பழைய கதை புதிய கதைப் பாடல்

எறும்பும் புறாவும் ஒருவரையொருவர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் போது எப்படி அதிலிருந்து தப்பிக்க உதவுகின்றன என்பதை குறிக்கும் பாடல்.
dove and ant
dove and antimage credit - Buffalo Bill Center of the West, Shutterstock
Published on

-வளர்கவி, கோவை

ஆற்றங் கரையின் ஓரத்தில்

அழகிய வளைந்த கிளையொன்றில்

அமர்ந்திருந்தது ஒரு பறவை

அந்நீரில் மிதந்தது ஓரெறும்பு

எறும்புக்கு நீச்சல் தெரியவில்லை

ஏறிக் கரைவர வழியுமில்லை

மரத்தில் இருந்த பறவைக்கோ

மனமோ மிகவும் மெல்லியதாம்.

பழுத்த இலையைப் பறித்தந்த

பறவை நீரில் துபோட

இலையைப் பற்றி எறும்பதுவும்

ஏறிக் கொண்டதாம் கரைமீது!

இதையும் படியுங்கள்:
கவிதைகள் - மாக்கிரி தவளையும் மிரியான் வண்டும்!
dove and ant

வேடன் ஒருவன் ஒருசமயம்

பறவை அதனைக் கொல்வதற்கு

வில்லை எடுத்துக் குறிவைக்க

வெடுக்கென எறும்பு கடித்ததனால்

விலகிப் போனது அம்பதுவும்

பறவை எறும்பின் பக்கம்வந்து

“பழகி இருவரும் நட்பானோம்.,

பாது காப்போம் நம்முறவை!”

என்றே சொல்ல எறும்பதுவும்

‘ஒன்றை நன்றாய் நீஉணர்வாய்!’

இதையும் படியுங்கள்:
கவிதை: 'காதல்' - பேருலகின் மிகப்பழைய மொழி!
dove and ant

எங்கள் இனமாம் கரையானை

கொத்திக் கொல்லுதே உங்களினம்

செய்த நன்றி மறவாமல்

சென்று புத்தி நீசொல்லு:

வையம் தனிலே எறும்புகட்டு

அல்லல் தராது காத்திடுவோம்

உயிரைக் காத்த உயரெறும்பின்

இனத்தைக் காத்தல் நம்கடமை

வயிறை வளர்க்க வேறுணவை

இதையும் படியுங்கள்:
கவிதை: போற்றப்படும் வாழ்வுக்கு போட்டிகள்தானே புகலிடம்!
dove and ant

வயலில் உண்டு வாழ்ந்திடுவோம்!

என்றே சொல்லச் சொல்லியதாம்

யாவும் நன்றென ஏற்றனவாம்

உதவிய பேரின் உயர்நட்பை

உயிரினும் மேலாய்க் காத்தனவாம்!!

-வளர்கவி, கோவை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com