"மேகராகமே மேளதாளமே தாரா - ராதா"... பாடலில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம் என்ன?

Mega Ragame Mela thalame song
Mega Ragame Mela thalame song
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப் போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கத்தை 'மாலை மாற்று' என்கின்றனர். இதனை இருவழியொக்கும் சொல் என்றும் சொல்வதுண்டு. இதனை ஆங்கிலத்தில், Palindrome என்கின்றனர். இந்த ஆங்கிலச் சொல்லானது, கிரேக்க வேர்ச்சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.

தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும். ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும். ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகரமுதலியில் மாலைமாற்றாகவுள்ள நீண்ட சொல் Tattarrattat என்பதாகும்.

தமிழ் மொழியில் தொடராக, தேரு வருதே, மாடு சாடுமா, மோரு தாருமோ தோடு ஆடுதோ, மேக ராகமே, மேள தாளமே, போன்ற தொடர்கள் மாலைமாற்றாக அமைந்துள்ளன.

ஆங்கிலத்தில், Was it a cat I saw?, Do geese see God?, A Toyota's a Toyota, A nut for a jar of tuna, Madam I am Adam போன்ற தொடர்கள் மாலைமாற்றுகள் ஆகும்.

பொதுவாக, மாலைமாற்றுத் தொடர்களில் வரும் இடைவெளிகள், நிறுத்தக்குறிகள், பேரெழுத்து - சிற்றெழுத்து வேறுபாடு போன்றவை கவனிக்கப்படுவதில்லை.

ஆங்கிலத்தில் Anna, Hannah, Ada, Bob, Eve போன்ற பெயர்கள் மாலைமாற்றுகளாக அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் நிகழ்ச்சி - 'அருணாச்சலத்தின் அலுவல்' நாடக அரங்கேற்றம்
Mega Ragame Mela thalame song

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன. கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.

” யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா”

இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
அப்பாடா! இம்புட்டு நீளமா? இத்தனை தடங்களா?
Mega Ragame Mela thalame song

இந்தப் பாடலின் பொருள்;

யாம் ஆமா - யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா

நீ ஆம் மாமா - நீ பெரிய ஆன்மா, பரமாத்மா

யாழ் ஈ காமா - யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே

காணாகா - இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று

காணாகா - இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று

காழீயா - சீர்காழியானே

மாமாயா நீ - அம்மை அம்மை ஆம் நீ

மாமாயா - (இப்படி) பெரிய மாயமானவனே

இப்படி, மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் பத்துப் பாடல்கள் உள்ளன.

மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணம் ஆகிய தமிழ் இலக்கியங்களிலும் மாலைமாற்றுப் பாக்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
Interview: "என் யதார்த்த நடிப்புக்கு அடித்தளம் மதுரை மாநகரமே!" - குரு சோமசுந்தரம் நெகிழ்ச்சி!
Mega Ragame Mela thalame song

எளிய பாடல் ஒன்று:

“தேரு வருதே மோரு வருமோ

மோரு வருமோ தேரு வருதே”

இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும்

இந்தப் பாடலின் பொருள்:

வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும் போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.

வினோதன் எனும் தமிழ்த்திரைப்படத்தில் இடம் பெற்ற "மேகராகமே மேளதாளமே தாரா-ராதா!" எனும் நீண்ட திரைப்படப்பாடலும் இந்தியாவின் முதலாவது மாலைமாற்றுத் திரைப்படப் பாடல் ஆகும். இதில் ஒவ்வொரு பதத்தையும் திருப்பிப் படிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com