சிறுவர் சிறுகதை: 'உடனடி உதவி'

ஆபத்தான நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு, ஒரு உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் சுவாரஸ்யமான சிறுகதை இதோ:
சிறுவர் கதை | A boy is administering first aid to grandfather
சிறுவர் கதை | A boy is administering first aid to grandfatherAI Image
Updated on

​மகிழ் மாறன் கிராமத்து அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு துறுதுறுப்பான சிறுவன். அவனுக்குப் பள்ளியில் சொல்லித் தரப்பட்ட முதலுதவி (First Aid) பாடங்களின் மீது எப்போதும் ஒரு தனி ஆர்வம் உண்டு.

​அது ஒரு மே மாதக் கோடைக்காலம். கோடை விடுமுறை என்பதால், மகிழ் மாறன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த மாந்தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தான். வெயில் அதிகமாக இருந்ததால், மாந்தோப்பின் காவலாளி முத்தையா தாத்தா, அங்கிருந்த ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

​திடீரென்று, முத்தையா தாத்தா இருந்த பக்கமிருந்து ஒரு பலத்த முனகல் சத்தம் கேட்டது. விளையாட்டை நிறுத்திவிட்டு மகிழ் மாறனும் அவனது நண்பர்களும் ஓடிச் சென்று பார்த்தனர்.

​அங்கே முத்தையா தாத்தா நெஞ்சைப் பலமாகப் பிடித்துக்கொண்டு, மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் வியர்வையால் நனைந்திருந்தது. வாய் பேச முடியாமல் கண்கள் சொருகின.

​"ஐயோ! தாத்தாவுக்கு என்னாச்சுன்னு தெரியலையே... பயமா இருக்கு, வாங்க ஓடிடலாம்" என்று கத்தினான் ஒரு நண்பன்.

​மற்றொரு சிறுவன், "நான் போய் ஊருக்குள்ள இருக்கிற அவங்க வீட்டுல சொல்லிட்டு வர்றேன்" என்று ஓடப் போனான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை: ஹரிக்கு சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம்!
சிறுவர் கதை | A boy is administering first aid to grandfather

​ஆனால் மகிழ் மாறன் பதற்றமடையவில்லை. அவனுக்குப் பள்ளியில் ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது: "அவசர காலத்தில் பயந்து ஓடுவதோ, தூரப் போய் தகவல் சொல்வதோ நேரத்தை வீணாக்கும். அந்த இடத்திலேயே உடனடியாகச் செய்யும் உதவிதான் ஒரு உயிரைக் காப்பாற்றும்."

​மகிழ் மாறன் உடனடியாகச் செயல்பட்டான்.

​முதலுதவியாக தாத்தாவின் சட்டைப் பொத்தான்களைக் கழற்றிவிட்டு, காற்றோட்டமாக இருக்கச் செய்தான். நண்பர்களைச் சுற்றிலும் நிற்காமல் தள்ளிப் போகச் சொன்னான். தாத்தாவைத் தரையில் நேராகப் படுக்க வைத்தான்.

சிறுவர் கதை | A boy is administering first aid to grandfather
சிறுவர் கதை | A boy is administering first aid to grandfatherAI Image

​உடனடியாக அழைக்க தன் தந்தை அவசரத் தேவைக்காகக் கொடுத்திருந்த சிறிய மொபைல் போனை எடுத்தான். கிராமத்து மருத்துவமனை ஆம்புலன்ஸ் எண்ணான 108-ஐத் தொடர்பு கொண்டான். "மாந்தோப்பு ஆற்றுப் பாலம் பக்கத்துல முத்தையா தாத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து மயங்கிட்டாங்க, சீக்கிரம் வாங்க" என்று பதற்றமில்லாமல் இடத்தைத் துல்லியமாகக் கூறினான்.

​ஆறுதலாக ஆம்புலன்ஸ் வரும் வரை தாத்தாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "தாத்தா பயப்படாதீங்க, வண்டி வந்துட்டே இருக்கு" என்று தைரியம் கூறினான்.

அடுத்த பத்தே நிமிடங்களில் சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. முதலுதவி ஊழியர்கள் தாத்தாவைச் சோதித்துவிட்டு, உடனடியாக ஆக்ஸிஜன் முகமூடி மாட்டி வண்டியில் ஏற்றினர். மகிழ் மாறனும் அவர்களுடனே சென்றான்.

​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சில மணி நேரங்களுக்குப் பிறகு, முத்தையா தாத்தா கண் விழித்தார். அவருக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நளபாகம்…!
சிறுவர் கதை | A boy is administering first aid to grandfather

மருத்துவர் வெளியே வந்து மகிழ் மாறனின் கைகளைப் பற்றிக் கொண்டார். "தம்பி, நீ மட்டும் இன்னைக்குப் பயந்து போய் ஓடியிருந்தாலோ, இல்ல வீட்டுக்குத் தகவல் சொல்லப் போயிருந்தாலோ நேரம் கடந்திருக்கும். சரியான நேரத்துல நீ செஞ்ச அந்த 'உடனடி உதவி'யும், சமயோசிதமான ஆம்புலன்ஸ் அழைப்பும்தான் இந்தத் தாத்தாவோட உயிரைக் காப்பாத்தியிருக்கு. உன்னோட தைரியத்துக்கு என் பாராட்டுக்கள்!" என்றார் பெருமிதத்துடன்.

​விஷயம் கேள்விப்பட்டு ஓடிவந்த ஊர் மக்கள் அனைவரும் மகிழ் மாறனைக் கொண்டாடினார்கள்.

குட்டீஸ்... அபாயக் காலத்தில் பதற்றப்படாமல் உடனடியாகச் செய்யும் சிறிய உதவியும், சரியான திட்டமிடலும் ஒரு மனிதனின் விலமதிப்பற்ற உயிரைக் காக்கும் பேராயுதங்கள் என்பதை நல்லா புரிஞ்சுகிட்டிருப்பீங்களே! நல்லா செயல்படுங்கள். சிறப்படைவீர்கள்! 

logo
Kalki Online
kalkionline.com