

யானை அம்மா யானை
வயிறு மெகா பானை
கால்கள் இல்லை அதன் கால்கள்
திருமலை நாயக்கர் மஹால் தூண்கள்
தந்தங்கள் வீர சிவாஜி வாள்கள்
தோய்க்கிற கல்லாட்டம் தோள்கள்
காதுகள் அரிசி புடைக்கும் முறங்கள்
அதுக்கு இல்லை இரண்டு கரங்கள்
ஒன்று தான் உண்டு அதன் பெயர் துதிக்கை
அதை வெச்சுதான் முடிக்குது பலர் கணக்கை
அவன் வாலு இருக்கே வாலு அது முள்ளு சாட்டை
செய்ய கூடாது அவன் பின்னாடி நின்னு சேட்டை
விட்டு அதனால் ஒரு அடி சும்மா சுழட்டி
கொடுத்துடுவான் கண்ணையும் மூக்கையும் கழட்டி
அஞ்சமாட்டான் மாட்டான் வேங்கை புலிக்கு
ஆனா பய பயந்து சாவான் சுண்டெலிக்கு
உயரம் பத்தடி எடை கிலோ ஏழாயிரம்
பல்லு குத்தும் குச்சி போலிருப்பான் பாகன் கண்ணாயிரம்
கோபமாய் பார்த்தாலே போதும் அவன் ஆனை ஒண்ணுக்கு போயிரும்
தான் எத்தனை பெரிய மிருகம் என்ற ஆனையின் ஆணவம்
அந்த நோஞ்சான் கை அங்குசம் முன்னாடி கரைஞ்சு போயுடும்
தான் படும் அடி உதை அவமானம் யாவையும்
யானை மறக்காது வெச்சிருக்கும் சேத்து ஞாபகம்
ஒரு நாள் எரி மலையாய் கோபம் வெடிக்கும்
குத்தி தந்தத்தால் பாகன் கதை முடிக்கும்
பின்பு வருந்தி தன் செயலுக்கு கண்ணீரும் வடிக்கும்.