனிக்கலாம். எனவே, சிலர் மைத்திரேயரின் தோற்றம் கல்கி அவதாரத்தில் இருந்து என்று கருதுகின்றனர்.

சிரிக்கும் புத்தராக சித்தரிக்கப்படும் புடாய் என்ற சீன பௌத்த துறவி மைத்திரேயரின் அம்சமாக மக்களால் கருதப்படுகிறார். வரலாற்றில் பலர் தங்களை மைத்திரேயரின் அவதரங்களாக அறிவித்துக் கொண்டனர். ஆனால், எவரையும் மக்களோ, பௌத்த சங்கமோ அங்கீரிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்:
கிராமத்து கிழவிகளின் சொலவடைகள் - அதன் அர்த்தங்கள்... தெரிஞ்சுக்கலாமே!
maitreya
logo
Kalki Online
kalkionline.com